முனைவர் த.ராதிகா லட்சுமி
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,
ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
பொள்ளாச்சி

பூலோக நரகமோ?

நிதம் நிதம் போராட்டம்
கனம் சுமந்து
கட்டளைக்கு அடிபணிந்து
மனத்திற்குள் குமைந்து, குமுறி
பிறர் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து
தம் கருத்துகளை மறைத்து
சுயத்தை இழந்து
தன்மானத்தைத் தொலைத்து
உணர்வுகளைத் தவிர்த்து
வளைந்து, நெகிழ்ந்து, அனுசரித்து, சுகித்துத்
தலைகுனிகிறாள் பெண்
எனினும்
சுயம் நீருக்குள் அமிழ்ந்த பந்தாய்த் தலைதூக்க
நிதம் நிதம் போராட்டம்
இதுதான்
பூலோக நரகமோ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *