கவியோகி வேதம்

கற்பனைத் தேரில்நீ பறந்து சென்றால்
கவலையும் உன்னைவிட் டோடி டாதோ?
அற்பமாம் வேதனை முட்கள் எல்லாம்
அந்தஓர் தேர்மூலம் மாய்ந்தி டாதோ?

விண்ணில்உன் கற்பனை பாய்ந்து சென்றால்
மேவிடும் காட்சிகள் இன்பமன்றோ?!-மனக்
கண்ணிலே தென்படும் அமுதக் குடம்உன்
கவலை- அசுரரை மாய்க்குமன்றோ!

வளைந்துமே விண்ணிலே ஓடும்அந் நாரையும்
மாயைய டாஇந்த உலகம் என்னும்!
உளையும்உன் எண்ணமாம் குப்பை எல்லாம்
ஒன்றாகிச் சொற்களுள் தேய்ந்து விடும்!!

கவிதையாம் வானில்நீ பார்க்கலையோ அந்தக்
கந்தர்வன் ரம்பையைத் தழுவுவதை?-
புவியைத் தொடப்போம் இருள்முகிலும் உன்னில்
புதுமையாம் சொற்களை விதைப்பதுவை?

அம்பிகை உன்னையிங் கழைப்பதுவை உன்றன்
அமுதக் கவிதையால் கண்டுவிடு! –(இந்த)
வம்புக்க ரோனாஉனைப் பார்க்கும் முன்-அந்த
மாயக்கைக் குள்ளே ஒளிந்துவிடு!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *