பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுக் கருப்பொருளில் ஆசிரியப் பெருமக்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு



பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுக் கருப்பொருளில் ஆசிரியப் பெருமக்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு



ஸ்ரீ காளீஸ்வரர்
2013ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்பட்ட, சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேற்கிந்திய தீவுகள் அணி உடனான, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இறுதியாகப் பங்கேற்று இருந்தார் சச்சின் டெண்டுல்கர்.
முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அதிகப்படியான விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அந்தப் போட்டியில் சதம் விளாசினார்.
அன்று முதல் தான், அஷ்வின் எனும் கிரிக்கெட் வீரரின் மானசீக ரசிகனாக மாறினேன். ரவிசந்திரன் அஷ்வின், களத்தில் எப்போதும் ஆக்ரோஷமான விளையாட்டு வீரராகவே நின்றார்.
2014ஆம் ஆண்டு, இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி, நியூசிலாந்தில் நடைபெற்றது.
முதலில் நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருந்ததால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பைத் தக்கவைக்க முடியும் எனும் நிலையும் இருந்தது.
ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் இழந்துவிட்ட நிலையில், களத்தில் இருந்தது அஸ்வினும் ரவீந்திர ஜடேஜாவும் தான்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய அஷ்வின், 65 ரன்கள் விளாசி இருந்தார். இறுதியில், ஜடேஜாவின் முயற்சியால் அந்தப் போட்டி சமநிலையில் (tie) முடிந்தது.
அந்தப் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அப்பொழுது வெறும் பத்து வயது தான்.
இந்தியா போன்ற பரந்து விரிந்து 140 கோடி மக்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு தேசத்தில், இந்தியக் கிரிக்கெட் அணியில் 11 வீரர்கள் மட்டுமே களத்தில் இடம் பெற முடியும்.
அதிலும், தமிழ்நாட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் நீடித்த இடம் பிடித்த வீரர்கள் மிக மிகச் சிலரே. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்ற வீரர்களுக்குப் பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராக அஷ்வின் புகழ் பெற்றார்.
540க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது வீரர் என்னும் சாதனையோடு தன்னுடைய ஓய்வு முடிவை, 2024 டிசம்பர் 18ஆம் தேதி அறிவித்திருக்கிறார். இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அஷ்வின் ஓய்வு அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரும், மகேந்திர சிங் தோனியும் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் இல்லை. கிரிக்கெட் விளையாட்டு என்பதையும் கடந்து, இந்திய ரசிகர்களின் உணர்வாகவே மாறி இருக்கிறது. இந்த உணர்வுப்பூர்வமான பந்தத்தின் வரலாற்றில், நிச்சயமாக அஷ்வின் நீடித்திருப்பார்! நிலைத்திருப்பார்!

2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் உயரிய இலக்கிய விருதான ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ விழா 27.11.2024 அன்று கொழும்பு, அலரி மாளிகையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்களில் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’ எம். ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘அபராஜிதன்’ நாவலுக்கு வழங்கப்பட்டது.
அத்தோடு திராவிடியன் ஸ்டாக் பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பான ‘அரேபியப் பெண்களின் கதைகள்’ மற்றும் எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பு சுயசரிதை நூலான ‘ஊழின் அடிமையாக வேட்கை தணிக்கும் பெண்ணின் கதை’ ஆகிய எம். ரிஷான் ஷெரீப்பின் ஏனைய இரண்டு நூல்களும் வெவ்வேறு பிரிவுகளில் சாகித்திய விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இன்று உயர்கல்வி அமைச்சராகப் பதவியேற்றுள்ள கோவி. செழியன் அவர்களுக்கு வாழ்த்துகள்
படத்தில்: கோவி செழியன், அண்ணாகண்ணன், ஹாஜா கனி
நாங்கள் மூவரும் 2011ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரே மேடையில் முனைவர் பட்டம் பெற்றோம்.
திமுகவில் வாரிசு அரசியல் கோலோச்சினாலும் உழைக்கும் தொண்டர்களுக்கும் உயர்வு உண்டு என்பதைக் கோவி.செழியனின் நியமனம் காட்டுகின்றது.

சக்தி சக்திதாசன்
இங்கிலாந்து
காரைக்குடியில் 1939ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 2,3 ம் நாட்களில் கம்பனின் தமிழ்த்திறனைப் போற்றி சமுதாயத்துக்கு எடுத்துச் சொல்ல சா.கணேசன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே காரைக்குடி கம்பன் கழகம்.
கம்பனில் மோகம் கொண்ட அமரர் சா.கணேசன் தமிழின் மீதும், தமிழின் முன்னோர்கள் மீதும் அளவிலா ஆர்வம் கொண்டவர்.
இந்திய தேசிய காங்கிரஸ், பின்னர் சுதந்திரா கட்சி எனும் கட்சிகளில் இணைந்து இந்திய விடுதலைப் போரிலும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் முன்னேறத்துக்காக அரசியலில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பின்னர் தமிழக மேலவை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
கம்பன் கழகத்தை அமைத்து கம்பருக்காக திருநாள் எடுத்தவர் சா. கணேசன். அனைவருக்கும் “கம்பனடிப்பொடி” எனும் கெளரவப் பெயரால் அறியப்படுபவர்.
காரைக்குடியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம் இன்று தமிழகத்தின் பல பாகங்களிலும், சர்வதேச அளவில் தமிழர் செறிந்து வாழும் பல நாடுகளிலும் கிளைகள் பரப்பி கம்பனின் தமிழ்ரசக் கனிகளைத் தாங்கி நிற்கிறது.
இலங்கையில் கம்பனடிப்பொடியின் நேரடி ஆசியுடன் உலகெங்கும் பறந்து கம்பனையும் தமிழையும் போற்றி வருகிறார் ஐயா இலங்கை ஜெயராஜ்.
அந்த வழியில் இன்று தமிழர்கள் செறிந்து வாழும் ஐக்கிய இராச்சியத்தில் இலண்டன் மாநகரில் கோலாகலமாக கம்பன் கழக இலண்டன் கிளை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
கம்பன் தமிழையும், தமிழிலக்கியத்தையும் கண்ணெனப் போற்றும் அன்பர்கள் ஒன்றிணைந்து யாம் பெற்ற இன்பம் பெறுக இங்கிலாந்து வாழ் தமிழர் என்பதற்காக இக்கம்பன் கழகத்தை தோற்றுவித்துள்ளார்கள்.
இவ்வங்குரார்ப்பன விழாவிற்காக தாய்த்மிழ்ப் பின்புலங்களில் இருந்து பண்பட்ட பேச்சாளர்கள், தமிழறிஞர்கள் வந்திருந்தார்கள்.
குறிப்பாக ” கம்பவாரிதி ” எனப் பெயர் பெற்ற திரு இலங்கை ஜெயராஜ்.
தமிழகத்தில் புகழ் பெற்ற பட்டி மன்ற பேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர் திருமதி பாரதி பாஸ்கர்,
தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளரும், ஆவணப்பட இயக்குனர், தயாரிப்பாளர் தமிழறிஞருமான திரு. பாரதி கிருஷ்ணகுமார்.
இலங்கை தமிழ் மற்றும் சமயச் சொற்பொழிவாளர் தமிழருவி சிவக்குமார்.
இலங்கையின் மற்றொரு சிறந்த இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர் முனைவர் ஸ்ரீ பிரசாந்தன்.
முன்னால் மலேசிய துணை அமைச்சரும், தமிழ் ஆர்வலருமான திரு டத்தோ சரவணன்.
எனப் புகழ்பெற்ற பலரும் கலந்து கொண்ட இரண்டு நாட்கள் நிகழ்வு கடந்த ஜூலை 13,14ம் தேதிகளில் லண்டன் அல்பேர்ட்டன் சமூகக் கூட்டரங்கு மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு ஆரம்பித்து சுமார் இரவு 10 மணி வரை நடந்தது.
பட்டிமன்றம் , உரையரங்கம், நாட்டியநாடகம் எனப்பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
துரதிர்ஷ்டவசமாக பல மாதங்களுக்கு முன்னராகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்ததால் முதலாம் நாள் அங்குரார்ப்பன நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.
இரண்டாம்நாள் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு நானும் எனது மனைவியும் நண்பர் ஒருவருடன் மூன்று மணிக்கு முன்னதாகவே மணடபத்தை அடைந்து விட்டோம்.
மண்டப ஒழுங்கு மிக நேர்த்தியாகவே அமைக்கப்பட்டிருந்தது.
வாசலிலேயே தமிழ்க் கலாச்சாரப் பிரகாரம் மங்கக விளக்கின் ஒளியுடன் வரவேற்கக் காத்திருந்தார்கள்.
கையில் லண்டன் கம்பன் கழக விழா மலர் கையளிப்புடன் மண்டபத்தினில் நுழைந்தோம்.
மண்டபம் நிறைந்து வழிந்தது அதிர்ஷ்டவசமாக மண்டபத்தின் பின் இருக்கைகளில் சில எமக்குக் கை கொடுத்தன.
மண்பத்தினுள் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது அங்கேருக்கும் ஓரிரண்டு இருக்கைகளில் யாராவது இருக்கிறார்களா ? என்று விழா அமைப்பாளர்களில் ஒருவர் வந்து வினவி புதிதாக வருபவர்களை உட்கார வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.
இருக்கைகள் மண்டபத்தின் உள்ளே நிரம்பியதால் வெளியே வரவேற்புகூடத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சியின் முன்னால் ஒரு ஐம்பது இருக்கைகள் போடப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிகள் நேரலையாக அத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.
இலவசமாக விருந்தினர்க்கு தேநீர் கூடத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.
இரண்டாம் நாள் நிகழ்வின் ஆரம்பம் அழகாகத் தொகுப்பாளரினால் விவரிக்கப்பட்டது.
மங்கல விளக்கேற்றலையும் வரவேற்புரையையும்,தகைமை உரையையும் அடுத்து இங்கிலாந்திலே பிறந்து இங்கு பல்கலைக்கழகத்தில் புகுமுக மாணவர்களாக இருக்கும் ஒரு யுவனும், ஒரு யுவதியும் தமிழில் சிந்தனையரங்கத்தை ஆரம்பித்தார்கள்.
அது பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமாரின் முன்னிலையில் நடந்தது.
மிகவும் அருமையாக கம்ப இராமாயணத்தைப் பற்றி அவ்விளைஞனும், வளரும் தலைமுறை மத்தியில் தமிழின் வளர்ச்சி பற்றிய கருத்துரையை அந்த இளம் மாணவியும் உரை நிகழ்த்தினார்கள்.
அதைத் தொடர்ந்து பேசிய பாரதி கிருஷ்ணகுமார். இளைய பேச்சாளர்களின் திறமையை வெகுவாக பாராட்டி தனக்கெயுரிய நகைச்சுவை கலந்த பேச்சுடன் அரங்கை மகிழ்ச்சியிலாழ்த்தினார்.
தொடர்ந்த இளம் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட இராமாயண நாட்டிய நாடகம் செவிகளுக்கும், கண்களுக்கும் விருந்தாக அமைந்தது.
முழு இராமாயணத்தின் சாரத்தையே வெறும் ஒரு மணி நேரத்துக்குள் அதன் மையக் கருத்துக் குன்றாமல் அச்சிறு நடிகர்கள் நிகழ்த்தியமை அரங்கத்தையே மகிழ்வான வியப்புக்குள் ஆழ்த்தியது.
இடைவெளியின் போது தமிழ் இலக்கிய நயத்தைக் குறிப்பாக கம்பனின் நயத்தை விருந்தாகத் தந்த அமைப்பினர் மிகவும் நியாயமான விலையில் சிற்றுண்டிகளை அளித்து வாய்க்கும் சுவையளித்தார்கள்.
இடைவேகைக்கு சற்று முன்னதாக மக்கள் பணிக்காகச் சேவையாற்றுபவர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலர் மாண்பளித்துக் கெகரவிக்கப்பட்டார்கள்.
இடைவேளையைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த பட்டிமன்றம் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
தலைப்பு கம்பைராமயணத்தின் வீரம் செறிந்த நிலம் இராமனின் அயோத்தியா ? அன்றி இராவணனின் இலங்கையா ? என்பதுவே அயோத்தியே என்று தமிழருவி சிவக்குமார், பாரதி கிருஷ்ணகுமார், ஆகியோர் வாதிட இலங்கையே என பேச்சாளர் ஸ்ரீ பிரசாந்தன், திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் வாதிட்டனர்.
மிக நீண்ட ஆய்வுக்குப் பின்னர் அயோத்திதான் வீரம் செறிந்த நிலம் என்று நடுவர் கம்பவாரிதி தீர்ப்பளித்தார்.
சிறப்புரை மாண்புமிகு முன்னாள் மலேசிய துணையமைச்சர் டத்தோ சரவணன் அவர்களால் வழங்கபட்டது.
அருமையான நிகழ்வுகளுடன் இனிதே முடிந்த விழாவின் இறுதியில் அனைவருக்கும் அருமையான சாத்வீக விருந்தளித்து விடைதனுப்பி வைத்தார்கள்.
இவ்விழாவில் நீண்ட நாட்களுக்குப் பின்னால் பல தமிழ் இலக்கிய ஆளுமைகள், இலக்கிய நேசர்கள் எனப் பகரச் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது எனது பாக்கியமே !
எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்குப் பின்னாலும் பல காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மனங்களில் கம்பனின் ஆளுமையும், அதனுடன் கலந்த இலக்கிய நேசமும் எத்தகைய ஆழமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது.
தமிழை நேசிப்பவன், தமிழை வாசிப்பவன், தமிழை யாசிப்பவன் எனும் ஒரு சாதாரண பாமர ரசிகனின் உள்ளக் கிடக்கையை வெளியிட வேண்டியது எனது கடமை என எண்ணுகிறேன்.
விழா முடிந்த பின்னால் விழா அமைப்பாளர்கள் ஒருவருடன் பேசும் சந்தர்ப்பம் கிட்டியது.
இலண்டனில் அதுவும் புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் ஒரு சாதாரண பிறந்தநாள் விழாவிற்கே ஏற்படும் செலவினைப் பற்றி அறிந்தவன்.
இத்தகைய அளவில் இலக்கிய விழா ஒன்றை அமைப்பதில் உள்ளப் பொருளாதார, நிர்வாகச் சிக்கல்கள் உணரக்கூடியதே.
இவ்விழாவிற்கான செலவினில் பல நல்ல உள்ளங்கள் விழா அமைப்புக்குழுவிற்கு உதவியதை அவர்களே பிரசுரத்தின் மூலம் தெரியப்படுத்தி உள்ளார்கள்.
இலவச அனுமதியுடன் தேநீர் இரவு உணவு உபசாரங்களுடன் விழா நடைபெற்றது.
அங்கே மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் நன்கொடை செய்ய விரும்புவோர்களுக்கான பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இரண்டு நாட்களையும் சேர்த்து அண்ணளவாக ஆயிரம் பார்வையாகர்கள் வந்திருந்ததாக அவ்வமைப்பாளர் சொன்னார்.
அமைப்பாளர்கள் ஒரு தேநீர் லண்டன் காசில் ஒரு பவுண்டு என்று அறவிட்டிருந்தால் கூட சுமார் 800 பவுண்டுகள் வரை அதவது இந்திய ரூபாய் எட்டு லட்சம் அறவிட்டிருக்கலாம்.
ஆனால் அங்கிருந்த நன்கொடைப் பெட்டிகளின் மொத்தம் அதன் அரைப்பங்காவது வந்திருக்குமா என்பது சந்தேகமே !
ஒரு சினிமா பார்ப்பதற்கு 15 பவுண்டுகள் கொடுக்கிறோம்.
சினிமா நடிகர்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு குறைந்தது 30 பவுண்ட்ஸ் கொடுத்துக் கலந்து கொள்கிறோம்.
அதைப் பார்ப்பது தவறென்பதல்ல எனது வாதம் ஏனெனில் ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியும் அவர்களது தெரிவு.
ஆனால் இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து கம்பன் எனும் கவிச்சக்கரவர்த்தியின் தமிழை ரசிக்க வந்த ரசிகர்கள் எத்தனை தூரம் இதைப்பற்றிச் சிந்திக்கிறார்கள் என்பதுவே கேள்வி.
எமது அடுத்த தலைமுறையை நோக்கி இலக்கிய நகர்வுகளை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டுமானால் அருகி வரும் பார்வையாளர்களின் பங்களிப்பின்றி நிறைவேறாது.
அடுத்த வருடம் கம்பன் விழாவில் சந்திப்போம்.

Baskar Seshadri
Old Mylaporeans and those who frequent Luz may surely know Zenith watch company at the tip of Kutchery road close to the old Roundtan circle.
Manikpasha single handedly started this venture of clock and Watch repair centre decades back and in a very short span he became a famous person. There were no many people in the service market in those days and whoever has any idea to get their clock or watch repaired has to go to Esplanade, the so-called Parrys corner.
Zenith is much popular because the service centre can handle any type of servicing of any clocks or watches. Be it a carrier clock, Cuckoo clock, winding clocks, Yearly winding ones or Grandfather Clock Zenith has spares of all kinds of old versions too and in case if it doesn’t have one, they can procure the same in two days and get the servicing done in just four days Maximum to the Entire Satisfaction of the Customer.
Zenith is also famous repairing the wrist watches of all popular and imported brands. Be it Seiko, Citizen, HMT, Omega Rado and any number of Brands. If you feel you have a very old vintage watch or clock of those days and if you wish to get it serviced Head on Zenith. They have their shop at 111, kutchery Road, Mylapore near Luz Junction. They are open at Ten am and closes by Eight pm with no Break. Sunday is closed.
They have become expert in fixing Japanese and Swiss Watches and many people who could not get the defect serviced elsewhere do knock the Doors of Zenith.
Now Mehboob Pasha son of Mr Manikpasha is looking after the shop ably assisted by Mr Hussian and Mr Ikram Service staff. In case of assistance Please contact them at 044 – 24620596.
Today Manikpasha is more a happy man with an established firm. And he had never thought that his shop which he started would be owned by him one day. And it happened in Ten Years of The Inception of Zenith. Now in 2024 Zenith is in its Seventieth Year.
With an excellent service support at a moderate fee and Reputation it’s no wonder Zenith had accomplished this Feat.

Baskar Seshadri
Giri, a premier retailer of Indian traditional and religious products, is thrilled to announce the grand launch of its first showroom in Sunnyvale, California. on 13th June ,2024 . This significant expansion allows Giri to bring its extensive range of authentic spiritual items to a broader audience, catering to the Indian diaspora and enthusiasts of Indian culture across America. The new showroom aims to serve as a cultural hub, fostering a deeper connection to Indian traditions and spirituality.
Founded over 70 years ago, Giri has become a household name for those seeking high-quality spiritual products. This presence not only brings Giri’s extensive range of authentic items closer to customers in the U.S., but also fosters a deeper connection to cultural and spiritual traditions. By establishing a foothold in the United States, Giri aims to continue its legacy of excellence and support the spiritual practices of individuals and families in a new, dynamic market. Additionally, Giri’s robust e-commerce platform ensures that its wide array of products is accessible to a global audience, enhancing convenience for its customers.
The new U.S. showroom will showcase an extensive selection of Giri’s renowned products including books, pooja essentials, Indian festivity products, idols, handicrafts, Yantram, and much more., providing customers with convenient access to high-quality spiritual and religious items within their locale.
Speaking on the occasion, “We are thrilled to bring Giri to the United States,” said Mr. TS Ranganathan, CEO of GIRI Inc. “Our new showroom represents a significant milestone in our mission to connect individuals with India’s rich spiritual traditions. We are committed to offering our American customers the same high standards of quality and authenticity that have earned us their trust in India for over seven decades.”
In Photo Centre – Sri Thiruvaiyaru Krishnan -Right – Sri Mani Krishnan, Shastha Foods, Backside Image is Sri Jayaram Venkitu, Idly Express, Mylapore.


Baskar Seshadri
Naturopathy is an art and science of living and healing. It’s a system of drugless Intervention to cure the cause of diseases instead of treating the symptoms. Naturopathy treatment detoxifies and remove the toxins from the body.
Naturopathy has various types of treatment. Clay Therapy, Plantain leaf bath, Hydrotherapy, Chromo Therapy and few more are there in this branch of Treatment. Acupuncture, Massage and Yoga is also part of this naturopathy.
Dr Iswarya’s Nature Cure Centre was opened on 1st May. This centre treats for the ailments like Allergy, Asthma, Sinus, Hair fall, PCOD and many more. This centre opens at Nine am and closes at nine pm with a short lunch break in the Noon.
The address is 44/1 Venkatakrishna Road, Mandaveli and at the Southern tip of Devanathan Street.
Digital payments are accepted for the Medical Service and this centre has lift facility too.
Dr Iswarya can be reached at 96000 70597. Iswarya is the First-Generation Doctor who did her BNYS in Chennai.
This Centre is well equipped in all aspects and this is her second Venture here. She opened a similar centre Three Years ago In Mogappair west. Treatments are being done only on appointments and to fix the same with the centre Please reach 044 -3139 1774.
Dr Iswaryas Nature Cure Center is certainly a Promising Naturopathy Institution and Her Confidence and dedication to this branch of naturopathy is to go places.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை
தென்மார்க்கு நாட்டில் தென் கயிலை ஆதீனம் (திருகோணமலை) இளைய பட்டம் மீது தாக்குதல்.
காலம்: இன்று வைகாசி 8 புதன்கிழமை (22. 5. 2024) காலை 11.30 மணி
இடம்: புது தில்லி சாணக்கியபுரி இராதாகிருஷ்ணன் சாலை தென்மார்க்கு தூதரகம்.
பங்கேற்றோர்: இந்து மக்கள் கட்சித் தலைவர் அருச்சுனர் சம்பத்தர், இமக பொறுப்பாளர் வாலாசா கண்ணன், ஆன்மிகர் சோமசுக்கந்தர் குருக்கள், கல்வியாளர் சரவணன்.
தென்மார்க்கில் சமூக ஈனர்களால் கொடும் தாக்குதலுக்கு உள்ளானவர் திருகோணமலை தென் கயிலை ஆதீனம் இளைய பட்டம் தவத்திரு திரு திருமுருகன் தம்பிரான் சுவாமிகள்.
தென்மார்க்கில் அருள்மிகு வேல்முருகன் திருக்கோயில் பூசகராகப் பணியாற்றி வந்தார்.
நான்கு பேர் முகமூடியுடன் வந்தனர். நள்ளிரவில் வந்தனர். சுத்தியல்களால் அவரைத் தாக்கினர். கொல்ல முயன்றனர்.
செய்தி அறிந்த திருக்கோயிலார் குருதி கொட்டக் கொட்டப் பூசகரை மருத்துவமனையில் சேர்த்தனர். இளை கட்டிப் புண்கள் மாறி வருகின்ற நிலையில் உள்ளார்.
கோயில் அருச்சகருக்காக நீதி கேட்டும் உரிய விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரியும் வருங்காலத்தில் இத்தகையன நடைபெறாமல் தடுக்க வேண்டியும் தமிழ்த்திரு அர்ச்சுனர் சம்பத்தர் இந்து மக்கள் கட்சி சார்பில் எழுத்து மூலமாக கோரிக்கையை புது தில்லியில் உள்ள தென்மார்க்குத் தூதரகத்தில் இன்று கையளித்தார். அவரோடு திரு கண்ணன், தவத்திரு சோமாசுக்கந்தக் குருக்கள் மற்றும் திரு. சரவணன் தூதரகத்துக்குச் சென்றனர்.படங்கள் பார்க்க.


Baskar Seshadri
Meet Young Sooraj Viswanathan of Mandaveli. He is a lawyer by profession but he had a fire in the belly to make it big and ventured into sports area. He himself is a sports enthusiast and thought of making a new Venture his life time ambition. He did not roam in the market for such a space since he decided his own old house to be the apparel shop. He modified his house with the best of Interiors and today it’s called Sports Den – A new sports outlet in Mandaveli almost first of its kind in this periphery.
This den has all the apparels of all major sports viz Tennis, Badminton, Table Tennis and Pickle Ball. Pickle Ball is a new sport to India but a very famous one in United states. This apart he has a wide range of Running Shoes of all sizes and this is almost a sports utility point. From a lovely tennis racket to all kinds of Sports accessories this shop can be counted on. Since he had ventured into his interesting area, he had shelved his law activity and had decided to concentrate on this new project.
More Interesting about this Den is the lovely Pickle ball court. This huge court had been designed by Suraj and this is specially Built for Pickle ball. Those who are interested to play can come to use the Court for a nominal sum. This is on Hourly Basis.
What’s More interesting is it’s a 24×7 Court. If you feel like cherishing after a late-night work, you can just drop in and have a play with your friends. What if you are hungry and thirsty? No worries. He has a coffee shop and beverage counter too with some snacks to offer. This was inaugurated this Evening by the Ace Tennis Player Tennis Krishnan.
Sports Den is A not to miss sports Joint. Take your loved ones in this summer vacation to this Den. They will love you more.
Sports Den is at 32/68 Fourth Trust Cross Street, Mandaveli, Chennai 28. Adjacent to Chaitanya School Sooraj can be Reached on 95000 13932.

Baskar Seshadri
Mylapore is all set to lose one major landmark building. The 127 years Jammi building is going for a revamp and all connected works in regard to the development project is on and any time the primitive building on Royappetah high road may get razed. This pharma major mainly became very famous due to effective ayurveda medicines. It was initially Jammi Liver cure when it was founded by Jammi Venkatramanayya decades back.
The name he had created in this periphery for his medicines was astonishing. In 1939 Jammi Venkatramanayya passed away. This Ayurveda practitioner came from Andhra Pradesh to have his trade and soon he developed Branches in various other states. He used to conduct the Medical Camp in various locations. Now after the days of Jammi his sons are looking after the activity. All clearances are made and the Builder is all set to take over for the Project. Its BBCL, a Chennai Based Builder. Dr. Narasimmhan V Jammi is the Director of Jammi Pharmaceuticals.


Baskar Seshadri
It was dark. Shanmugayya noticed a lorry accident near the railway track in Tenkasi and sensed something would go wrong if the train passes the track.
He immediately rushed to his wife and both together raised voice against the oncoming train. And to be in safe side he used his torch and showed it to the engine driver making him to realise the danger.
The rail was stopped and a major accident was averted.
Shanmugayya 60 did not bother about his age and took all the efforts to take the terrain and made it to the track to make this feat.
Loco pilot of the rail was too happy to be part of this Incident.
Tamilnadu Government had announced a reward of Rs Five Lakhs to the couple.
What a Great and marvellous Work he had done with his wife? Salutes to this Couple.

Baskar Seshadri
Vijaykanth who passed away today (28th Dec 2023) had a bright Future in Politics at some point of time after he contested the elections and secured close to nine Percent of votes. This he did opposing both Jayalalaitha and Karunanidhi. It was a master stroke at that time. With no big social media, he was able to achieve this. Later During elections after aligning with ADMK He was able to get twenty-Nine MLA’s elected. In-fact it was his best support that made Jaya to win in the election at that time. Later he parted ways due to uncontrolled emotions and lost balance in public places.
Remember the slap he gave to one of his Volunteer in full Public View? Had he contested the election aligning with DMK, Kalaignar could have come to power in 2016. But he kept away from DMK.
In other words, it was captain who made Jaya to come to power and also made DMK to Lose in 2016. He was a real strong man who was aiming high and was able to reach better Heights with the mass support and Cinema Glamour. But he failed to use the sentimental cinema glamour beyond a point and there started his fall.
If only had he grown better at the same speed he was travelling he could have become the chief Minister of Tamilnadu in the absence of Jaya and Kalaignar.
But sadly, he missed the Bus. Today he is no more.
I am sure the Glamour of Tinsel world is not dead. It’s a mass Movement that matters and voters don’t see the background of the Messiah as voters mostly are emotional in Tamilnadu.
Captain did his best in the film industry with all his helping tendency and was able to give life to the Nadigar Sangam.
He is a do gooder and a nice Samaritan. If only he had a better guide and adviser probably, he could have done the election Politics better.
But it was Otherwise. A big crowd puller and a mass hero Could not do what he Thought in Tamilnadu. That was Sad. And We could not help.

Baskar Seshadri
Kavikko Convention Centre or Hall is one of the famous meeting halls in the Periphery of Mylapore. Though the hall has been functioning for quite long years, recently the total hall and the building had been renovated which now looks beautiful with the best of aesthetics.
The hall is fully air conditioned and it can accommodate Two Hundred Persons. This place is ideal for all Kinds of meetings, Book Release function, literary meet and small Music Programmes too.
The managers do provide Podium Mike free of cost and hand mike if needed be. If one is interested to use the projector for any Presentation it will be provided free of cost. Since it’s situated in CIT Colony close to TTK Road side parking may not cause any hindrance to the visitors of the hall and to those who live nearby. Besides the hall managers can provide some assistance to facilitate parking of cars and two wheelers.
The hall is available for three segments of Programmes. One is from Nine am to two in the noon and the other is between three to nine in the night. One can avail the Booking for the whole day also. The Fees are moderate and this is one of the Best Bet to those who are looking for a Perfect Auditorium in this Region.
In case of assistance Mr. Abu reached for more Details on 9444025000. The Address of the Centre is 6, Second Main CIT Colony, Alwarpet, Chennai 600018.