தாழி – இணையவழிக் கருத்தரங்கம்
புதுச்சேரி கபிலன் பதிப்பகம், புதுச்சேரி தாழி அறக்கட்டளை, ஆரோவில் இளைஞர்கள் கல்வி மையம், மதுரை தாழி ஆய்வு நடுவம் இணைந்து நடத்தும் காணொளிக் கருத்தரங்கம். கருத்தரங்கத்திற்கான பொருண்மை – எதிர்கால வாழ்வியலுக்கான தமிழியல் பார்வை என்பதாகும். அதன் வகைமைகளில் மேலாண்மை என்னும் பொதுத் தலைப்பில்
கல்வி முறை
கவின் கலைகள்
எண்ணும் எழுத்தும்
பொருள் (செல்வம்)
சமயம்
சமூகம், குடும்பம், தனிமனிதன்
வணிகம்
தொழில்கள்
வேளாண்மை
பல்லுயிர்ச்சூழல்
அரசு – அரசியல்
உணவு மருத்துவம்
பண்பாடு, தொல்பொருள்
விளையாட்டு வகை
ஊடகங்கள்
காணார், கேளார், முடப்பட்டோர், பேணுநர் இல்லோர், பிணி நடுக்குற்றோர், பெண்கள், குழந்தைகள் நலம் குறித்த மேலாண்மை உள்தலைப்புகளாக அமையலாம்.
கட்டுரையாளர்கள் செய்ய வேண்டுவன
தங்களுடைய விருப்பத்திற்குரிய உள்தலைப்பின் பொருண்மையில் தகுதிவாய்ந்த நல்ல கட்டுரையை உருவாக்குவது.
கட்டுரையின் அளவு A4 பக்க அளவில் 20 வரிகளுக்கு மிகாமல் 4 பக்கங்களுக்குள் அமைவதாக இருத்தல் வேண்டும்.
கட்டுரைகளை, கணினி வழியே Microsoft Word கோப்பு வடிவத்தில் ஒருங்குறி எழுத்தில் (Unicode Font) தட்டச்சு செய்து பதிவுப்படிவத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும்.
கட்டுரைகள் வந்து சேரவேண்டிய நிறைவு நாள் 15.07.2020.
கட்டுரை எழுதுகிற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். அறிஞர் குழுவினரால் தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளின் ஆசிரியர்களுக்கு நூலாக்கம் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தெரிவு செய்யப் பெற்ற கட்டுரைகள் நூல் வடிவில் உருவாக்கப் பெறும்.
அயலகத்திலிருந்தும் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் பொருண்மைக்குட்பட்டுக் கட்டுரைகள் அனுப்பலாம். சிறப்பான கட்டுரைகளை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு
தாழி ஆய்வு நடுவம்,
#9 – அமைதிச் சோலை,
திருநகர், மதுரை – 625006.
thazhikapilanilaignarkal@gmail.com
9487849490
முழு விவரங்களுக்கு – இணையதளம்
https://thazhikapilanilaig.wixsite.com/kith