பணம் என்பது காகிதத்தாள் தான்!

0

நியாண்டர் செல்வன்

கேரளாவில், முத்தூட் பைனான்ஸ் எனும் தனியார் நிதி நிறுவனத்துக்கு ஒரு ரிப்பேர் வேலை பார்க்க ஒரு எஞ்சினியர் செல்கிறார்.

அந்தச் சமயம் அந்த வங்கியில் ஐந்து கொள்ளையர், துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையடிக்க முயல்கிறார்கள்.

இவர் அவர்களை எதிர்த்துப் போராட-> டிஷ்யூம்….வீர மரணம்.

“அவர் ஒரு வீரர்” எனப் போலிஸ் கமிசனர் பாராட்டுகிறார்..

இதில் வீரம் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.

வீரம் என்பது வள்ளுவர் சொன்னதுபோல் “வினை வலியும், தன் வலியும், மாற்றான் வலியும், துணை வலியும்” எண்ணிச் செய்ய வேண்டிய செயல்.

நாம் என்ன காரியம் செய்யவிருக்கிறோம்? அதைச் செய்து முடிக்கவேண்டிய வலிமை என்ன? எதிரியின் வலிமை என்ன? நமக்குத் துணையாக வருபவர் வலிமை என்ன?-> இதைக் கணக்கிட்டுச் செயல்பட வேண்டும்.

துப்பாக்கியுடன் ஐந்து பேர். எதிரே ஒருவர்… வந்தவர் நோக்கம் பணத்தைக் கொள்ளை அடிப்பது… ஆட்களை கொல்வது இல்லை.

அதிலும் அது இவர் பணமும் இல்லை, நிதி நிறுவனப் பணம். பணம் போனால் சம்பாதித்துக்கொள்ளலாம். உயிர் போனால் என்ன செய்ய முடியும்?

புகழ்மாலைகளைச் சூட்டிவிட்டு போலிஸ் கலைந்துவிடும், நிதி நிறுவனம், இன்சூரன்சு சில லட்சங்களைக் கொடுக்கலாம். அதன்பின் இவரது குடும்பம், தாய், மனைவி, பிள்ளைகள்… வாழ்நாள் முழுக்க இவரை இழந்து வருந்துவார்கள். எத்தனை பணமும், புகழும் அதை ஈடு கட்டாது.

ஒரு பத்து நிமிடம் ஹேன்ட்ஸாப் பொசிசனில் இருந்திருந்தால், இன்று இவர் உயிருடன் இருந்திருப்பார்.

உயிரைப் பொருட்படுத்தாமல் போரிட வேண்டிய சமயங்கள் உண்டு. இன்னொரு உயிரைக் காப்பாற்ற அப்படிப் போரிடலாம்.

நிதி நிறுவனத்தின் பணத்தைக் காப்பாற்ற தன் உயிரை இழக்கவேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

உங்கள் போர்க்களங்களை நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். நினைத்தபோது விட, உயிர் மலிவான பொருள் இல்லை.

பணம் என்பது காகிதத்தாள் தான்……

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *