இனி எங்கும் செல்ல முடியாது .
ஆணி அடித்த பூமி எல்லா புறமும்
மேலே நீலக்கூரை நாலா பக்கமும்
வந்து வெளியில் வீழ்ந்து விட்டோம்
இல்லாத கரையில் நீச்சல் மட்டும் நிதம் நடக்க
பொல்லாத மனம் பொங்கிப் பொங்கி தினம் வழியும்
தேடி ஒன்றில் லயிக்காமல்
அடுத்தடுத்து ஓடும் ஆட்டமதில்
நிற்பதற்கும் நேரமில்லை – கடக்கவும் முடியவில்லை
என் மூச்சை யாரோ விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நான் சென்னை வாசி . ஆனால் வாசிப்பதில்லை . தொலை காட்சி தான் வாழ்க்கை . படித்தது பட்டம் . எல்லாம் மறந்து விட்டது .
வயது அம்பத்து நான்கு . சு ரவி வாழ்ந்த மயிலை எனக்கு மூச்சு . கிரேசி மோகன் வாழும் மந்தவெளி எனக்கு சிந்து வெளி .
சொந்தமாய் தொழில் . போட்டியான வாழ்க்கை . சிவாஜி பிடிக்கும் . மெல்லிசை மன்னர் என்றால் உயிர் . சுஜாதா எனக்கு பக்கத்து தெரு . பாலகுமாரன் கூப்பிடு தூரத்தில் . மணமானவன் . மனைவி தனியார் நிறுவனத்தில் பணி . விளக்கேற்றுவது நான் தான் ஒரு மகன் . கல்லூரியில் . கர்நாடக சங்கீதம் பயின்று கச்சேரியும் செய்து வருகிறான் .எழுத்து எனக்கு பிடிக்கும் .