மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், அவுஸ்திரேலியா

உண வூட்டும் கையதனை
உதறி நிற்கும் உள்ளங்களே
மன முடைந்து நிற்கின்ற
நிலை யுமக்குத் தெரியலையா
தின மும்மை கண்விழித்து,
கண நேரம் பிரியாமல்
பிணி யனைத்தும் தான்சுமந்த
சுமை தாங்கி நினைவிலையா!

அணி மணிகள் கண்டாலோ
துணி வகைகள் பார்த்தாலோ
வகை வகையாய் வாங்கிவந்து
வடி வாக்கும் மனமல்லவா
இரவு பகல் தெரியாது
எதையும் தனக் காக்காது
நில வுலகில் உமைமட்டும்
நினைத்த மனம் கலங்கலாமா!

கண் இருந்து நீர்வடிந்தால்
புண் ணாகிப் போம்மனது
தண் நீரும் பருகாமல்
தான் உருகும் மனதங்கே
மண் மீது வந்தசெல்வம்
என் றெண்ணி வாழுமந்த
கண் கண்ட தெய்வத்தின்
கழல் தொழுதல் முறையல்லவா!

(குறிப்பு: ஆஸ்திரேலியாவிலுள்ள முதியோர் அமைப்பு ஒன்றின் விழாவுக்குச் சென்று உரை ஆற்றிய வேளை, என் மனத்தில் எழுந்த எண்ணமே இக்கவிதை. அவர்களின் முன்னால் கண்களில் நீர்முட்ட உரையாற்றும் நிலை ஏற்பட்டது. அந்த உள் உணர்வினால் உடனே எழுதியதே இக்கவிதை.)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *