மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண்ஆஸ்திரேலியா

விழுந்தால் விதையாவேன்
எழுந்தால் மரமாவேன்
வளைந்தால் வில்லாவேன்
நிமிர்ந்தால் கணையாவேன் 

பிடித்தால் காலாவேன்
எடுத்தால் கோலாவேன்
வலித்தால் துடுப்பாவேன்
மாக்கடலில் படகாவேன் 

காவலில் கதவாவேன் 
கடும்வெயில் நிழலாவேன்
முதுமையில்  துணையாவேன்   
முழுவாழ்வில் நானிருப்பேன் 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *