கதைசொல்லும் மரபை மீட்டெடுக்க வேண்டும்

0

சுப்ரபாரதிமணியன்

‘கனவு இலக்கிய வட்டம்’ சார்பில் ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான கதை எழுதும் “கதைசொல்லி..“ போட்டியை நடத்தி வருகிறது. இவ்வாண்டில் அப்போட்டிக்கு தமிழகம் முழுவதுமிருந்து131 கதைகள் வந்திருந்தன. அதில் 20 கதைகள் தேர்வு செய்யப்பட்டு ரூ5000 பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு. தபாலில் பரிசுகள் அனுப்பபட்டன.

திருப்பூர் பகுதிப் பள்ளிகளில் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு  26/2/2020 காலை. முருகு மெட்ரிக்குலேசன் பள்ளி, கூத்தம்பாளையம், அண்ணாநகர் விரிவு, பி.என். சாலை, திருப்பூரில் நடைபெற்றது. எழுத்தாளர் நாமக்கல் நாதன் பரிசுகள் வழங்கினார். அவர், பாண்டியன் நகர், கூத்தம்பாளையம் பிரிவு, பெருமாநல்லூர் பகுதிகளைச் சார்ந்த குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கினார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், பள்ளி நிர்வாகி பசுபதி உட்பட்டோர் கலந்துகொண்டனர். கதைகளைத் தேர்வு செய்தவர்கள்கவுரவிக்கப்பட்டனர்.

“கதை சொல்லும் பயிற்சியைப் போல் கதை எழுதும் முறைகளைக் குழந்தைகள் கடைப்பிடிக்க வேண்டியது பற்றி எழுத்தாளர் நாமக்கல் நாதன் பரிசுகள் பேசினார். கதைகள், இலக்கியம்- வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை. வழிகாட்டுபவை. இலக்கியத்தை நிராகரிப்பவன் பகுத்தறிவு இல்லாத மிருகமாகவே  வளர்வான்“ என்றார், எழுத்தாளர் நாமக்கல் நாதன்.

”கனவு இலக்கிய வட்டம்“ சார்பில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசியது:

“பாட்டிகள் மடியில் உட்கார்ந்து கதை கேட்ட தலைமுறை இன்றில்லை. பாட்டிகளும்முதியோர் இல்லத்தில். குழந்தைகளும் டிவி முன்னால் உட்கார்ந்து கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். முன்னர் பத்திரிகைகள் கதைகள் சொல்லின. இப்போது  அதில் பெரும் பகுதி டிவிதான். கதை சொல்லும் மரபைக் கடைப்பிடிக்கவும், குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும், பேச்சில் கூச்சம் இல்லாமல் இருக்கவும், சிந்தனையை வளர்க்கவும் இக் கதை சொல்லும் நிகழ்ச்சி உதவுகிறது.

“கதை சொல்லும் மரபு விடுபட்டுவிட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். பாட்டிகளும் முதியோர்களும் முதியோர் இல்லங்களில் தஞ்சமடைகிறார்கள். தொலைக்காட்சிகள் அந்த இடத்தை  எடுத்துக்கொள்ள முடியாது. கதைசொல்லலில் கற்பனைத் திறன் வளரும். பேச்சில் கூச்சம் இல்லாமல் போகும். தன்னம்பிக்கைவளரும். கதை கேட்காத, கதை சொல்லாத தலைமுறைகளால் மொழித் திறன் வளராமல் போகும். மேலை நாடுகளில் கதை சொல்லல், பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக உள்ளது. பாடப் பகுதிகளை கதைகளாகச் சொல்வதும் மாணவர்களுக்குப் பாடங்களை எளிதில் புரிய வைக்க உதவும். இலக்கியப் பகுதிகளைக் கதைகளாக்கி, பாடங்களை மனப்பாடம் செய்வதைத் தவிர்க்கலாம் என்றார்.

தாளாளர் பசுபதி வாழ்த்திப் பேசினார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *