அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

எம்.மோகன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (13.09.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி – 275

  1. அழிக்காதே அழகை…

    பச்சை வயல்கள் ஒரத்தில்
    பார்க்க அழகாய்த் தென்னைகள்
    உச்சி மரத்தில் காய்களுடன்
    உயர்ந்தே நிற்கும் காண்பாயே,
    துச்ச மாக எண்ணாதே
    துணைதான் இயற்கை நமக்கேதான்,
    இச்சை கொண்டே அழிக்காதே
    இன்பம் கொள்வாய் அழகினிலே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. முனைவர்செ.நீதி
    உதவிப்பேராசிரியர்
    பான்செக்கர்ஸ்மகளிர்கல்லூரி
    தஞ்சாவூர்.
    275 படக்கவிதைப்போட்டி
    தென்னை
    வரிசையாய்நின்று யார் உயரம்? என்று
    வானிடம்கேட்டு நிற்கின்ற தென்னையே!
    உங்கள் உயரத்தை அளவிட முடியாமல்
    வானம் வியந்து முகம் வெளுத்து நிற்கிறது
    கொடுப்பதில் உனக்கு நிகர் உலகில் இல்லை
    உயரத்தில் உனக்குச் சமம் எதுவுமில்லை
    வேலை இல்லாதவனுக்கு உன் ஓலை
    வேலை தருகிறது குடில் இல்லாதவனுக்குக் குடிசைத் தருகிறது
    தன்னலமற்ற எண்ணம் உன்னுடையது
    உன்தலை விரித்துக் கிடந்தாலும் பரவாயில்லையென்று
    அடுத்தவன் தலைக்கு எண்ணெய் தருகிறாய்
    உன் நா வறண்டு கிடக்கையில்அடுத்தவன் நாவின் தாகம் தீர்க்கிறாய்
    உன் உடலைக் காயப்படுத்தினாலும் சுவையானக் காயைத் தருகிறாய்
    உன் ஓடும் ஓசைத்தரும் கருவியாய் பேசுகிறது
    உன் ஏடும் கைவினைப் பொருளாய் அழகைப் பறைசாற்றுகிறது
    தலையாட்டுப் பொம்மைக்கும்
    தலையாட்டக் கற்றுக் கொடுத்ததும் நீதானோ?
    நீ தருவ தெல்லாம் நன்மை இது உலகம் அறிந்த உண்மை
    கஜா புயல்உன் தலையைப் பிடித்து பிய்த்துப் போட்டபோது
    வலியைத் தாங்கித் தாய்ப்போல் நின்றாய்
    உன் சேயெல்லாம் வீழ்ந்த போது
    தென்னீர் தந்தவனுக்காகக் கண்ணீர் விட்ட மக்கள் எத்தனையோ பேர்!
    ஏழைகளின் வாழ்வாதாரம் நீ ஓங்கி நில்! உலகத்தைத் தாங்கி நில்!
    பல்லாண்டு பல்லாண்டு பலக்கோடியாண்டு.

  3. Respected., sir and madam

    Thank you very very much for selected my kavithai. your words very very engaraging me again Thank you very much sir and madam.

  4. 275 படக்கவிதைப்போட்டி முனைவர்செ. நீதி

    மிதிவண்டி
    ஏய் நண்பனே! நன்றி மறந்தாயே நவீனப் பயணத்தில் ஓடி ஓடி -ஓடிய
    என் பயணத்தை நிறுத்தி விட்டாயே
    சாலை ஓரத்தில்அனாதையாய் விட்டு விட்டாயே
    விட்டுச் சென்ற கரங்கள் என்னை அழைத்துச் செல்லுமென்று
    முதியோர் இல்லத்து முதியவனாய் ஏக்கத்தோடு
    காத்துக்கொண்டிருக்கிறேன் கள்வன்கூட என்னை களவாட மறுக்கிறானே
    அதோ காண்! தென்னையெல்லாம் என்னைப்பற்றி
    ஏதோ சலசலத்துப் பரிகாசம் செய்கிறது அதனால்தான்
    திரும்பி நிற்கிறேன் முகத்தைக்காட்ட வெட்கப்பட்டு
    நீ என்னை மிதித்தப் போதும்- நான்
    உன்னை உயரத்தில் தானே வைத்திருந்தேன்!
    பழமையை விட்டு புதுமையில்
    பாரதி கண்ட செந்தமிழ்நாட்டைத் தொலைத்து விட்டாயே!
    நீ காணும் பாரதத்தை இதோப்பாரய்யா!
    நஞ்சை நிலமெல்லாம் நஞ்சாகிப் போனதய்யா
    புஞ்சை நிலமெல்லாம் புண்ணாகிப் போனதய்யா
    சாலையோர மரங்களெல்லாம் காணாமல் போனதய்யா
    ஒற்றையடிப் பாதையெல்லாம் மறைந்து போனதய்யா
    ஆறுகள் எல்லாம் கழிவாகிப் போனதய்யா வாழ்க்கை தடம் மாறிப் போனதய்யா
    தூய்மையானக் காற்றில் இன்று துர்நாற்றம் வீசுதய்யா
    நாகரிகம் என்ற சொல்லும் துகிலுரிக்கப் பட்டதய்யா
    மிதிவண்டியாகிய என்னை சாதரணமாக நினைத்துவிடாதே
    வாகன மாசுக்களிலிருந்து இயற்கையைக் காக்கும்
    ஆத்மா இல்லாத ஆத்மா நான்.

  5. நான் ஒரு இயற்கை விவசாயி அப்பா

    காலநேரத்தை சரியாக கணக்கிடும் பட்டதாரி விவசாயி அப்பா

    எதிர்காலத்தில் விவசாயம் தான் அதிக வருமானம் பெற்றுத்தரும் தொழிலாக இருக்கும் அப்பா

    இயற்கையோடு இயைந்த வாழ்க்கை எனது வாழ்க்கை முறை அப்பா

    மிதிவண்டியில் வந்து விவசாயம் காலை மாலை விளைச்சல் நிலம்தான் என் உடற்பயிற்சி கூடமப்பா

    ஏன் செய்கின்றோம்
    எதற்கு செய்கின்றோம்
    எதனால் செய்கின்றோம்
    என்ற சிந்தனை மறந்த நிலையில் தான் செய்வினை செய்பவர்களைப் பார்த்து சில கேள்விகள்

    நடையை மறந்து எரிபொருள் வண்டியில் பயணிப்பதால் இருமடங்கு செலவை அதிகரிக்கிறீர்கள்

    ஒன்று எரிபொருளுக்கு
    மற்றொன்று வைத்தியத்திற்கு

    ஏன் ஒரு முப்பது நிமிடங்கள் முன்னதாக மிதிவண்டியில் செல்ல முடியாதா

    பொது போக்குவரத்தை பயன்படுத்த முடியாதா

    ஒருகாலத்தில் மிதிவண்டி மட்டுமே இருந்த இல்லத்தில் ஆரோக்கியம் மட்டுமே இருந்தது

    இன்றோ
    இருசக்கர வாகனங்கள் இரண்டு
    நான்கு சக்கர வாகனங்கள் ஒன்று
    நோய்களின் எண்ணிக்கையும் ஒன்றுக்கு இரண்டாக

    சிந்திப்போம்
    எது தேவையோ
    அதை தேடுவோம்
    அதை நாடுவோம்
    மற்றதை விடுவோம்

    இலவசமாக
    ஏரோபிளேனே கிடைத்தாலும்
    தேவையில்லை எனில்
    வாழ்க்கை பிளானில்
    இல்லை யென்று
    பிளாக் செய்து விடுவோம்

    சீ.காந்திமதிநாதன்
    கோவில்பட்டி

  6. படக்கவிதைப் போட்டி

    பசுமை வரப்பினிலே
    வரிசையாய் நிற்கும் தென்னை மரமருகே
    உடற்பயிற்சிக்கு ஏற்றதென
    நினைத்தவருடைய மிதிவண்டி

    அழகிய சாலை நெடும் பயணம்
    ஆள் அரவமில்லாமல் வெறிச்சோட
    இரு சக்கரங்களை மிதிக்கும் போது
    மனம் பூங்காற்றில் அமைதியுறுமோ

    எரிப்பொருள் விலையேற்றம்
    பொதுப் பயண மார்க்கங்கள்
    இயங்காத காலமிது என்பதனால்
    மிதிவண்டி பயணத்திலே
    மிதந்து செல்வோம் மனமகிழ்ந்து

    சுதா மாதவன்

  7. மிதிவண்டியும் தென்னையம்

    ஆட்டும் திசையில் ஆடும்
    காட்டும் திசையில் ஏகும்
    நேர்ப்பாதையில் நிமிர்ந்து செல்லும்
    மிதிவண்டியும் தென்னையைப் போலே…

    முதலில் கீழே சறுக்கும்
    மிதித்து ஏறக் கீழ் தள்ளும்
    பழகப்பழகக் கைக்கொள்ளும்
    சீராய் ஏற்றம் கொள்ளும்…

    க(ள்)ல்லும் முள்ளும் கவனம்
    நேர்பாதையில் செல்ல முன்னேற்றம்
    வீண் ஆட்டம் போடாது வாழ – வெற்றிக்
    கனியும் கையில் கிட்டும்

  8. தோலை தூர பயணம்
    தோய்வில்லாமல் செல்ல
    சாலையோரம் எங்கும்
    தென்னை மரங்களை நட்டோம்
    கார்மேகம் வந்து
    மாதம் மும்மாரி பொழிந்து
    வளம் எல்லாம் பெறுக
    வசதிகள் வந்து
    காரில் பயணம் செய்வதாய்
    வரும் தினம் கனவு
    கரங்களாய் நீண்ட கதிர்களால்
    சீதையை சிறைபிடித்த ராவணனாய்
    எங்கள் வாழ்வை
    சிறைபிடித்த சூரியன்
    வானர படை சூழ
    சீதையை மீட்க வந்த ராமனாய்
    விண்மீன்கள் படை சூழ
    இரவில் வந்த வெண்ணிலவு
    இதயத்தை குளிரவைத்ததே
    மெல்ல நகர்ந்திடும் நாடு
    முன்னேற்ற பாதையில்
    பாதைகள் மாறியது சாலைகளாய்
    இன்னும் மாறாத
    எங்கள் வண்டிச்சக்கரம்
    என்றும் துணையாய் வரும்
    மிதிவண்டி சக்கரம்
    வானம் பார்த்த பூமியாய்
    வானம் பார்த்து
    மழை வருமோ என எதிர்பார்த்து
    வாழ்ந்திடும் எங்கள்
    வாழ்க்கை சக்கரம் மாறிடுமோ
    ஓடிடும் மேகம்
    சூரியனை மறைத்து
    சற்றே தாகம் தீர்த்திட
    வானுயர்ந்து வளர்ந்த
    தென்னை நிழலிங்கே
    வளரும் புஞ்சையை
    காத்து நின்றதே
    மறந்து போன
    விவசாயியையும்
    விவசாயத்தையும்
    அது காத்து நின்றதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *