இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 19

0

அவ்வைமகள்

19.  நெப்போலியனுக்குப் பிறகு  சமயப் புரட்சி   

பிரெஞ்சுப் புரட்சியின் பிரபலமும் தாக்கமும் உலகெங்கும் பரவியது நிதர்சனமான உண்மையே.

பிரெஞ்சுப்புரட்சியின் தன்னேரில்லாத தலைவனான, நெப்போலியன் போனப்பார்ட்டின், வீரம், தைரியம், சாதுரியம், அச்சமின்மை , உள்ளிட்ட அபார குணாதிசயங்கள் எல்லாம் அன்று உலகின் ஒவ்வொவொரு மூலையிலும் ஆராதிக்கப்பட்டன – இன்னமும் ஆராதிக்கப் படுகின்றன.

“வீரன் என்றால் இவனன்றோ வீரன்!” என்று நெப்போலியனின் பகைவர்கள் கூட வாய்விட்டுப் புகழ்ந்தனர் – இன்றும் புகழ்ந்தவண்ணமே இருக்கின்றனர்.

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, ஒரு புது உத்வேகம் மக்களிடையே பிறந்தது – தனக்குப் பிறக்கும் ஆண்குழந்தைக்கு நெப்போலியன் எனும் பெயரைச் சூட்ட உலகெங்கிலும் இளம் தாய்மார்கள் விரும்பினர்.

அப்போது, விடுதலைக்காகப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்த இந்தியாவில் நெப்போலியன் அதி தீவிரமாக ஆராதிக்கப்பட்டான். அக்காலகட்டத்தில் இந்தியாவில் பிறந்த ஏகப்பட்ட ஆண் குழந்தைகளுக்கு நெப்போலியன் எனும் பெயர் சூட்டப்பட்டது.

இன்றும், இந்தியாவில், ஏன் தமிழகத்தில் கூட ஏகப்பட்ட ஆண்களுக்கு நெப்போலியன் என்கிற பெயர் இருப்பதை நாம் அறிவோம். எதிர்வரும் காலங்களில் கூட பற்பல நெப்போலியன்கள் இங்கே உருவாகுவார்கள் – பெயரளவிலாவது! ஏனெனில் நெப்போலியன் இந்தியாவில் மிகவும் நேசிக்கப்பட்டவன், நேசிக்கப்படுகிறவன், தொடர்ந்து, நேசிக்கப்படப்போகிறவன். என்றும் சிரஞ்சீவியான நெப்போலியனுக்கு, இன்று சர்வதேச அளவில் இயங்கி வருகிற உலக நெப்போலியனிக் சொஸைடி (International Nepoleonic Society) உள்ளது. அதன் கிளை ஒன்றை இந்தியாவிலும் காணமுடிகிறது. பேராசிரியர் நெப்போலியன் விஜயகுமார் என்பவர் நெப்போலியன் பற்றி கன்னட மொழியில் நூல்கள் சில எழுதியிருப்பதையும் அறிகிறோம்.

நெப்போலியன் தனது வலது கையை சட்டையின் பொத்தான்களுக்கு இடையில் விட்டு,  தனது மார்பைத் தடவிக்கொள்வது வழக்கம். இந்த மேனரிசம் அந்நாளில் பற்பல இளைஞர்களுக்கு இந்தியாவில் இருந்தததையும் அறிகிறோம்.

நெப்போலியன் மிக எளிமையான உணவு மட்டுமே உண்ணுவான். மது அருந்துவது அவர்கள் வழக்கம் என்றாலும் – மதுவை நீர் சேர்த்து விளாவி – வெகு நீர்த்த மதுவைமட்டுமே அவன் பருகுவான். சாவதானமாக அமர்ந்து தட்டு தட்டாய் உணவை உள்ளே  தள்ளும்  பழக்கம் அவனிடம் கிடையாது. நின்றபடி குறைத்த அளவேயான  உணவை அவன் சீக்கிரமாகவே சாப்பிட்டு முடித்து விடுவானாம். பெரிய விருந்தே என்றாலும் மொத்தம் பதினைந்து நிமிடத்திற்குள் சாப்பிட்டுவிடவேண்டும் என்று உறுதியுடன் இருப்பானாம். அந்தப் பதினைந்து நிமிடங்கள் கூட, அரட்டைப் பேச்சு – வெட்டிப் பேச்சுப் பேசாமல் – சாப்பிடும்போதே தன கால அட்டவணையைப் பார்த்து அடுத்துள்ள விஷயங்களை மனதில் அசைபோடுவது  – குறிப்பெடுத்துக் கொள்வது – சகாக்களிடம் நுண்ணிய திட்டங்களை அறிந்து கொள்வது எனப் பல்வேறு முக்கிய பணிகளை முடித்துக்  கொள்வானாம்.  போர்நிலையில் எவரெவர் எங்கெங்கு நிலை கொள்ளவேண்டும் – எவரெவருடன் எவரெவர் இணைப்பில் – பார்வையில் இருக்கவேண்டும் என்று யுக்திகளை அறிவிப்பானாம்.

ஒருநேரத்தில் பலவேலைகளைச் செய்யும் திறனில் அபாரத்தன்மையுடன் விளங்கியவன் நெப்போலியன்.

நெப்போலியனின் தனித்துவத் தோற்றமும் உலகில் பலரை அவன்பால் கவர்ந்திழுக்கச் செய்தது – அவன் இன்னபிற இராணுவ வீரர்களை போல ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவன்  அல்லன்.

கடுகடுப்பான  முகம் கொண்டவனல்லன், பரபரப்புடன் அதிகார தோரணையில் பேசும் முறைப்பு அவனிடம் இருக்காது; அதிக உயரமில்லாத சிறிய உடம்பு கொண்டவன் – இராணுவ உடையில் கூட அவன் தோற்றம் கடுமை கொள்ளாது – கனிவுடன் எப்போதும் காணப்படுகிற தனித்துவ உடல்மொழி நயம் அவனுக்கிருந்தது. ஆரவாரமற்ற முறையில் அமைதியாய் வலம் வருவது அவனது எளிமைப் பண்பாடு.

சொல்லப்போனால் அவன் ராணுவ உடையோ ராஜாங்க உடையயோ அணியவில்லயென்றால், நெப்போலியனை ஒரு போராளி என்றோ – அரசின் தலைவன் என்றோ எவரும் சொல்லவியலாத  சாந்தத் தன்மையோடு இருப்பான். தெய்வ கடாட்சம் நிரம்பிய சாதுக்களுக்கு இருக்கும் அருள் ஒளி முகம் அவனுடையது. அபயம் என்று எவரும் வந்துவிட்டால், அஞ்சேல் எனக் காக்கும்  கருணை அவனிடம் இருந்தது. போராளிகளுக்குள் பூத்த ஒரு  அலாதிப் பூவாக – எளிமை இயம்பியாக நெப்போலியன் இருந்தான்.

அந்நாளில்,  போர் பற்றிய இடஞ்சுட்டிப் பொருள்விளக்கங்களில் மட்டுமல்ல – அன்றாட வீட்டு விஷயங்களில் கூட, எளிமைக்கும், அமைதிக்கும், அவதானத்தன்மைக்கும் எடுத்துக் காட்டாக  நெப்போலியன்  பேசப்பட்டானாம். “நெப்போலியனைப் போல வா” என்று பெரியவர்கள் இளைஞர்களை ஆசிர்வதிப்பார்களாம்.

இந்நிலையில், 1815ல் வஞ்சம் மிகுந்த பிரிட்டாஷாரால் பிடிக்கப் பட்டு, நாடு கடத்தப்பட்டு, தொலை தூரத்தில், தெற்கு அட்லாண்டிக்  மகாசமுத்திரத்தில் உள்ள தனிமையான தீவான, புனித ஹெலெனா தீவில், நெப்போலியன் கடுங்காவலில், சிறைவைக்கப்படுகிறான்.

இவ்வாறாக தனிமைச்சிறையில், தனித்தீவில் நெப்போலியன் இருந்த நிலையில், இடிபோல் ஒரு செய்தி  வருகிறது – மே 5, 1821 அன்று  – நெப்போலியன் மரணமடைந்தான் என்று.

புனித ஹெலெனா சிறையில் வைக்கப்பட்ட நிலையில் – ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு இறக்கிறான் நெப்போலியன். அவனுக்கு காய்கறிகள் பழங்கள் அற்ற போஷாக்கு இல்லாத உணவு வழங்கப்பட்டதும் – மெல்ல மெல்ல வேலைசெய்து மவுனமாய்  – குடற்புண்ணையும் குடற் புற்றுநோயையும் உருவாக்கி – இதயத்தில் இரத்த ஒழுக்கை ஏற்படுத்தி – மனிதரைக் கொல்லும் ஆர்சனிக் நஞ்சு அவனுக்கு உணவின் முலம் வழங்கப்பட்டும், அவன் நஞ்சூட்டப்பட்டான் என்று சொல்லப்படுகிறது (இவ்விஷயம் பின்னாலில் கண்டுபிடிக்கப்பட்டது).

ஆக, நெப்போலியன் குடற்புண் மற்றும் குடற்புற்றுநோய் கண்டு,  நாடு கடத்தப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், ஆ்றாண்டு காலத்தில் இறந்துபோனான் என்பது அன்று பிரிட்டிஷார் வெளியிட்ட அதிகார பூர்வ செய்தி.

நெப்போலியனின் மரணம் உலகை உலுக்கியது என்பது உண்மை. மக்கள் கொதித்தெழுந்தனர் – பல்வேறு  ஆர்ப்பாட்டங்கள் – கொந்தளிப்பு சம்பவங்கள் எழுந்ததை அறிகிறோம்.

1823 ல் நெப்போலியனின் இரண்டாம் நினைவு அஞ்சலி ஒரு குறிப்பிட்ட நாளாகக் காணப்பட்டது. அத்தருணம் தான் ஸ்பெயின் தனது உள்நாட்டு மதமுடியாட்சி தொடர்பான போராட்டத்திற்கு பிரான்சின் உதவியை நாடுகிறது. பிரான்சும் அதற்கு உதவி செய்கிறது. இதனை, பிரெஞ்சுப் புரட்சியின் நாடு கடந்த விரிவாக்கம் எனலாம். பிரான்சின் உள்நாட்டுப் போரான பிரெஞ்சுப் புரட்சி அண்டை நாட்டிலும் வேண்டப்படுகிறது.

நெப்போலியன் பிரான்சில் செய்த பிரெஞ்சுப் புரட்சி பிற நாட்டிலும் வேண்டப்படுவதை நினைக்கும்போது நெப்போலியனின் நினைவும் அவனது பெருமைகளும்  பிரெஞ்சு மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டலுக்கு வருகின்றன. நெப்போலியன் இல்லாத வெறுமையை பிரெஞ்சுதேசம் வெகு வலுவாக  உணர்கிறது. நெப்போலியன் நினைவு அத்துணை வலித்தது – பிரெஞ்சு மக்கள் உணர்ச்சி மீதுற்று கலங்குகிறார்கள்.

இவ்வேளையில் தான்,  “நீ துவண்டுவிடக்கூடாது – நம்முடன் நெப்போலியன் இருக்கிறான்”” என்று நெப்போலியனைப் பற்றிய 19 வாசகங்களைக்  கொண்ட ஒரு வீரப் பாடல் இயற்றப்பட்டு முழங்கப்படுகிறது – லோட் இட கோரனா (Lot-et-gornna) என்ற நகரத்தின் நகராட்சி மன்றத்தின் கட்டிடத்தின் மீது இப்பாடலின் வாசகங்கள் பலகையாக வைக்கப்பட்டு மக்கள் உணர்ச்சிப் பிரவாகமாய் இப்பாடலை  முதலில் முழங்குகிறர்கள். இப்பாடல், காட்டுத்தீ போல் பிரெஞ்சு தேசம் முழுதும் பரவுகிறது. தொடர்ச்சியாக, இப்பாடல் பிரெஞ்சுதேசத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் – நகரங்களிலெல்லாம் முழங்கப்படுகிறது – இரவு பகல் பாராது – தொடர்ந்து முழங்கப்படுகிறது. பிரெஞ்சு தேசத்தில் அன்று முழங்கப்பட்ட இந்த வீரப் பாடலின் வீர வாசகங்கள் – உலகெங்கிலும் – வானெங்கிலும் எதிரொலிக்குமாறு உணர்ச்சி பொங்க முழங்கப்பட்டது என்றால் அது மிகையில்லை.

இவ்வாறு  நெப்போலியன் மீதான உணர்ச்சி மீதூறல் உலகெங்கும்  ஒலித்து – மனித நேயனாய் – எளிமையாய் – நம்பிக்கைத் தோழனாய், கருணை உள்ளவனாய் நெப்போலியனைப் போல ஒருவன் மீண்டும் வாரானோ என்று இறைஞ்சும் வேளையில் – அக்டோபர்  5, 1823, வள்ளலார் இங்கு நம்மிடையே அவதரிக்கிறார். நெப்போலியனைப்போலவே, 51 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து வள்ளலார் மறைகிறார். நெப்போலியனைப்போலவே, மறைவுக்குப்பின்னரே வள்ளலார் மிகவும் புரிந்துகொள்ளப்படுகிறார், ஆராதிக்கப்படுகிறார். அவரது மறைவுக்குப்பின் தொடர்ந்து அவர் புகழ் ஓங்கிக் கொண்டேயிருக்கிறது.

சொல்லப்போனால் நெப்போலியன் மற்றும் வள்ளலார் மறைவுகள் இன்னமும் ஆய்வுக்கு உரியவாய் இருக்கின்றன. நெப்போலியன் நச்சூட்டலில் மரணித்த விஷயம் 1970ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

நெப்போலியனுக்கு வள்ளலாருக்கும்  தோற்றம், குணாதிசயம், பழகுபாங்கு, மனித நேயம், மொழி நயம், கருணைச் சிந்தை முதலியனவற்றில் பொருத்தங்கள் உண்டு. இவற்றிற்கெல்லாம் மேலாக,  வள்ளலாருக்கும்  நெப்போலியனுக்கும் உள்ள மிகத் தலையாய தொடர்பு என்றால் இருவருமே மதப் புரட்சியாளர்கள்.

https://pixabay.com/images/search/napoleon/   https://www.pinterest.co.kr/pin/743797694680188510/

நெப்போலியன் பிரிட்டனுக்கு எதிராக செய்த போர்கள் மற்றும் இன்னபிற போர்கள் யாவற்றையும் விட மிக மிக முக்கியமானதாகக்  கருதப் படுவது பிரெஞ்சுப் புரட்சி.

நெப்போலியன் வாழ்ந்தபோது அவனுக்கு இருந்த புகழை விட, அவன் இறந்த பிறகு அவனது  புகழ் பலநூறு மடங்கு உயரலாகிறது என்பதற்காண காரணங்களில், பிரெஞ்சுப் புரட்சி மிகவும் முதன்மையானது. பிரெஞ்சுப் புரட்சியால் விளைந்த நன்மைகளை உலகு இன்றும் கூட எடைபோட்டுப் பார்க்கிறது. பிரெஞ்சுப் புரட்சி எனும் புரட்சியின் மூலம், நெப்போலியன் என்பவன் மனிதகுலத்திற்கு ஆற்றிய அற்புத சேவைகளை உலகே இன்று  பாராட்டுகிறது – பறை சாற்றுகிறது.

சரி , அப்படி என்னதான் பிரெஞ்சுப் புரட்சியில் நடந்தது என்று கேட்கத்  தோன்றுகிறது அல்லவா?

பிரெஞ்சுப்  புரட்சி உண்மையில், உலக அரங்கில், முதன்மையாய் நடந்த ஒரு முக்கியமான மதப் புரட்சியாகும். மதம் என்பதனை மனித வாழ்வில் மற்றும் சமுதாய வாழ்வில், எங்கு நிறுத்தவேண்டும், அதனை எவ்வாறு மனிதகுலத்துக்காய்ப்  பயன்படுத்தவேண்டும் என்பதனை உலகிற்கு அறிவித்த  தலைமைப் புரட்சிதான் பிரெஞ்சுப் புரட்சி என்பதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

வரலாற்று  எழுத்தாளரான பிராங்கோயிஸ் அவ்லார்ட் (Francois Aulard) கூற்றின்படி, சமுதாய்ப் பார்வையில் பார்க்கிறபோது, பிரெஞ்சு புரட்சி, என்பது நெப்போலியன் எடுத்த  மனித குலத்துக்கான  உயரிய புரட்சி  -இது நாடு பிடிக்கும் போரல்ல . குடியேற்றம் அமைத்து  வாணிகம் நடத்த  பிறநாட்டார் மீது நெப்போலியன் எடுத்த போரல்ல . தன்னுடைய சொந்த நாட்டில்  மதத்தின் பேரால் நடந்துவந்த  அட்டூழியங்களை , அராஜகத்தை , ஊழலை,  வேரறுத்து, தன்  சொந்த மண்ணில்  மக்கள் விடுதலை பெற அவன் செய்த அசாத்திய புரட்சி

“கடவுளின் பிரதிநிதிகள்   நாங்களே ! எனவே, உயர்குடிமக்கள் நாங்களே!  பிரபுக்கள் நாங்களே!” என்று கூறிக்கொண்டு, நிலத்தையும், பொன்பொருள் அத்தனையையும், செல்வம் அத்தனையையும் தம் வசம் வைத்துக்கொண்டு, அதற்கும்  மேலாக,  மக்களிடம்  மதம்  மற்றும் சர்ச்  என்ற பெயரில்  , பணம் வசூலித்துக் கொண்டும்  வாழ்ந்த, கத்தோலிக்க மதகுருமார்கள்   – அனுபவித்து வந்த தனித்துவ உரிமைகளை மற்றும் சலுகைகளை வேரறுக்கவும், சமத்துவத்தை நிலைநிறுத்தி, மனிதர்களின் தினசரி வாழ்வை எளிமைப் படுத்தவும் எழுந்ததே பிரெஞ்சுப் புரட்சி —–பிரெஞ்சுப் புரட்சி மற்ற புரட்சிகளிலிருந்து வேறுபட்டது – இது வெறும் தேசிய புரட்சி அன்று – இது மனிதகுலப் புரட்சி – மனித குலம் கண்ணியம் கொண்டு வாழ்வதற்காக எழுந்த புரட்சி”   என்று

இப்போது, தன்  சொந்த நாட்டில், மதம் தொடர்பான புரட்சி ஒன்றை நடத்த இராணுவ வீரனான நெப்போலியனுக்கு எண்ணம் உதித்தது ஏன்  – இதில் இந்திய  மத – கலாச்சார  சிந்தனைகளுக்கு ஏதேனும்  பங்கு உண்டா? அதிதீவிரமாக, நெப்போலியன் இந்தியாவில் ஆராதிக்கப் படுவதன் உண்மையான காரணம் தான்  என்ன என்றெல்லாம் நமக்குக்  கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

முதலில், பிரெஞ்சுப் புரட்சியைச்  சுற்றிய   காலக்கட்டத்தில் இந்தியாவின் நிலையைச் சற்று பார்ப்போம்: பிரெஞ்சுப் புரட்சி  (மே 5 May 1789 – நவம்பர் 9 1799 – பத்து வருடங்கள், ஆறு மாதங்கள், நான்கு நாட்கள்)  நடந்த காலகட்டத்தில், பிரான்ஸ் இந்தியாவில் குடியேறிவிட்டது; பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியும் அப்போது, ஏற்கனவே இந்தியாவில்  ஊடருவியாயிற்று.

இங்கு, நெப்போலியன் உண்மையிலேயே நெஞ்சார்ந்த அளவில் இந்தியருக்கு மிகவும் நெருக்கமானவனா அல்லது நெப்போலியக் கவர்ச்சி வெறும் சினிமாக் கவர்ச்சி போன்றதா என்பது நம் முதல் கேள்வி.

நெப்போலியன் இந்தியர்களின் கவனத்தில் நின்றதன் முதல் காரணம் அவன் பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தான் என்பதே என்று சில பலர் கூறுகிறர்கள். இதனை மறுப்பதற்கில்லை என்றாலும் இதுமட்டுமே ஒற்றைக் காரணமல்ல. வீரன் – அச்சமற்றவன்  என்கிற பரிணாமங்களைத் தாண்டி இந்தியாவைப் பற்றிய அவனது சித்தம் என்னவாய் இருந்தது என்று பார்த்தால். இந்தியாவை அடிமை கொள்ளவேண்டும் என எண்ணம் கொண்டவனாக அவன் என்றுமே தெரிந்ததில்லை. எங்கும் சொல்லியதில்லை. மாறாக, “இந்தியாவிற்கு உதவி செய்யவேண்டும்!” என்று சொல்லியிருக்கிறான்; மேலும், “தெற்கு ஆசியாவுடன், ஐரோப்பாவை இணைக்கவேண்டும்” என்று சொல்லியிருக்கிறான்.

ஒரு ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த வீரனுக்கு, தெற்கு ஆசியாவை ஐரோப்பியவுடன் இணைக்கவேண்டும் என்று தோன்றாமல், ஐரோப்பாவை தெற்கு ஆசியாவுடன் இணைக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றியதன் காரணம் என்னவென்று பார்த்தால், தெற்கு ஆசியாவின் கலாச்சார பண்பாடுகள் ஐரோப்பியரைவிட உயர்ந்தவை என்பதை  அவன் அறிந்து வைத்ததன் காரணம் தான். தெற்காசிய நாடுகள் எனும்போது இந்தியா தான் திலகம் – எனவே இந்தியாவை பாருக்குள்ளே நல்ல நாடு எனும்படியாக, பாரதிக்கு முன்னேயே தனது கண்ணில் பார்த்தவன் நெப்போலியன்.

நெப்போலியனுக்கிருந்த சிறப்புமிக்க  மனித அன்பு தான், மனித  நேயத்திலும் பண்பாட்டிலும் சிறந்த இந்திய மக்களை – “இந்தியர்கள் மிகவும் நல்லவர்கள்  அவர்களுக்கு விடுதலையில் நாம் உதவவேண்டும்” என்று சொல்லவைத்தது.

நெப்போலியன் போனபார்ட் என்பவன் என்றும் உலக சரித்திரத்தில் இறவாது வாழுமாறு அமரத்தன்மையை உண்டாக்கியது அவனுக்குள் இருந்த மனிதநேயமே என்பதை விளக்க பல்வேறு இதரசம்பவங்கள் உண்டு. நெப்போலியனுடைய அத்தகைய  மனித அன்பின்  பரிமாணங்களை பின்னால் வள்ளலாருடன் நாம் விவாதிக்க இருக்கிறோம்.

இங்கு, முதலில், நெப்போலியன் கொண்டிருந்த  மனித அன்பின் ஒரு பரிமாணத்தை மட்டும் பார்ப்போமாக ; அதுதான் மனிதர்களை மதத்தின் கோரப்பிடியிலிருந்து  விடுவித்து அவர்களுக்கு, சமயம் எனும் சுதந்திரம் வழங்கிய அவனது பேராண்மை.

பிரான்சில், கத்தோலிக்க மதகுருமார்கள், கொடுங்கோன்மையான  முடியாட்சியை ஏற்படுத்திக்கொண்டு,  அவர்கள், சாதாரண குடிமக்களை, சர்ச் எனும் – மதமெனும்  ஆயுதத்தால் நசுக்கி நாசம் செய்து, சூறையாடிக் கொண்டிருந்தனர்.  அந்தக்  கத்தோலிக்க மதகுருமார்களின் மமதையை ஒடுக்கி, மதத்தின் பெயரில் மதகுருமார்கள்  செய்துவந்த ஊழலை, கொள்ளையை, அதர்மமான அதிகாரத்தை வேருடன் பிடுங்கி எறிந்த அவனது வீரமே அவனது ஏனைய வீரதீரச் செயல்களிலெல்லாம் தலையானது என்பது எவரும் ஏற்றுக்கொள்ளும்  உண்மை.

இப்போது, பிரெஞ்சு மக்கள் பால் இந்தியருக்கு, இந்தியர்களின் பால் பிரெஞ்சு மக்களுக்கும்  இடையே அன்றே நிலவி இருந்த வாஞ்சையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்காக,  உலக வரலாற்றை, இந்திய வரலாற்றைச் சற்றே  சிந்திப்போமாக. நமக்கு இன்று கிடைத்திருக்கிற  வரலாற்றைக் கொஞ்சம் கவனித்தாலே, இந்திய-பிரெஞ்சு உறவுகளின் தொன்மை புரியும். நாம் இதை அறிந்துகொள்ள அதிகம் சிரமப்படத் தேவையில்லை.

இந்தியர்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும், பிரெஞ்சு மக்களுக்கும் பரஸ்பர அன்பு – வாஞ்சை தொன்று தொட்டு இருந்து வந்த ஒன்றே. நெப்போலியனது  பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு இந்த வாஞ்சை இன்னமும் பல்வேறு மடங்கு வளர்ந்தது. ஏனெனில், நான் ஏற்கனவே கூறியபடி, இப்புரட்சி மனிதகுலத்திற்காக்க நெப்போலியன் எடுத்த ஒருபோர். முடியாடிச்சியாளிர்களின் பிடியில் அகப்பட்டு விழித்த தன்  சொந்த மக்களுக்கு, விடுதலை வகுத்தப் போர்.  அதுவும் அது எத்தகைய முடியாட்சி? செல்வந்தர்களும் மதக்குருமார்களுமான அந்தஸ்தில் இருந்தபடி, அயோக்கியம் செய்துவந்த கயவர்களின் முடியாட்சி. இந்தக் கயவர்கள் பழம்பெருச்சாளிகள் – சாமர்த்தியசாலிகள் – அபரிமிதமான பலம் உள்ளவர்கள்! – அதே நிலையில் இந்தியா அன்று இருந்தது என்பது பிரெஞ்சின் மனோநிலையை இந்தியர் அறியுமாறு செய்தது.

பார்க்கப்போனால், பிற ஐரோப்பிய நாடுகளைப்போல, பிரெஞ்சும் இந்தியாவில் வணிகமும் குடியேற்றமும் நிகழ்த்த விரும்பிய நாடுதான். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியைப் போல, கிழக்கிந்திய பிரெஞ்சுக் கம்பெனி என்ற கம்பெனிதான் இந்தியாவில் பிரவேசம் செய்தது.

எனினும், பிரஞ்சுக்கு இருந்த வித்தியாசம் என்னவென்றால், தொடக்க காலத்திலிருந்தே, பிரிட்டிஷைப் போன்ற கொடிய உள்ளம் பிரான்சுக்கு இல்லை – பேராசை இல்லை – மாறாக,  இந்தியர்களுடன் புரிதலுடன் பழகும் உள்ளமும், தோழமை பாராட்டும் – நட்புக்கரம் நீட்டும் நேசமும் பிரான்ஸிடம்  இருந்தன.

ஐரோப்பியக் குடியேற்றத்தின் கீழ், பெரும்பகுதி இந்தியா பிரிட்டிஷ் வசம் இருந்தபோதும் சில பகுதிகள்  பிரெஞ்சிடம் இருந்தது என்பதை அறிவோம்.

அக்காலகட்டங்களில், பிரான்சின் இயக்கங்களை, நடவடிக்கைகளைப் பார்க்கப்போனால், எத்தனையோ வழிகளில், இந்தியர்களின் பிரிட்டாஷாருக்கு எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு உதவி செய்திருக்கிறது என்பதை அறிகிறோம். எத்தனையோ இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத்  தஞ்சமும் புகலிடமும்  தந்து அவர்கள் பிரிட்டிஷாரிடம் சிக்காமல் காப்பாற்றிய பெருந்தகை உள்ளமும் பிரெஞ்சிடம் இருந்தது என்பதையும் நாமறிவோம்.

மெத்தப் படித்தவரும், பரோடா மகாராஜாவின் கீழ் பற்பல அரசாண்மைப் பதவிகளை வகித்தவரும், விவேகியும், பிரிட்டிஷ் எதிர்ப்பு விழிப்புணர்வு எழுத்துத்  தந்தையுமான அரபிந்தோ கோஷ் அவர்களை நாம் அறிவோம். அவர், பிரிட்டிஷாரால் பல்லாற்றானும் தொந்தரவு செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு, பொய்யான  வெடிகுண்டுக் குற்றம் சுமத்தப்பட்டு, என அலைக்கழிக்கப்பட்டுத் துன்புறத்தையும்  நாமறிவோம்.

அவர், இறுதியில், அரசியல் துறவு பூண்டு, ஆன்மீக வாழ்வில் ஈடுபட, பிரெஞ்சின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பாண்டிச்சேரியை அன்றோ தேர்ந்தெடுத்தார்?

ஆங்கிலேயர்கள் தன்னைக் கைது செய்துவிடுவார்கள் என்று எண்ணம் வந்த நொடியில், நெல்லையப்பருடன், பாரதி விரைந்தடைந்தது பண்ணடிச்சேரிதான் அல்லவா? பாண்டிச்சேரியின் கருவடிக்குப்பம் சிவானந்தா கோவிலின் மாந்தோப்பில் அவன் பெற்ற  அப்புதுகாப்பு உணர்வில் தானே இந்தியா முழுமையும் பாதுகாப்பின்மையிலிருந்து அடிமை வாழ்விலிருந்து விடுபடவேண்டும் என்று சுத்ந்திரக் கனல் தெறிக்கும் பாடல்களை இயற்றினான்? குயில்பாட்டும் பிறந்தது  அங்கேதான் அல்லவா?

இந்தியச் சுதந்திரப்  போராட்ட வீரர்களை பிரெஞ்சு அரசு  பாதுகாப்பு தந்து உதவியது எதோ எளிமையான விஷயம் என்று எண்ணாதீர்கள். ஆங்கிலேயர்க்ளுக்கு எதிராக இயங்கிவந்த இந்தியர்களை, தம் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பதில் பிரெஞ்சு அரசுக்கு நிறைய சிரமங்கள் இருந்தன. பல சமயங்களில், பிரிட்டிஷ் அரசு, போராளிகளைத் தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என்று பிரான்ஸ் தலைமையில் புகார் செய்து – மிரட்டியுருட்டி – போராளிகளை பிரெஞ்சுப் பகுதியிலிருந்து எடுக்கவும் செய்தது. எனவே மிகுந்த சமயோஜித புத்தியுடன் எச்சரிக்கை உணர்வுடனும் தான் நம்மவர்க்குப் பாதுகாப்பை வழங்கியது பிரெஞ்சு அரசு.

இவற்றையெல்லாம் நான் நினைவு கூறுவது எதற்காக என்றால், இந்த நாடு செய்த – இந்நாட்டு மக்கள் செய்த நல்லூழின் பயனாக, ஆங்கிலேயர் கொடுங்கோலாட்சி செய்த அதே காலகட்டத்தில், பிரெஞ்சும் இங்கே இருந்தது என்பதை நினைவு கூறுவதற்காகத்தான்.

சொல்லப்போனால்,  பிரான்சுக்கும் தென்னிந்தியாவுக்கும் – குறிப்பாகத் தமிழகத்துக்கும் நீண்ட காலத்து நெருங்கியத்  தொடர்பு உண்டு. பிரெஞ்சு மக்கள் வணிக ரீதியாக இந்தியாவில் குடியேற்றம் செய்யத் தொடங்கும் முன்பே  கூட  இந்தியாவில் அவர்கள் தொடர்பு வைத்திருந்ததற்கு அடையாளங்கள் உண்டு – ஆதாரங்கள் உண்டு. காலனிக்குடியேற்றத்துக்கு முன்பு இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் காலத்தில் கூட இங்கே பிரெஞ்சுத் தொடர்பு செழிப்பாக இருந்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, ஜீன் பாப்டிஸ்ட் தாவெர்னியர் என்ற பெயரையுடைய பிரான்சின் வைர வியாபாரி 1600 களில், மூன்று முறை இந்தியா வந்து, இங்கு தங்கியிருந்து, அந்நாளில் இங்கிருந்த முகலாய  மன்னர்களைச் சந்தித்தச்  சென்றிருக்கிறார் என்பதோடு – இந்தியா பற்றிய பற்பல செய்திகளை, தமது பயணக் கட்டுரைகள் நிரம்பியதான  நூல்களில் பதித்துச் சென்றார் (https://en.wikipedia.org/wiki/Jean-Baptiste_Tavernier).

முகலாய மன்னன் அவுரங்கசீப், தனது தனிப்பட்ட மருத்துவராக ஒரு பிரெஞ்சு மருத்துவரை (பிரான்சிஸ் பெர்னியர்) பணியமர்த்தி இருந்ததும் தெரியவருகிறது.

கிமுக்களிலேயே  தமிழகம், கிரேக்கம், எகிப்து ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பண்டம் ஏற்றுமதி செய்தும் – பண்டமாற்றம் செய்தும் வாழ்ந்ததாகவும் அறிகிறோம். பிரான்ஸை பிரத்தியேகமாகக் குறிப்பிட்டு எதுவும் தெரியவில்லை என்றாலும், பிரான்ஸ் ஒரு ஐரோப்பிய நாடு என்ற வகையில், கிமுக்களில் குறைந்த பட்சம், இந்தியாபற்றிய ஞானம் பிரான்சுக்கு இருந்திருக்க வேண்டும் என்றே நாம் வைத்துக் கொள்ளலாம். நான் ஏற்கனவே சென்ற பகுதி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததை போல, இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், வெகு தூரம் உலகில் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு, நெடுந்தொலைவில் உள்ள நாடுகளில் குடியேற்றம் செய்திருப்பதை இப்போது பலரும் ஆய்ந்துவருகின்றனர். ஆக, பிரெஞ்சு தேசத்தினர் நமக்குப் பரிச்சயமானவர்கள் என்பது வெளிப்படை.

பிரெஞ்சு இந்தியாவின் இரு வரைபடங்கள் – இரண்டு கால கட்டங்களுக்கு, இங்கே கீழே வழங்கப்பட்டுள்ளன.

 

https://www.pinterest.com/pin/339669996877541115/

By Lubiesque – Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=24978446

 

பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்த இந்தியாவின்  பரப்பளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பிரெஞ்சு வசம் இருந்த இந்தியாவின் பரப்பளவு சிறியதுதான். ஆனால், மூர்த்தி  சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பது போல, இந்தியர்களின் பால் பிரெஞ்சுக்கு வாஞ்சை இருந்தாமையால், இந்தியர்களும்  பிரெஞ்சின்பால் வாஞ்சையுடன் இருந்தனர்.

பிரெஞ்சின் நேரடி ஆட்சியில் இல்லை என்றாலும், பல இந்திய பிராந்தியங்களில், பிரெஞ்சுக்கு விசுவாசம் கொண்ட மக்கள் இருந்ததை, முதல் வரைபடத்தில்,  நீலவண்ணப் பிராந்தியத்தில் காட்டியிருக்கிறார்கள்.

பிரெஞ்சினர்பால் இந்தியர்களுக்கு ஏற்பட்ட வாஞ்சைக்கும் நேசப்பிணைப்பிற்கும் முக்கிய காரணமாக நாம் கருதுவது, பிரெஞ்சினர் இந்திய மக்களின்  அருமைப்  பெருமைகளை  அறிந்து கொண்டதும், அவற்றை மதித்ததும் தான்.

(மேலும் பேசுவோம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *