நாளெல்லாம் நின்றிருப்பான்
கண் எட்டியவரை எங்கும் கிளைகள்
கீழே நின்றால் வானமே தெரியாது
பச்சை இருட்டில் கோடாய் வெளிச்சம்
உடல்சிலிர்த்து கொஞ்சம் சூரியன் காட்டும்
இலைகளின் இடையே மேகம்ஓடும்
காகம் குருவி காபந்து காட்டும்
வரம் ஒன்று இருப்பின் தினம்-
இதன் கனியாய் நிதமும் பிறப்பேன்
அதனுடனே இருப்பேன்
செயலறு என்றே மரங்கள் சொல்லும்
ஆனந்தப் பைத்தியம் நான்
எவர் பேச்சும் கேட்கமாட்டேன்.
நான் சென்னை வாசி . ஆனால் வாசிப்பதில்லை . தொலை காட்சி தான் வாழ்க்கை . படித்தது பட்டம் . எல்லாம் மறந்து விட்டது .
வயது அம்பத்து நான்கு . சு ரவி வாழ்ந்த மயிலை எனக்கு மூச்சு . கிரேசி மோகன் வாழும் மந்தவெளி எனக்கு சிந்து வெளி .
சொந்தமாய் தொழில் . போட்டியான வாழ்க்கை . சிவாஜி பிடிக்கும் . மெல்லிசை மன்னர் என்றால் உயிர் . சுஜாதா எனக்கு பக்கத்து தெரு . பாலகுமாரன் கூப்பிடு தூரத்தில் . மணமானவன் . மனைவி தனியார் நிறுவனத்தில் பணி . விளக்கேற்றுவது நான் தான் ஒரு மகன் . கல்லூரியில் . கர்நாடக சங்கீதம் பயின்று கச்சேரியும் செய்து வருகிறான் .எழுத்து எனக்கு பிடிக்கும் .