மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மெல்பேண், ஸ்திரேலியா

 அணைத்தால் இன்பம்
     அளித்தால் பேரின்பம்
  பொறுத்தால் விடிவு
     பொங்கினால் முடிவு
  வெறுத்தால் காரிருள்
      விரும்பினால் வெளிச்சம்
  நிலைத்தால் நிம்மதி
      குலைத்தால் பாதாளம்!

  சுமந்தால் சுகம்
     அமைந்தால் ஆனந்தம்
  பிறந்தால் மகிழ்வு
     பிரிந்தால் கலக்கம்
  தேடினால் செல்வம்
     வாடினால் முடக்கம்
  ஓடினால் உவகை
      ஓய்ந்தால் படுக்கை!

  ஆசை ஆபத்து
      அவசரம் பேராபத்து
  தேடல் சிறப்பு
      தெரிவு நல்மதிப்பு
  கோபம் அழிப்பு
     குரோதம் நெருப்பு
  பாவம் படுகுழி
     பக்குவம் வாழ்வே!  

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *