கோவை ஞானி – அஞ்சலி

0

முனைவர் ம. இராமச்சந்திரன் 
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.

உள்ளங்கைக்குள் இதயம் தேடும் உன்னத ஆன்மா, அன்பெனும் பெருவெளியில் நீண்ட உரையாடலின் குரல் கோவை ஞானி. அவரோடு சேர்ந்து சுற்றும் தருணங்களைப் பெற்றவன் நான். அவரின் உள்ளங்கை குளுமை இன்றும் மானுடத்தின் பேரன்பின் வெளிப்பாடாக உணர்கிறேன்.

எனது கைகளைப் பற்றிக்கொண்டு என்னுள் அவர் தேடும் நான் பெரும் வியப்பின் மளைப்பாக இருந்தது. அவர் இதயத்தின் அன்பை நோக்கிய பயணம் அது. கைகளோடு கைசேர்த்து நடந்த தூரங்கள் குறைவுதான் என்றாலும் அது எழுப்பிய உன்மத்த அதிர்வுகள் அதிகம்.

ஒற்றைக் குரலாக ஒலிக்கத் துணிந்து தனது அன்பின் தென்றலால் அனைவரது இதயங்களையும் இட்டு நிரப்பியவர். மார்க்சிய ஒளி தமிழ்ச் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதில் தனக்கான அவதானிப்புகளுடன் காத்திரமாகச் செயல்பட்டவர் இவர்.

புத்தகங்களின் அடுக்குகளில் ஒற்றைச் சரடாக விளங்கி தமிழ் இலக்கியத்தின் பல்வேறு போக்குகளையும் தமிழ்ச் சமூகத்தின் வெளிப்பாடுகளையும் தொடர்ச்சியாகத் தனது எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியவர்.

தமிழ்ச் சமூகம் ஒரு உன்னதமான வழிகாட்டியை இழந்து நிற்பதாகத் தோன்றுகிறது. இலை உதிர்வது உரமாகத்தான் என்றாலும் இதயத்தின் கனம் கூடத்தான் செய்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *