மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா
மெல்பெண், ஆஸ்திரேலியா

வரந் தருவாய் முருகா – வாழ்வில்
நிரந் தரமாய் உன்னை
நினைந்துமே நான் வாழ
வரந் தருவாய் முருகா
சிரமேறும் ஆணவம் குறைத்திடுவாய் – வாழ்வில்
மரமாக இருப்பதையும் ஒழித்திடுவாய்
உணர்வோடு உனைநினைக்க உதவிடுவாய் – என்றும்
உயிர்ப்போடு வாழ்வதற்கு அருளிடுவாய்   (வரந்தருவாய் முருகா)

குறைகூறும் மனமகல உதவிடுவாய் – வாழ்வில்
கறையுள்ள செயலனைத்தும் களைந்தெறிவாய்
திறலுடை பெரியோரை இணைத்திடுவாய் – என்றும்
மறவாமல் உனைத்துதிக்க வரமருள்வாய் (வரந்தருவாய் முருகா)

மாறுபடு சூரரினை திருத்தியவா – வாழ்வில்
வேறுமுகம் அமையாது காத்திடுவாய்
காரிருளை கருணையினால் களைந்திடுவாய் – என்றும்
கரிசனையை என்மீது காட்டிடுவாய் (வரந்தருவாய் முருகா)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *