பத்மநாபபுரம் அரவிந்தன்

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தைச் சேர்ந்தவர். கடல் வானொலி அதிகாரியாக (Marine Radio Officer) பணி புரிந்துகொண்டிருக்கிறார்.. கணையாழி, படித்துறை, திண்ணை, ஆனந்த விகடன், போன்ற இதழ்களில் இவருடைய குறு நாவல், சிறுகதைகள், கவிதைகள் வெளிவந்துள்ளது. கணையாழி இதழில் ஆழித் துரும்புகள் என்ற தலைப்பில் தன் கடல் அனுபவங்களைத் தொடராக வழங்கியுள்ளார். இவருடைய கவிதைத் தொகுப்பை,'விரிசலுக்குப் பிறகு', என்ற தலைப்பில் வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது.