அண்ணாகண்ணன்

இந்தப் பாடலை ஆசிரியரின் குரலில் இங்கே கேட்கலாம்.

 

காலமையா காலம் ஐயா – ஆல
காலமையா ஐயா ஐயா
கோலமையா கோலம் ஐயா – அலங்
கோலமையா ஐயா ஐயா

நோவெழுந்து நிற்பதனால்
நாவிழந்து நிற்கின்றோமே
சாவெழுந்து நிற்பதனால்
வாழ்விழந்து நிற்கின்றோமே

தாக்கமையா தாக்கம் ஐயா
தேக்கமையா தேக்கம் ஐயா
ஏக்கமையா ஏக்கம் ஐயா
ஆக்கமெங்கே ஐயா ஐயா

நடுக்கமிங்கே ஐயா ஐயா
கடுக்குதிங்கே ஐயா ஐயா
இடுக்கணிங்கே ஐயா ஐயா
தடுப்பதெங்கே ஐயா ஐயா

நாதியில்லே ஐயா ஐயா
நீதியில்லே ஐயா ஐயா
ஜோதியில்லே ஐயா ஐயா
சேதியில்லே ஐயா ஐயா – நல்ல
சேதியில்லே ஐயா ஐயா

பாரமையா ஐயா ஐயா – எல்லாம்
தூரமையா ஐயா ஐயா
ஈரமெங்கே ஐயா ஐயா
சாரமெங்கே ஐயா ஐயா

வாருமையா வாரும் ஐயா
பாருமையா பாரும் ஐயா
கேளுமையா கேளும் ஐயா – கதை
நீளுமையா நீளும் ஐயா

போதுமையா போதும் ஐயா
ஏதும் செய்யலாமோ ஐயா
தீதுவரும் பாதை மாறி
தோதுவர வேணும் ஐயா

துக்கமிங்கே ஐயா ஐயா – வலி
பக்கமிங்கே ஐயா ஐயா
மிக்கதுயர் ஐயா ஐயா
தக்கவழி தாரும் ஐயா

தாருமையா தாரும் ஐயா – வழி
கூறுமையா கூறும் ஐயா
சேருமையா சேரும் ஐயா – இடர்
தீருமையா தீரும் ஐயா

ஒல்லும்வழி காட்டும் ஐயா
நல்லவழி காட்டும் ஐயா
வல்லவழி காட்டும் ஐயா
வெல்லவழி காட்டும் ஐயா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *