-சேஷாத்ரி பாஸ்கர்.

சார். மன்னிக்கணும் ஒரு முப்பது ரூபாய் கொடுக்க முடியுமா ?

யார் நீங்க , உங்களை எனக்கு தெரியாதே?

எனக்கும் உங்களை தெரியாது , நான் தாம்பரம் போகணும் .எனக்கு ஒர்த்தர் மூவாயிரம் ருபாய் தரனும் பஸ்ல போக காசில்லை .இந்த பக்கம் நீங்க திரும்ப வரும்போது நான் பார்த்து கொடுத்துடறேன் .

சார் உங்க வயசுக்கு நான் வச்சிண்டு இல்லன்னு சொல்றது தப்பு . இந்த அம்பது ரூபாயை வச்சுக்குங்க

எதுக்கு சார் .நான் பாபா கோவில்ல சாப்டாச்சு . முப்பது போதும்

இல்லை சார் .உங்களுக்குத் தர வேண்டியவர் இல்லேன்னா உங்களுக்கு பஸ்ல வர காசு .வேண்டாமா ?

ஏன் சார் இப்படி அபசகுனமாய் சொல்றீங்க என் பணம் . என் உழைப்பு .எனக்கு உங்க பணம் வேணாம் –

அய்யா , நான் நல்ல எண்ணத்துல சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க இந்தாங்க .

கொஞ்சம் வேகமாக வாங்கி கொண்டு காட் ப்ளஸ் யு என்றார்

சிரித்தேன் .

என்ன சார் .

இல்லை சொல்லுங்க .

உங்களை அந்த காட் ப்ளஸ் பண்ணலையே என்றேன்

கொஞ்சம் முறைத்து விட்டு என் பஸ் வருகிறது என்று புறப்பட்டார்.

உள்ளே அமர்ந்து என்னை பார்த்து விட்டு அம்பது ரூபாய் நோட்டோடு கையாட்டினார் .

நான் கை கூப்பினேன்

மாலை என் மகன் என்னிடம் வந்து ஒரு குட் நியூஸ் என்றான்

என்ன என கேட்டேன் .

இல்லை . நீ எப்ப பார்த்தாலும் தானம் பண்ணு , தர்மம் பண்ணுன்னு சொல்வ இல்ல

ஆமாம் . அதுக்கென்ன இப்ப ?

இல்லை . இன்னிக்கு ஒருத்தர் குளத்து கிட்ட என்கிட்டே பத்து ரூபாய் கேட்டார் . பாவமா இருந்தது பா .

என்ன சொன்ன .

என்கிட்டே இருபது ரூபாய் இருந்தது .அப்பிடியே கொடுத்துட்டேன் .

குட் .

என்னப்பா என்னை பாராட்டுவேன்னு நினச்சேன் .

அவர் உன்கிட்ட பணம் வாங்கிண்டு காட் ப்ளஸ் யூன்னு சொன்னாரா ?

காட் . கரெக்ட் . எப்படிப்பா உனக்கு தெரியும் .

கொஞ்சம் கெஸ் பண்ணேன் .

அவருக்கு தரக்கூடாதாபா .

இல்லை.அடுத்த வாட்டி பார்த்தா அவர் கேட்காவிட்டாலும் கொடு என்றேன் .

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காட் ப்ளஸ் யூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *