இராதா விஸ்வநாதன்

கண்ணாமூச்சி ஆட்டத்தில்
காத்திருக்கிறது எனது விடியல்…

கற்ற பாடங்கள் ஆயிரமாயிரம்
கற்ற வித்தைகள் கை கொடுக்கவில்லை
உற்ற உறவுகள் உதிரும் அபாயம்
விழி ஒன்றே திறந்திருக்க
வாயுரையுடன் உணர்வுகளின் பரிமாற்றம்….
வழியும் கண்ணீரைத் துடைக்க ஆளில்லை

விதைத்த நெல் வீணாகிறது விளைநிலங்களில்….
கனிந்த கனிகள் புதையுண்டு கிடக்கின்றன மரங்களின் மடியில்
சடங்குகள் சம்பிரதாயங்கள்
முடங்கிக் கிடக்கின்றன
அகத்தை மூடித் திரிந்தவனை
முகத்தையும் மூடவைத்துவிட்டது
கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணுயிர்….

பறக்கின்றன படித்த பட்டங்கள் காற்றில்
பணத்தை நோக்கிப் பயணித்த கால்கள்
தன் இனத்தைக் காண துடிக்கின்றன  வெற்றிகளின் குவியல் இன்று குப்பைக் கோபுரத்தில் கொட்டிக் கிடக்கிறது
எதையும் விட்டு வைக்கவில்லை
எவரையும் விட்டு வைக்கவில்லை
இந்தக் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயுர்..

மனிதரை வெறுத்து ஓடிய மக்களுக்கு
மனிதரைத் தேடி அலையும் அபாயம்
கூடிக் குலாவி மகிழ்ந்த நாட்கள்
நினைவின் நிழலிலிருந்து  நிஜமாகி
வருகின்றன ஊர்வலமாக…
அடைந்ததைவிட இழந்தது ஏராளம்
உண்மை தெரிந்துவிட்டது..
கணக்கும் புரிய வைத்தது
இந்தக் கண்ணுக்குத் தெரியாத
நுண்ணுயிர்..

எழுவோம் ஃபீனிக்ஸ் பறவை போல
உழைப்போம் ஒற்றுமையுடன்
உருவாக்குவோம் ஒரு மருந்து
அழிப்போம் உயிர்க்கொல்லி நுண்ணுயிரை….
படைப்போம் புதியதோர் உலகம்
நோயின்றி, பசியின்றி, பகையின்றி
துரத்தியடிப்போம் துன்பங்களை
அன்பில் பழுத்த அறிவுடன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *