இது, கனடா ஆர்.எஸ்.மணி, 2007 மார்ச் 18 அன்று எனக்கு அனுப்பிய கவிதை. அவருடைய “Idle Tears” தொகுப்பிலிருந்து அவரே மொழிபெயர்த்த கவிதை. இந்த ஓவியத்தை வரைந்தவரும் அவரே. இந்தக் கவிதைக்கு இசையமைத்தவரும் அவரே. எனக்கு மிகவும் பிடித்த கவிதை.  – அண்ணாகண்ணன்.

இந்தக் கவிதையை ஆர்.எஸ்.மணி குரலில் இங்கே கேட்கலாம்

 

உன் அழகுத் தோட்டத்தில்
ஒரு மூலையின் ஓரத்தில்
மலராய் நான் பூத்திடுவேன்.

உன்னுடைய மென்பாதம்
வேறெங்கோ நடந்தாலும் – என் மனமோ
உன்னையே சுற்றிவரும்.

பரந்த உன் வீதியிலே – உன்
கால்பட்ட மண்தரையில்
பாடகனாய்த் திரிந்திடுவேன்.

முற்றத்தில் நீஅமர்ந்து
மலர்களைத் தொடுத்தாலும் – என் இசையோ
உனைத் தொட்டு முத்தமிடும்.

உன் அழகு மாளிகையில்
ஒரு மூலைப் பிறையினிலே
சிறுவிளக்காய் நானிருப்பேன்

கருத்த உன் விழிகளென்னைக்
காணாமல் இருந்தாலும் – நான் அங்கே
காலமெல்லாம் எரிந்திருப்பேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *