-முனைவர்.நா.தீபா சரவணன்

மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

நானிங்க சிட்டௌட்டில உட்காந்து பேப்பர் வாசிச்சிட்டிருக்கும் போது எம்மகன் ஹால்ல சோஃபாவில ரிமோட்கன்ட்ரோல கையில வெச்சிட்டு உட்காந்திருந்தான். அவனே வீடியோ லைப்ரரியிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்த ஏதோ ஒரு ஹொரர் படம் வி.சி.பியில் ஓடிக்கொண்டிருந்தது. அவனுக்குப் பிடித்தது ஹொரர் (திகில்) படங்கதான்.

சமீபமா அவன் ஒரு படம் பார்க்க என்னயும் கூப்பிட்டான், அது ரொம்ப நல்லாருக்கும்னு அவனோட நண்பர்கள் சொன்னாங்களாம். சரி  பாக்கலாமேன்னு நானும் முடிவெடுத்தேன்.

அது விசித்திரமான ஏதோ ஒரு நகரத்தில் உள்ள ஹைஸ்கூலைப் பற்றியது. முதல் காட்சில ஒரு ஆசிரியர் பாடம் நடத்தராரு. மாணவர்கள் யாருமே அப்படி ஒருவர் வந்ததாக கண்டுகொள்ளவில்லை. அவங்க பல குழுக்களாகப் பிரிஞ்ச பாராமுகமா இருக்காங்க. ‘குட்மானிங்ஆசிரியர் சத்தமாகச் சொல்றாரு. யாரும் அதைக் கேட்கறதில்ல.

வகுப்பறைல ஒரு மூலைல ஒரு மாணவன் ஒரு மாணவியை பலமாகப் பிடித்து நிறுத்தி முத்தமிடத் தயாராகிக்கொண்டே மற்றொரு கையால் அவளது ஆடையை உயர்த்துகிறான். மாணவிகள் உட்பட நாலைந்து பசங்க அவங்கள சுத்தி நின்னு சத்தம் போட்டு மகிழறாங்க. மற்றொரு பக்கம் ரெண்டு மாணவர்கள் கட்டிப்புடிச்சிட்டும் அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டும் நிக்கறாங்க. அதற்கிடைல ஆசிரியர் மேசைமேல கையடித்து மாணவர்களோட கவனத்தத் திருப்ப பாக்கறாரு.

முன் வரிசைல உட்கார்ந்த மாணவன் அவனுடைய தலைல பாதிமொட்டை அடிச்சிருக்கான், இடுப்பிலிருந்து ஒரு கத்திய உருவி டெஸ்கிலக் குத்தி வைக்கிறான். ஒரு காதில கடுக்கன் மாட்டின வேறொரு மாணவன் அவனுடைய முடியோ ஆந்த்ரே அகாஸினைப் போல. பெஞ்சில் ஏறி நின்று வாத்தியார்க்கு முன்பாக ஜீன்சோட ஜிப்பை தாழ்த்தறான். மொத்தத்தில் மோசமானச் சூழ்நிலை. இருந்தாலும் ஆசிரியர் கையிலுள்ள புத்தகத்தை விரித்தார். அது ஷேக்ஸ்பியரின் நூல். வாசிக்கத் தொடங்கினார். மாணவர்கள் பலரும் குதித்தெழுந்து வாசிப்பதை நிறுத்தக் கூறினார். ஆசிரியர் அதற்கு செவி மடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து சுயிங்கம் அசைத்துக் கொண்டிருந்த மாணவர்கள் அவரை நோக்கி நடந்தாங்க. ஆசிரியர் அவர்களை அவர்களுடைய இடத்தில் போய் உட்காருமாறு ஆக்ரோசமாகக் கூறுகிறார். மாணவர்கள் பின்வாங்கவில்லை

அடுத்தக் காட்சில ஆசிரியர் காயங்களுடன் மூச்சு வாங்க நீளமான வழியில் நகர்கிறார். வாயிலிருந்து இரத்தம் சொட்டுகிறது.

அவர் தலைமையாசிhரியர் அறைக்குக் கடந்து செல்கிறார். புகார் சொல்வதற்காக இருக்கலாம். ஆனால் அங்கே பார்ப்பதோ இருகைகளையும் உயர்த்திக்கொண்டு உதவுவார் யாருமின்றி நிற்கிற தலைமையாசிரியரை இரண்டு மாணவர்கள் அவருடைய கழுத்தில் கத்தி முனையை வைத்து ஊன்றிக் கொண்டு ஏதோ காரியத்தைச் சம்மதிக்க வைக்க முயன்று கொண்டிருந்தனர்.

வெரி இன்ட்ரஸ்டிங்க் இல்ல டாடி?’ என்மகன் கேட்டான் என்ன சொல்றதுன்னு தெரியாம நான் கஷ்டப்பட்டேன். சில நாட்களுக்குப் பிறகு அவன் ஸ்கூல்விட்டு வந்த விதம் ஒரு பாக்ஸிங் போட்டியில் தோல்வியடைந்தவனைப் போல இருந்தது. மூக்கு கிட்டத்தட்ட சதைக்கப் பட்டிருந்தது. முகத்திலும் ஆங்காங்கே இரத்தம் கட்டி இருந்தது. யூனிஃபோம் முழுக்க மண்ணும் சகதியும்

நத்திங் சீரியஸ்பசங்ககிட்ட சண்டைபோட்டேன்அவன் கூறினான்.

அவனோட அடி ஏற்று ஒருத்தன் ஹாஸ்பிட்டல்ல இருக்கான்னு எனக்குத் தெரிஞ்சதே அடுத்தநாள்தான். காலைல நான் ஹெட்மாஸ்டரெ பாக்க பள்ளிக்குப் போனேன். என் மகனோட அனுபவத்த முன்வெச்சு பள்ளில அச்சடக்க நடவடிக்கை மேற்கொள்ளனும்ன்னு நான் சொன்னத முழுக்க அவரு பொறுமையாக் கேட்டாரு. பிறகு சொன்னாருசரிதான், ஆனா உங்க மகன் என்ன செஞ்சானு அவங்கிட்டயே கேளுங்க. அவங்கிட்ட அடிவாங்கி ஒருத்தன் ஹாஸ்பிட்டல்ல இருக்கான்

நான் அவருகிட்ட மண்ணிப்பு கேட்டிட்டு சீக்கிரமா வெளில வந்திட்டேன்.

ஹாய்! ……….கேட்டுக்குப் பக்கத்தில ஒரு சத்தம்

நான் முகத்தை உயர்த்திப் பார்த்தேன்.

என் பையனோட நண்பன்.

இல்லையா?” அவன் கேட்டான்.

இருக்கான்நான் கூறினேன்

அவன் கேட்டைத் திறந்து உள்ளே வந்தான்.

நடந்து வரவில்லை. கால்களில் ஷூக்கள் போலக் கட்டப்பட்ட ரோலர்களில் உருண்டு வந்தான்.

பனிக்கு மேல் ஓடுவது போல் நகர்ந்தான். எம் பக்கத்துல வந்து உள்ளே எட்டிப்பார்த்து அவன் நண்பனைக் கூப்பிட்டான்.

வெயிட்என் மகன் ரிமோட் கன்ட்ரோலை அமர்த்தி சோஃபாவில் போட்டுவிட்டு குதித்து எழுந்ததைப் பார்த்தேன். அவன் நண்பன் ஓரிடத்தில் நிற்காமல் சக்கரங்களைச் சுழற்றி உற்சாகமாக வாசலில் வட்டமிட்டுக் கொண்டிருந்தான். நான் கையில நியூஸ் பேப்பரோட மூழ்கியிருந்தேன். அவன் தானாக சிரித்துக் கொண்டு இலைகளையும் கொம்புகளையும் தொட்டுக் கொண்டு வட்டமிட்டான்.

சில நிமிடங்களில் என் மகன் உள்ளிருந்து வந்தான். அவனும் பாதங்களில் சக்கரங்கள் கட்டியிருந்தான். ஒரு பாலெ நடனம் போல நகர்ந்து வந்து சிட்அவுட்டின் தூண்களைப் பிடித்து கொஞ்சநேரம் நின்றுவிட்டு படிகளிறங்கி முற்றத்தை அடைந்தான்

அதற்குள் அவன் நண்பன் ஒரு வட்டம் முடித்துவிட்டு கைநீட்டி அவனுக்கு நேராக வந்தான்.

அவங்க கை கோர்த்திட்டே கேட்டுக்குப் பக்கத்தில போனாங்க. பிறகு வெளில இறங்கினாங்க.

நான் பார்த்துட்டு உட்கார்ந்திருக்கும்போதே மதில் சுவற்றுக்கு அப்புறம் ரெண்டு தலைகள் அதிவேகமாக நகர்ந்தன.

முனைவர்.நா.தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *