பாஸ்கர் சேஷாத்ரி

நாளெல்லாம் நின்றிருப்பான்
கண் எட்டியவரை எங்கும் கிளைகள்
கீழே நின்றால் வானமே தெரியாது
பச்சை இருட்டில் கோடாய் வெளிச்சம்
உடல்சிலிர்த்து கொஞ்சம் சூரியன் காட்டும்

இலைகளின் இடையே மேகம்ஓடும்
காகம் குருவி காபந்து காட்டும்
வரம் ஒன்று இருப்பின் தினம்-
இதன் கனியாய் நிதமும் பிறப்பேன்
அதனுடனே இருப்பேன்

செயலறு என்றே மரங்கள் சொல்லும்
ஆனந்தப் பைத்தியம் நான்
எவர் பேச்சும் கேட்கமாட்டேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *