Author: editor

  • பேரூர் சுவாமிகளின் ஆன்மா இறையடி நிழலில் …

    சைவமும் தமிழும் இரு கண்களென போற்றி தொண்டாற்றிய பெருந்தகை தவத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் ஐயா அவர்களுக்கு நம் இதய அஞ்சலியை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆகச்சிறந்த சொற்பொழிவாளரும், ஆன்மீகவாதியும், பெரிய புராணத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அடியாரின் ஆன்மா இறையடி நிழலில் சாந்தி பெற உளமாரப் பிரார்த்திக்கிறோம்.

    Share
  • பாதுகாப்பற்ற காப்பகங்கள்?

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்தியாவிலுள்ள மொத்த 2874 குழந்தைகள் காப்பகங்களில் 54 காப்பகங்கள் மட்டும் சரியான முறையில் நிர்வகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லம் போன்றவைகள் ஒற்றை இலக்கத்தில் உள்ளவைகளே குழந்தைகள் முழுமையான பாதுகாப்புடன் வாழ்வதற்குரிய அனைத்து ஆவணங்கள் வைத்துள்ளனர் என்று உச்சநீதி மன்றத்தில் குழந்தைகள் பாதுகாப்பு உரிமை தேசிய ஆணையம் (NCPCR) அறிவித்துள்ளது வேதனைக்குரியது. ஒழுங்கான கணக்கு, வழக்குகள் வைத்திருந்தாலே பீகாரில் பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட துயமரான நிகழ்வுகள் ஏற்படாது என்றும் காப்பகங்கள் பற்றி யாருக்கும் எந்த விதமான அக்கறையும் இல்லை என்றும், இது குறித்து நீதி மன்றமே கையறு நிலையில் உள்ளது என்றும் உச்சநீதி மன்ற நீதிபதி லோகூர் அவர்கள் வாய் மொழியாகத் தெரிவித்துள்ளார் .. 🙁

    Share
  • படக்கவிதைப் போட்டி (176)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முத்துக்குமார் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நீங்களே பறித்துக் கொள்ளுங்கள்!

    பவள சங்கரி

    அமெரிக்கா, அயோவா நகரத்தின் வடக்கே அமைந்துள்ள ஒரு யூ-பிக் – நீங்களே பறித்துக் கொள்ளுங்கள் – ஆப்பிள் பழத்தோட்டம் வில்சன் தான். பழைய ஓக் காடுகளால் சூழப்பட்ட இந்த பண்ணை, பள்ளத்தாக்கின் இரு பக்கங்களிலும், ராபீட் கிரீக் நிலத்தை சூழ்ந்துள்ளது.


    வில்சன் ஆர்ச்சர்ட் ஐயோவா நகரில் ஒரு பெரிய பழத்தோட்டம். மிகப்பெரிய பரப்பளவில் பெரியவை, சிறியவை, பச்சை நிறங்கள், மஞ்சள் நிறங்கள் என பல வகையான ஆப்பிள்கள் விளைகின்றன. அதனோடு ஊடு பயிராக மஞ்சள் பூசணியும் விளைவிக்கிறார்கள். இந்த விவசாயத்தை இவர்கள் குடும்பத் தொழிலாக செய்கின்றனர். இங்கு அமெரிக்காவில் ஆப்பிள் தோட்டம் வைத்திருப்பவர்கள் ஆப்பிள் பிக்கிங், அதேபோல் ஸ்டிராபேர்ரி, செர்ரி பிக்கிங் என்றும் விவசாயிகளும் பொது மக்களும் சந்திக்கக்கூடிய நிலையை ஏற்படுத்துகின்றனர். தேன் சேமிப்பும், விற்பனையும் கூட உண்டு. இங்கு ஆப்பிள் பறிக்க வருபவர்களைக் கவரும் விதமாக ஆப்பிள் மூலம் தயாரிக்கக்கூடிய இரசாயணக் கலவை கலப்படமற்ற சுத்தமான ஆப்பிள் பழக்கூழ் மட்டுமல்லாமல் மற்றும் பல வகையான இனிப்புப் பண்டங்களையும் செய்து விற்கின்றனர். குறிப்பாக ஆப்பிள் ஜாம், டோ நட், பழ ரசம், ஆப்பிள் டர்ன் ஓவர், ஆப்பிள் – பை போன்றவைகள். அந்த பழத்தோட்டத்தை சுற்றிப்பார்க்க டிராக்டர் கூட உண்டு .. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அனைத்துப் பணிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரித்துக்கொண்டு திறம்பட நிர்வாகம் செய்வது சிறப்பு. அமெரிக்க விவசாயிகள் இப்படி பொது மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு வர்த்தகம் செய்து சிறப்பாக வளர்ச்சியடைவது மகிழ்ச்சிக்குரியது ..

    நமது விவசாயிகள் நம் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் பொது மக்களோடு நேரடித் தொடர்பு ஏற்படும் வகையில் நம்ம ஊர் விளை பொருட்களாகிய கத்தரி, முருங்கை, தக்காளி, மற்ற பழங்கள் போன்றவைகளை இது போன்று பொது மக்கள் நேரடி கொள்முதல் செய்யும் வகையிலும் அதோடு இது போன்று சார்புடைய பொருட்களை தயார் செய்யும் தொழிலகமும் கூட்டுறவு முறையில் உற்பத்தியும், பொருளாக்கமும் செய்தால் நம் விவசாயிகளின் வாழ்க்கையும் எங்கோ உயர்ந்து நிற்க வழி வகையாக அமையுமே! தர்மபுரி, கிருட்டிணகிரி பகுதிகளில் வாழக்கூடிய நமது விவசாயிகள் மாம்பழத் தருணத்தில் இது போன்று பல வகைப் பொருட்களை தயார் செய்தும் விற்பனை செய்தால் எத்தனை இலாபம் சம்பாதிக்கலாம் .. விவசாயிகளின் பார்வையே மாறுபட்டு தொழிலதிபர்களாகவும் திகழலாம்! பொன் விளையும் பூமி என்று இதற்குத்தான் நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றார்களோ !

    ஆப்பிள் தோட்டத்தில் வேண்டும் அளவு சாப்பிட்டுவிட்டு வரலாம். அதற்கு விலை இல்லை. கையில் எடுத்து வரும் பழங்களுக்கு மட்டும் விலையுண்டு. சீசனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே விலைதான்.. அதனால்தானோ என்னவோ இங்கு விவசாயிகளின் வாழ்க்கை ஒரே சீராக நல்ல நிலையிலேயே இருக்கிறது. நம் ஊரில் தக்காளி ஒரு தருணத்தில் கிலோ 50 காசுகளுக்கும், விளைச்சல் குறையும் காலங்களில் 60 உரூபாய் கூட விற்கிறார்கள். இந்த முறை மாற்றம் அடைய வேண்டும். சந்தைப்படுத்தும் முறையில் பல தொழில்நுட்பங்களைப் புகுத்தி சிறப்படைய முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசு அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்!

    Share
  • நடுவண் அரசின் சிறப்பான நடவடிக்கை!

    பவள சங்கரி

    மத்திய அரசு மக்கள் நலனுக்காக எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைக்கு பாராட்டுகள்! இதுவரை தங்கம், வெள்ளி போன்ற பொருட்களுக்கு மட்டும் இருந்த தரக்கட்டுப்பாடு சென்ற வெள்ளிக்கிழமை முதல் சேவைத்துறைக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தரக்கட்டுப்பாடு தங்கத்திலிருந்து, குடிக்கும் நீர் வரை, தொலைத்தொடர்புத் துறையிலிருந்து, விமானச்சேவை, இணையம் மூலமான வர்த்தகம், மருத்துவ சேவை போன்ற 12 வகையான சேவைகளும் தரக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. சுற்றுலா, தங்கும் விடுதி, உணவு விடுதி, போக்குவரத்து, நிதி நிறுவனச் சேவை மற்றும் வழக்கறிஞர் சேவை போன்ற அனைத்தும் இதற்குள் அடங்கும்!

    Share
  • படக்கவிதைப் போட்டி (175)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    சாந்தி வீஜே எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • ஆகச்சிறந்த ஆன்மாவிற்கு புகழஞ்சலி!

    முன்னாள் பிரதமர், உயர்திரு அதல் பிகாரி வாஜ்பாயி, தமது 93ஆம் அகவையில், இன்று (16/8/2018) மாலை 5 மணிக்கு இயற்கை எய்தினார். தேசிய சனநாயகக் கூட்டணி அரசின் பிரதமராக, 1999 முதல் 2004 வரை கடமையாற்றிய காலத்தில், இந்தியா சந்தித்த பல சோதனைகளை மிகத் திறம்பட நிர்வகித்த பெருமைக்குரிய ஒப்பற்ற அரசியல்வாதி. இவற்றுள் பொக்ரான்-2 அணு பரிசோதனை, பாக்கித்தானுடனான கார்கில் யுத்த வெற்றி, போன்றவை குறிப்பிடத் தக்கவை !

    ஆகச்சிறந்த கவிஞரான திரு வாஜ்பாய் , ஆங்கிலத்திலும், இந்தியிலும் அற்புதமாகக் கட்டுரை வடிக்கவும், சொற்பொழிவாற்றும் திறனும் படைத்தவர். 2014 ஆம் ஆண்டில் பாரத ரத்னா பட்டம் பெற்றவர். 40 ஆண்டுகள் நடுவண் அரசின் அரசியலில் பங்கு பெற்று, 10 முறைகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2 முறைகள் மேலவை உறுப்பினராகவும் 3 முறைகள் பிரதமராகவும் சேவை புரிந்தவர். நாடாளுமன்றத்தில் இவருடைய நேர்மறையான, ஆணித்தரமான விவாதங்கள் பலராலும் வரவேற்கப்பட்டன. வாஜ்பாய் கொண்டுவந்த தங்க நாற்கரம் சாலைத் திட்டம் போற்றத்தக்கது!

    எதிர்கட்சித் தலைவர்களையும் பேதமின்றி அவர்தம் நற்செயல்களை உளமார பாராட்டக்கூடிய பண்பாடு மிகுந்தவர். அதேபோன்று வன்மையான பேச்சிலும், எழுத்திலும் எதிராளிகளை நிலை குலையச் செய்யும் வித்தகர். மிகச்சிறந்த நகைச்சுவையாளரும் கூட ! ஐ.நா.விலும், நமது நாடாளுமன்றத்திலும் திருக்குறளையும், பாரதியாரின் பாடல்களையும் தமிழில் அழகாக எடுத்துரைத்தவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தினரும், நண்பர்களும், கட்சியினரும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்க்கிறோம். இந்திய வரலாற்றில் நிலையான இடம் பிடித்த அவர்தம் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்!

    Share
  • வல்லமையின் சுதந்திர தின வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    பவள சங்கரி

    நான் எனது சுதந்திரத்தை விரும்பும்பொழுது எப்படி என்னால் உங்களுடைய சுதந்திரத்தை எதிர்க்க முடியும்? – மகாத்மா காந்தியடிகள்

    இன்று 72 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். உண்மையில் நாம் எந்ததெந்தத் துறையில் சுதந்திரம் அடைந்திருக்கிறோம். பொருளாதாரத் தன்னிறைவும், பொருளாதார சுதந்திரமும் அடைந்து விட்டோமா என்றால் இல்லை என்றுதான்இன்றும் வேதனையுடன் கூற முடிகின்றது. ஏனைய மற்ற நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வாழும் நிலைமையால் பொருளாதாரச் சுதந்திரத்தை இழந்து நிற்க வேண்டியுள்ளது. நாட்டின் முதுகெலும்பான கல்வித்துறையை எடுத்துக்கொண்டால் மிகப்பெரும் மோசடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். 200 க்கும் மேற்பட்ட கல்லூரிகளும், பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் மோசடியாய் இயங்கிக் கொண்டு, இத்தனை ஆண்டுக் காலங்களாக பல ஆயிரம் மாணவச் செல்வங்களின், நம் நாட்டின் வருங்காலத் தூண்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியிருக்கின்றனர். வானளாவிய கட்டிடங்கள் மட்டுமே வெற்றியின் சின்னம் என்று கருதிக்கொண்டு, உலகத்தரம் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சியையே பாதிக்கச் செய்துள்ளனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாலந்தா போன்ற உலகத் தரம் வாய்ந்த பல பல்கலைக்கழகங்கள் நம் இந்தியாவில் இருந்துள்ளன என்பதை எவரும் மறுக்கவியலாது. வழிகாட்ட வேண்டியவர்களே வழி தவறி நடந்துகொண்டால் நாட்டின் எதிர்காலம் குறித்து கவலைகொள்ளாமல் இருக்க முடியவில்லை. 71 ஆண்டுகள் கடந்த பின்பும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தெருவில் இறங்கிப் போராடும் நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறோம். சற்றும் வளர்ச்சியடையாத, அடிப்படைத் தேவைகள்கூட பூர்த்தியாகாத பல மாநிலங்கள் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்களும், பெண் குழந்தைகளும் விற்கப்படும் நிலையும், பாதுகாப்பற்ற சூழலில் உழலும் பெண் குழந்தைகளுக்கு விடிவு காலம் எப்போது என்று விசும்பி குரல் கொடுக்கும் நிலையிலேயே இருக்கிறோம் என்ற எண்ணத்தை மறைக்க முடியவில்லை. கல்விச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என்று கேள்விப்பட்ட நாம்தான் இன்று இளம் பெண்களின் வன் புணர்ச்சி சுற்றுலாக்களும் இயங்கி வருவது பற்றி கேள்விப்படுவது வேதனையின் உச்சம்.

    இந்தியர்கள் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு துறையில் மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இன்று நமது இந்தியப் பொருளாதாரமே ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியின் மீதுதான் கட்டமைக்கப்படுவதைக் காண்கிறோம். எத்தனையோ, விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், பிறந்து வளர்ந்து தாம் பிறந்த நாட்டிற்கும், தமக்கும் பெருமையை சேர்த்துக் கொண்டு சரித்திரத்தில் இடம் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலைக்கடல் முழுவதும் கப்பல் விடுவோம் என்று பள்ளு பாடவும், விண்ணிலே ஆட்சி செய்வோம் என்று கற்பனை கதையும் வேண்டியதில்லை. நிலவில் பாட்டி வடை சுட்ட கதையும் இனி நமக்குத் தேவையில்லை. சூரியனுக்கே விண்கலம் அனுப்பிவிட்ட இந்த காலத்தில் சந்திராயன் 2 விண்கலத்தை செலுத்தாமல் ஏன் நிறுத்தி வைத்திருக்கிறோம். அந்தப்பணியில் ஈடுபட்டிருந்த நமது தலைசிறந்த விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாத்துரை அவர்களுக்கு பணி நீட்டிப்பும் வழங்கப்படவில்லை. உண்மையான வளர்ச்சி அடைய ஒரே வழி கட்சிப் பாகுபாடு, அரசியல், சமுதாய பாகுபாடு இன்றி அனைவருக்கும் பணியாற்றும் முழுமையான வாய்ப்பு அளிப்பதும், வளரத் துடிக்கும் இளைஞர்களுக்கு முழுமையாக வாய்ப்புகளை வழங்குவதும்தான் உண்மையான சுதந்திரம். பொருளாதாரத்தில் தன்னிறைவும், கல்வியில் உயரிய வளர்ச்சியும், பெண்கள் பாதுகாப்பும், தாழ்த்தப்ப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டுவதே உண்மையான சுதந்திரம் ஆகும். சட்டையில் கொடியும், வாயில் இனிப்பும் மட்டும் நமது வளர்ச்சியன்று. வாழ்விலே இனிமையும், வளர்ச்சியில் சுதந்திரமும் காண்பதே உண்மையான சுதந்திரம்! அனைவரும் ஒன்று கூடி இந்தக் குறிக்கோள்களை அடைய பாடுபடுவோம்! அந்த எண்ணம் உருவாவதே உண்மையான சுதந்திரத்தின் கொண்டாட்டம்!

     

    வாழ்க, வளர்க இந்தியா!

    Share
  • படக்கவிதைப் போட்டி (174)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    PicturesQueLFS எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • மாபெரும் தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி ….

    வல்லமை மிக்க மரபை உருவாக்கிக் சென்றுள்ள, கோடிக்கணக்கான தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்திச் சென்றுள்ள ஒப்பற்ற தலைவர் , ஆகச்சிறந்த தமிழறிஞர், தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்த, தி.மு.கழக தலைவர் கலைஞர் கருணாநிதி தமது 94வது அகவையில் இயற்கை எய்தினார். அன்னாருக்கு நம் வல்லமை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவர்தம் குடும்பத்தினர் மற்றும் கழகத் தொண்டர்களின் மனம் சாந்தி பெறவும், அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் நம் வல்லமை பிரார்த்தனை செய்கிறது.

    Share
  • படக்கவிதைப் போட்டி (173)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி!

    பவள சங்கரி

     
    இதுவரை இலஞ்சம் வாங்கினால் மட்டும் தண்டனை என்று இருந்தது, இனி இலஞ்சம் கொடுப்பவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று பாராளுமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    அதெல்லாம் சரிதான் … இதே சட்டம் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு இலஞ்சமாகக் கொடுப்பதற்கும் பொருந்துமா? அப்படியென்றால் அந்தப் பணம், பரிசுப் பொருள் என எந்த வகையில் பெற்றாலும் அந்த வாக்காளர்களும் தண்டனைக்குரியவர்கள்தானே?
    Share
  • கலப்படங்கள் கல்வியிலுமா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்தியாவில் மொத்தம் 277 போலியான பொறியியல் கல்லூரிகள் தற்போது இயங்கிக் கொண்டுள்ளன. தலைநகர் தில்லியில் மட்டும் 66 கல்லூரிகளும், கர்நாடகாவில் 23 கல்லூரிகள், உத்திரப் பிரதேசத்தில் 22 கல்லூரிகளும், ஹரியானாவில் 18, மகாராஷ்டிராவில் 16, தமிழ் நாட்டில் 11 கல்லூரிகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று பாராளுமனறத்தில் மனித வளத்துறை மேம்பாட்டு அமைச்சர் அறிவித்துள்ளார். தெலுங்கானாவிலும், மேற்கு வங்கத்திலும் முறையே 35, 27 போலி கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன … இவைகள் அனைத்தும் AICTE யின் அனுமதி இல்லாமல் போலியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த கல்லூரிகள் அனைத்தும் முறையான அனுமதி பெற்று இயங்க வேண்டும், அல்லது ஒரேயடியாக மூடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு கண்காணித்து வருகிறது . UGC 24 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக தன்னுடைய இணைய தளத்தில் பெயர்களோடு அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.ugc.ac.in/page/Fake-Universities.aspx

    வங்கிகளில் நடையாய் நடந்து கல்விக்கடன் பெற்று தங்கள் குடும்பத்தை தூக்கி நிறுத்தப்போகும் கனவுடன் தங்கள் வாரிசுகளை கல்லூரிகளுக்கு அனுப்பும் பெற்றோர் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது .. கலப்படங்கள் கல்வியிலுமா?

    Share
  • தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு …

    பவள சங்கரி

     

    தலையங்கம்

     

    அசாமில் சமீபத்தில் NRC – தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 1200 கோடி உரூபாய் செலவில், 5 ஆண்டுகள் உழைப்பில் இந்தக் கணக்கெடுப்பு எடுத்து வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அசாமின் மொத்த மக்கள் தொகையான 3,29,91,384 பேர்கள் இதற்குப் பதிவு செய்வதற்கு விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் 2,89,83,677 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 40,7707 விண்ணப்பங்கள் விடுபட்டுள்ளன. இவர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் தங்களுடைய குறைகளைக் கூறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி தமது கருத்தாக மம்தா பானர்ஜி அவர்கள் இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாகக் கூறுகிறார். நமது உள்துறை அமைச்சர் இது விரைவில் சரி செய்யப்படும் என்றும் சமாதானம் கூறியுள்ளார். சுமாராக 15% பேர்கள் விடுபட்டுள்ளது சந்தேகம் ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஆம், 40 இலட்சம் பேர் விடுபட்டுள்ளது அரசியல் நோக்கர்களின் பார்வையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரு . அஜ்மால் மற்றும் அவருடைய சகோதரர் திரு. சிராஜூதின் அஜ்மால் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் விடுபட்டு மீண்டும் இணைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • படக்கவிதைப் போட்டி (172)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஜேக்ஸன் ஹெர்பி எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share