தேசிய கல்விக் கொள்கை 2020 – வளர்முகமாய் ஒரு கருத்துரை

0

இந்திய அரசாங்கத்தால் நடைமுறைக்கு வரப்போகும் தேசிய கல்விக் கொள்கை (National Educational Policy 2020) மீதான ஒரு கருத்தாடல்:

https://us02web.zoom.us/j/89262732459?pwd=d3BzYIFmVjF3MGVxUWITaTRKRTU5Zz09

Meeting ID: 892 6273 2459

Passcode: 433886    Date: August 19, 2020 @ 5 pm, IST.

உலகத் தரம்வாய்ந்த ஆய்வுகளை நடாத்தி, போட்டிகள் நிறைந்த உலகச் சந்தையில் பொருள்களை விற்கும் முதல் உலக நாடுகளில் ஒன்றாக மாறும் வாய்ப்புக்கான தேவைகள் பற்றியும், தொற்றுநச்சுக் காலத்தில் பண முதலீடு (6% of GDP) என்னும் நோக்கம் என்பது வெறுமனே தாளில் மட்டுமன்றி, உண்மையாகவே அரசாங்கம் நிதி ஒதுக்குவது, ஆசிரியர்களை உருவாக்குவது பற்றியும் பேசுகிறேன்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்பு என்பனவும், முக்கியமாக ஆங்கிலத்தில் உயர் விஞ்ஞானம், மருத்துவம், கம்ப்யூட்டர், தொழில்நுட்பம் ஆராய்ச்சிகள் தரம்மிக்க ஜர்னல்களில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தியக் கல்விநிறுவனங்கள் வெளியிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆங்கிலத்தை விட்டுவிட்டால் உலக வளர்ச்சி அறியும் ஜன்னல் ஒன்று இந்திய மொழிகள் பேசுவோருக்கு அடைக்கப்படும். மொழிக் கொள்கையில் தாய்மொழி, ஆங்கிலம் அவசியமானவை. மூன்றாம் மொழி கற்க விரும்புவோர் – இந்திய, அல்லது உலக மொழிகள் ஒன்றை – கற்க வசதிகள் ஏற்படவேண்டும். தமிழ் மொழி, தொல்லியல், வரலாறு உலகளாவிய நிலையில் வளரவேண்டும். இப்போதைய துல்லியமான ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிர்தல் எளிது. அதில் அரியனவற்றை தேர்ந்தெடுத்து இணையத்தில் வெளியிடும் நிபுணர் குழுக்களை பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்த வேண்டும்.

அண்மையில் கீழடி (மணலூர்) தமிழி எழுத்து, கிண்ணிமங்கலம் சிற்பத்தில் உள்ள தொல்காப்பியர் புள்ளி காட்டும் காலம், சிவகளை போன்ற இடங்களில் வாழ்விடங்கள் கிடைக்க உள்ள வாய்ப்பு, பழைய தமிழ்நூல்களை எண்மப்படுத்தி archive.org போன்ற தளங்களில் லட்சக்கணக்கில் வைத்தல் பற்றிக் குறிப்பிட ஆவல். தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் தமிழ்நாட்டு அரசாங்கம் எழுதும்போது மொழியியலார் குறிப்பிடும் செம்மையான முறையில் எழுதுதலும், இந்திய மொழிகளுக்கும், மக்களுக்கும் பரஸ்பர ஒற்றுமை ஓங்க ரோமன் எழுத்துமுறை (ISO 15919) முறையையும் இந்தியா முழுமையும் உயர்நிலைப்பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களில் சேர்ப்பதும், தபால் நிலையம், ரயில்கள் போன்றவற்றில் பயன்படுத்துவதும் உதவுவதை மாநில முதலமைச்சர்கள் தில்லி சர்க்கார் மந்திரிகளிடம் வலியுறுத்தல் தேவை.

தமிழ்மொழி, தமிழ்நாடு தென்னகம், திராவிட ஒப்பீட்டு மொழியியல், சிந்துவெளியில் தொன்மையான கலை, சமய, சமூக ஆய்வுகள், மரபணு பரிசோதனைச் செய்தி போன்றன நிகழ்த்த இப்பொழுது நாங்கள் அமைக்க முயலும், “ஹூஸ்டன் பல்கலை தமிழ் இருக்கை” போன்றவை எவ்வாறு உதவும் என்றும் பார்க்கலாம். மதுரைப் பேரா. சத்தியமூர்த்தி, போற்றுதலுக்குரிய பரஞ்சோதி மகான் அவர்களுக்கு ஹூஸ்டன் தமிழ் இருக்கை சார்பில் நன்றி. அழைப்பிதழை இணைப்பில் காண்க.

புதன் மாலைப் பொழுதில் சந்திப்போம்!

டாக்டர் நா.கணேசன்

https://archive.org/details/@dr_n_ganesan

http://nganesan.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *