திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி
கல்வித் தகுதி: புலவர்; எம்.ஏ., எம்.எட்;
பணி : தமிழாசிரியர், இ.ஆர்.மேனிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி - 620 002 (36- ஆண்டுகள் - 2001 பணி நிறைவு)
இலக்கியப் பணி: சமய, இலக்கியச் சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர் (40 ஆண்டுகள்), பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், தொடர் விரிவுரை, கவியரங்கம், கோல உரையாடல்
சிறப்புப் பட்டங்கள் : இலக்கியச் சுடர்; இன்கவித் தென்றல்; இன்தமிழ்ச் சொல்லேந்தல்; நகைச்சுவை இமயம்; பாரதி இலக்கியச் செல்வர், இலக்கிய சேவாரத்தினம்
பெற்ற விருதுகள் :
1. ரோட்டரி சாதனையாளர் (கவிதை விருது) 1997-98
2. தமிழ்ச் செம்மல் (கல்கத்தா தமிழ் மன்றம்)
3. இலக்கியச் செல்வர் (கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம்)
4. சிறந்த நூலாசிரியர்(2005-06) உரத்த சிந்தனை
5. சைவ சித்தாந்தப் புலவர்- 2007 ஸ்ரீ காஞ்சி மடம்
6. பாரதி பணிச்செல்வர் 2007 அ.இ.தமிழ் எழுத்தாளர் சங்கம்
7. குலோத்துங்கன் கவிதை விருது -இலக்கியப்பீடம்
8. சாதனையாளர் -2009 (மனிதநேயப் பேரவை, உரத்த சிந்தனை)
9. பாரதி இலக்கியச் செல்வர் -2009 அ. இ. தமிழ் எழுத்தாளர் சங்கம்.
10. தமிழ் இலக்கிய சேவாரத்னா - 2014 (காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் )
எழுதிய நூல்கள் : 1. ஐயப்பன் அந்தாதி 1995 (ஒலிப்பேழை- உன்னிகிருஷ்ணன்)
2. எழுத்தும் பேச்சும் (மணிவிழா)
3. மொழியும் பொருளும் (மணிவிழா)
4. திருக்காளத்தித் தலச்சிறப்பு.- 2004
5. திருக்குறள் தெளிவுரை 2008 (இலக்கியப் பீடம்)
6. அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர் (ஆசிரியர் குழு)
7. பாரதியின் பேரறிவு 2011
8. தமிழ்க் கடல்மணி 2013(70-ஆம் அகவை)
9. ஐயப்பன் அந்தாதி விளக்கவுரை (அச்சில்)
10. மனங்கவரும் மலர்கள் (அச்சில்)
11. வாட்போக்கிக் கலம்பகம் விளக்கவுரை (அச்சில்)
12. திருக்குறளும் தெய்வத்தின் குரலும்
சொற்பொழிவாற்றிய ஊர்கள் : தமிழகம் முழுவதும், திருவனந்தபுரம், ஆல்வாய், கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, புதுதில்லி, கொல்கத்தா..
சொற்பொழிவாற்றிய நாடுகள்: இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து (இலண்டன்), அமெரிக்கா (பீனிக்ஸ்) மற்றும் மஸ்கட்.