மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா
 
விழிக்குத் துணையானாய் எங்கள்
மொழிக்கும் துணையானாய்
பழிக்குப் பகையானாய் நாளும்
வழிக்குத் துணையானாய்!
 
அழிக்கும் பகையனைத்தும் நில்லா
நிலைக்குக் களனானாய்!
இமைக்கும் விழியில் என்றும்
இருக்கும் கதிர்வேலா!
 
தந்தைக்குப் பாடமுரைத்தாய் அதனால்
தரணிக்கே குருவானாய்!
சொந்தமுடன் கந்தனென்பார் வாழ்வைச்
சோதனைக்குள் சிக்கவைப்பாய் !
 
உந்தனது சோதனையால் நாளும்
உழலுகின்ற பக்தர்தமை
செந்திருவே கந்தவேளே விரைவில்
சிறப்படையச் செய்திடப்பா!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *