காலமெலாம் வாழும் கண்ணதாசன்!

0

மகாதேவஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

திரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு
பலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே
நிலைநிற்கும் பலகருத்தைச் சுமந்துவந்த அவர்பாட்டு
நெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது!

பட்டினத்தார் தத்துவத்தைப் பலபேரும் அறிவதற்குப்
பலபாட்டில் தந்துநின்ற பாவேந்தன் கண்ணதாசன்
இஷ்டமுடன் தமிழ்தந்தான் எமையென்றும் மகிழ்வித்தான்
கஷ்டம்பல பெற்றிடினும் காலமெலாம் வாழுகிறான்!

கருவிலே கற்பனையைக் காவிவந்த கண்ணதாசன்
உருவிலே கம்பனாய், காளிதாசன் போலானான்
துருவியே தமிழ்கற்றான் துணிவுடனே கவிதந்தான்
அருமைமிகு கண்ணதாசன் அகமெங்கும் வாழுகிறான்!

வேதக்கருத்தை எல்லாம் மிகச்சிறப்பாய்த் தமிழாக்கி
காதினுக்குள் செலுத்துதற்குக் காரணமாய் இருந்தானே
கீதைதனைப் படிப்பதற்கும் பாதைதனை அமைப்பதற்கும்
போதனையாய்ப் பாவெழுதிப் போதித்தான் கண்ணதாசன்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *