சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்

காதல்
சில சமயம்
விளையாட்டானது!
சில சமயம்
விபத்தானது!
சில சமயம்
விபரீதமானது!
சில சமயம்
வினையானது!

காரணம் பெரிதல்ல,
காரியமே பெரிது.
எதனால் வந்ததென்று
எவர்க்கும் தெரியாது.
எது ஈர்த்ததென்றும்
எவர்க்கும் தெரியாது.
காதல் வென்றால் வைரம்,
தோற்றால்  ஒரு வைரஸ்.

காதலர்களே,
முயன்று மணப்பீர், இல்லையேல்
முயன்று மறப்பீர்.

வாழ்வதற்குத்தான்
காதல் வேண்டும்.
மாள்வதற்கல்ல.

வாழ்க காதல்!
வாழ்க காதலர்தினம்!
வாழ்க காதலர் தினமும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *