தோல் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

0

மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

எப்போதும் போலவே சாம்பல் நிற சூட்கேஸை எடுத்துக்கொண்டு காரிலிருந்து இறங்கி அவசரமாக படுக்கையறைக்குச் சென்று மிகவும் இரகசியமாகப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த பணத்தை சுவரில் ஒரு இரகசியமான இடத்தில் வைத்த பிறகே விஜய ராகவன் உடைமாற்றினான்.

இனி அடுத்தது ஒரு குளியல்.

வாட்டர் ஹீட்டர் ஆன்செய்து குளியலறையின் கண்ணாடியில் தெளிந்த பிம்பத்தைப் பார்த்து திருப்தியுடன் நிற்கும்போது சே………..’ இடது முதுகில் ஒரு சொரிச்சல். வலது கை நீட்டி அங்கே தொட்டுப் பார்த்தபோது சொரிய வேண்டும் போலிருந்தது.

சொரிந்தான்.

அதை அவ்வளவு பெரிதாக எடுக்கவில்லை.

அடுத்தநாள் அதே நேரம் வலது முதுகில் சொரிச்சல் அனுபவப்பட்டு சொரியவேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. இடது பக்கத்தில் சொரிந்த இடமும் தீவிரமாக அரிக்க ஆரம்பித்தது. ரெண்டு இடங்களிலும் நகங்களால் சொரிய விஜயராகவன் கட்டாயப்படுத்தப்பட்டான். இருந்தாலும் அவன் அதை பெரிதுப்படுத்தவோ, மனைவியிடம் தெரியப்படுத்தவோ இல்லை. பிறகு தொடைகளிலும், மணிக்கட்டுகளிலும் சொரிச்சல் ஆரம்பித்தது.

தினமும் பயன்படுத்தப்படும் சோப் அலர்ஜியாக இருக்கும் என்ற நினைப்பில் சூப்பர் மார்க்கெட் சென்று வேறுவகை சோப் வாங்கி உபயோகித்தான்.

ஆனால் சொரிச்சல் குறையவில்லை.

மனைவியிடமிருந்து அதை மறைப்பது கஷ்டமாக இருந்தது.

“இதேதோ ஸ்கின் டிசீஸ்தான்………..” மஞ்சுளா கூறினாள்.

‘வாய்ப்பே இல்லை’. விஜயராகவனின் உடனே உள்ள மறுபடி இப்படிதானிருந்தது. உடல் தூய்மையில் அவனுக்கு அந்த அளவு கவனம் இருந்தது. ஹெல்த் க்ளப்பின் நிரந்தர வாடிக்கையாளன். ஆண்டுதோறும் தவறாமல் முழு ஹெல்த் செக்-அப செய்பவன். ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அக்கரை அதிகம். அப்படி ஒருவனுக்குத் தோல் வியாதி!. என்ன ஒரு எதிரான கணிப்பு.

அவன் மனைவியைப் பழித்தான். அவளுக்கும் மருத்துவத்துக்கும் பெரிய உறவொன்றுமில்லை.

மருத்துவர் ஆகவேண்டும்னு ஆசப்பட்டது உண்மைதான் ஆனால் பிளஸ்டு பாஸானால்தானே?.

அடுத்த நாள் காலையிலும் அவன் ஹெல்த் க்ளப் போனான்.

ஆபீஸீக்குப் போனான்.

வேலை செய்யும் சைட்டுக்குப் போனான்.

அதற்கிடையிலும் உடல் அரித்துக்கொண்டே இருந்தது. மற்றுள்ளவர்களின் கவனத்தில் படாமல் அரிப்பை அடக்க வேண்டியிருந்தது. அதனால் அவனுக்கு மிகவும் துக்கப்படவேண்டி வந்தது. தோல் நோய் நிபுணரைக் காணவேண்டும் என்று முடிவெடுத்தான்.

சாதாரண ஒரு தோல் நோய் சிறப்பு மருத்துவர் மட்டுமல்ல கோசி வர்கீஸ் தோல் நோய் சம்பந்தப்பட்ட சில நூல்களின் ஆசிரியரும் கூட. பல தொலைக்காட்சிப் சேனல்களிலும் தோல் நோய் பற்றி விளக்குவது. போன்-இன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நோயாளிகளுடன் கலந்துரையாடுவது, சமகால வெளியீடுகளில் எழுதுவது எனப்பல நிலையிலும் சிறப்பாக விளங்குபவர்.

தனியாக உள்ள தனது க்ளீனிக்கிலிருந்து டாக்டர் கோசி வர்கீஸ் விஜயராகவனை தீவிரப்பரிசோதனை செய்தார். நோயின் நிலைக்கேற்ப சிகிச்சைமுறை தீர்மானிக்கப்பட்டது. இரண்டு வாரத்திற்குப் பிறகு மீண்டும் பரிசோதனை.

வீட்டிற்குத் திரும்பி வரும்போது விஜயராகவனின் கையில் மருந்துகளின் ஒரு பொட்டலம் இருந்தது. மஞ்சுளாவின் கேள்விக்கு, “டாக்டரைப் பார்த்தேன்” என்று சும்மா மூண்டுவிட்டு அவன் சூட்கேசுமாக படுக்கையறைக்குள் சென்றான். உடல் நன்றாகச் சொரிந்து கொண்டிருந்தது.

இரண்டு வாரங்கள் முடிந்தது.

விஜயராகவன் மீண்டும் ஒருமுறை கோசிவர்கீஸிற்கு முன்னால் வந்தான். மருந்துகள் முறையாகச் சாப்பிட்டபோதும் நோய்க்குக் கொஞ்சம் கூட மாற்றமில்லை. கொஞ்சம் கூடுதலாகிவிட்டதோ என்ற ஐயமும் உண்டு.

“பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல” பரிசோதனைக்குப்பிறகு டாக்டர் கூறினார். தோல் வியாதிகள் பலதும், சில உதாரணங்கள் வழி டாக்டர் விளக்கினார்.

பணச்செலவைப் பற்றி டாக்டர் குறிப்பாக உணர்த்தியபோது, “பணம் தனக்கு ஒரு பிரச்சனையே இல்லை” என்று விஜயராகவன் வெளிப்படையாகக் கூறினான். வங்கி சேமிப்புக்கணக்கு இருக்கு. வாடகை வரக்கூடிய ஃபளாட்டுகள் இருக்கு தென்னந்தோப்பிருக்கு, ஏலக்கா வயலும் இருக்கு.

நமக்கு எதுக்கு இவ்வளவு பணம்னு கேட்கற மனைவியும் இருக்காள். அவன் அவ்வளவையும் மனதில் வைத்துக்கொண்டு தனது சொரிச்சலுடன் மருத்துவரை நேர்கொண்டான்.

மருத்துவர் அவனுக்கு உதவ முழுத்தயாராக இருந்தார். ஆனால் அவன் பொறுமையிழக்கக்கூடாது. சரி அவன் தலை ஆட்டினான். டாக்டர் மருந்துகளின் சீட்டை தயார் செய்தார். அவன் சொரிச்சலுடன் விடைபெற்றான். பரிசோதனைத் தொடர்ந்தது.

தனக்குக்கீழே வேலைசெய்பவன் அதற்குள் அவனுடைய மாற்றங்களைக் குறித்து அறிந்திருந்தான். அவர்களுக்குத் தெரியாமல் இருக்க அவன் முடிந்தவரை முயற்சித்தான். செயற்கையானப் பணிவுடன் அவனிடம் நல்லபேர் வாங்க அவனைப் பார்க்க வருபவர்கள் அனேகம் பேர். அவர்களிடமிருந்து தனது நோயின் தன்மையை மறைக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. நோய் ஒரு உறவுப்பகை போல அவனுடைய தோலுக்குக் கீழேப் பதுங்கியிருந்து

அவனை முடிந்தவரை வேதனைப்படுத்தவும் அதில் சுயமகிழ்ச்சி அடையவும் செய்தது. சகிக்கமுடியாமல் அவன் சொரியும்போதுதான், அவை நாகரிகம் தெரியாத சிலர் வருவர். பிறகு அவர்கள் போகும்வரை சொரிவதை அடக்கிப்பிடிக்கும் அவஸ்தை! உச்சிமுதல் பாதம் வரை எரிச்சல்! புகைச்சல்!

இதற்கிடையில் ஒருநாள் மஞ்சுளாவைப் பார்க்க அவளுடைய அப்பா வந்தார். அவள் குழந்தையுமெடுத்து அப்பாவுடன் சென்றுவிட்டாள். ஷிட்.

அவன் தனியாக ஆனான். பால்கனியில் ஊஞ்சலிலிருந்து அவன் சொரிய ஆசைப்பட்டான். அங்கு உட்கார்ந்தால் அது வழியாகச் செல்பவர்களைப் பார்க்கலாம். மீன்வியாபாரி, தபால்காரர், கொரியர் சர்வீஸ் பையன். பால்காரன், செய்தித்தாள் போடுபவன், பள்ளிக்குழந்தைகள், வேசிகள், பிச்சைக்காரர்கள் எனப்பலரும் கடந்து போகின்றனர். அவர்கள் யாரும் தோல் வியாதிக்கு இரையாகவில்லை. ஏதோ ஒரு புராண கதாபாத்திரத்தைப்போல தன்னுடைய வியாதியை அவர்களில் யாருக்காவதுக் கொடுத்துவிட்டு இதிலிருந்து முற்றிலும் விடுபடுவதற்கான சித்தி (வரம்) கிடைத்திருந்தால் என்று விஜயராகவன் சொரிந்து கொண்டே சிந்தித்தான்.

கூர்மையான நகங்கள் தோல்வழியாக அங்கும் இங்கும் சலிக்கும்போது உருவாகின்ற கடுமையான வேதனை கலந்த சுகம் உணர்வுகளில் எரிச்சலுடன் ஆழ்ந்திறங்கியது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *