மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  
மெல்பேண் …. ஆஸ்திரேலியா

கருகியது உடலம் கதறியது  உள்ளம்
பதறியது நாடு சிதறியது வீடு
சுட்டெரிக்கும் வெப்பம் தாக்கியது எங்கும்
சுடர்விட்டுத் தீயும் ஆடியது கோரம்!

கங்காரு நாடு கருகியது தீயால்
கணக்கில்லா விலங்கு அக்கினிக்கு விருந்து
கண்முன்னே யாவும் கரிமேடாய்ப் போச்சு
கலக்கமுடன் மக்கள் வெறுமையுடன் நின்றார்!

உயிர் பறிக்கும் தீயை உளவுறுதியுடனே
எதிர்கொண்ட வீரர் இதயம் உறைகின்றார்
அர்ப்பணிப்பு என்னும் அளப்பரிய பண்பை
ஆஸ்திரேலிய நாட்டில் அவர்களிடம் கண்டோம்!

உதவிபுரி கரங்கள் ஓய்ந்து விடவில்லை
உளமார உருகி ஓடியோடிக் கொடுத்தார்
தளர்வின்றி அரசும் தாராளம் கொண்டு
நிலையுணர்ந்து கரத்தை நீட்டியதே நன்கு!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *