படமும் பாடலும்(படம் கல்லூரி நாளில் வரைந்தது)
—————————————————————————————————
’’ராதே உனக்கு ராகத் துவேஷம்
ஆகாதடி அய்யா அடியேனுன் -காதலினால்
கட்டி அணைத்திடும், கையை விலக்குதல்
குட்டி உனக்கழகோ கூறு’’….கிரேசி மோகன்….!
ஓவியங்கள்
படமும் பாடலும்(படம் கல்லூரி நாளில் வரைந்தது)
—————————————————————————————————
’’ராதே உனக்கு ராகத் துவேஷம்
ஆகாதடி அய்யா அடியேனுன் -காதலினால்
கட்டி அணைத்திடும், கையை விலக்குதல்
குட்டி உனக்கழகோ கூறு’’….கிரேசி மோகன்….!
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.09.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
-கிரேசி மோகன்
இடைப்பிள்ளை உந்தன் இசையில் மயங்கி
மடிப்பால் நிலத்தில் மணக்க – கடைக்காலை
கன்றென எண்ணிக் கறவைகள் சுற்றிட,
நின்றிடென் நெஞ்சில் நிலைத்து….!
எழில்நீல வண்ணம் , பொழில்வேணு கானம் ,
தொழில்காதல், தாமரைத் தொப்புள் – சுழியில்
உலகெலாம் உண்டு, அலைகடல் நீந்தும்
அலகிலாக் கண்ணன் அழகு….!
வேணு இசைக்கையில் வெண்ணெய் புசிக்கையில்
வானில் வரைதூக்கி நிற்கையில் – ஊணும்
ஒருகால் உதவ , மறுகால் தயாராய்
ஒருகால் குரல்வருமுன் கேட்டு….
பவள சங்கரி
HATS OFF ‘YOUNG INDIA’ GUYS!!
‘யங் இந்தியா’ என்ற அமைப்பினர் ஈரோடு நகரை அழகுபடுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த அமைப்பில் இளைஞர்கள் , ஓவியர்கள், மாணவர்கள் , படித்த இளம் குடும்பப்பெண்கள் என்று இளைய சமுதாயமே நகரை அழகுபடுத்த முனைந்துள்ளனர்! நேற்று ஈரோடு இரயில்வே காலனி வழியாக சென்றபோது அங்குள்ள சுவர்களில் ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இதில் முக்கியமான விசயம், இவர்களில் ஒருவருமே தங்கள் பெயரைச் சொல்ல விரும்பாமல், ‘நாங்கள் யங் இந்தியா உறுப்பினர்கள் என்று சொல்லுங்கள் போதும்’ என்று சொன்னதுதான்! தற்பெருமை நாடாத, நல்வழிகாட்டும் இளைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
”அடியேன் இரண்டு ஓவியங்கள் கிண்டியில் பொறியியல் படிக்கும் காலத்தில் வரைந்தேன்….இருவருமே மூதறிஞர்கள்….ஒருவர் ‘’ராஜாஜி’’….மற்றவர் ‘’சோ ராமாசாமி’’ அவர்கள்….என்னிடம் இருப்பது மூதறிஞர் திரு.ராஜாஜி அவர்களின் ஓவியம்(இணைத்துள்ளேன்)….திரு. சோ சார் அவர்களின் ஓவியம் டாக்டர் ஜெகதீஸன் சாரிடம் உள்ளது….. ஓவியத்தில் கையெழுத்து வாங்கி தருவதாக ஓவியத்தை வாங்கிச் சென்ற எங்கள் குடும்ப வைத்தியர்(டாக்டர் ஜெகதீஸன் ‘’சோ சாருக்கு’’ நெருங்கியவர்) இப்போது சொர்கத்தில் உள்ளார்(’’டாக்டர் சோ வந்துருக்கார் சொர்கத்திற்கு கையெழுத்து வாங்கி வையுங்கள் அடியேன் வருகையில் கலெக்ட் செய்து கொள்கிறேன்’’)திரு சோ. சார் அவர்களின் ஓவியத்தை மீண்டும் வரைந்தேன்(இணைத்துள்ளேன்)…..’’ராஜாஜி’’ ஓவியத்தில் வாங்கித் தருவதாகச் சொன்ன என் தாத்தாவும் சொர்கம் சென்று விட்டார்….!’’ராஜாஜி’’ ‘’சோ’’ ’’ஜெகதீஸன்’’ மூவரும் சொர்கம் சென்றுவிட்டார்கள்…இருவரின் கையெழுத்துதான் இல்லை அந்தோ….!
எனது ‘’சாக்லேட்-கிருஷ்ணா’’ ‘’சோ சாரின்’’ ‘’சம்பவாமி யுகே யுகே’’, வாலி சாரின் ‘’கலியுகக் கண்ணன்’’ inspiration என்றால் மிகையாகாது….திரு.ராஜாஜியும், திரு வெங்கடகிருஷ்ணைய்யங்காரும்(எனது தாத்தா) சொர்கத்தில் ‘’ஸ்வந்திரா பார்ட்டி’’ அமைக்கச் சென்றுள்ளார்கள்….அடியேன் பூமியில்….!
வாழ்க மூதறிஞர்கள் இருவரும்….. வளர்க அவரது புகழ்….
என்னால் முடிந்த இரங்கற்பா சோ சாருக்கு….
‘’சே’’என்(று) எவருமே சொல்லமாட் டார்துக்ளக்
‘’சோ’’என்ற ராமசாமி சொல்வதை; -’’நா’’வென்ற
நாடகத் தந்தை நயத்தகு வாக்கது
ஆடகச் செம்பொன் அழகு’’….கிரேசி மோகன்….!
விவேகா ஃபைன் -ஆர்ட்ஸ் பூஜைப் பாடலில் ‘’ஆடகச் செம்பொன் மேனி முருகனே ‘’(நீலு அண்ணா குரல் தனியாகக் கேட்கும்) என்ற வரி வரும்….முருகரும் அழகு ,சோ சாரின் எழுத்தும் அழகு’’…..!
”வியாழக்கிழமை பாபா’’….!
————————————————–

அச்சுதன் சம்பு அயனுரு ஆனவா
சச்சிதா னந்தகுரு சாயிராம் -இச்சிறை
ஆறடிப் பொந்தில் அடைபட்(டு) உழல்கிறேன்
ஷீரடியில் சேர்ப்பாய் சரண்….
“உதிநுதல் சூடி, நதிகங்கை ஆடி(நீராடி)
சதிபதியாய் ஷீரடி சாயி, -அதிபதி,
பாபா வழிசென்று, பக்கிரிப் பிக்ஷையில்,
தீபா வளிகாண் தினம்”….
உதி-விபூதி, நுதல்-நெற்றி….
ஆடை கபினி அணிந்தடி யார்களின்
பாடை அதற்குள் பதுக்கிடும் -வீடை,
அறம்பொருள் இன்பம் அளித்திடும் வேப்ப
மரம்நிழல் சாயி மகான்….
ஆயிரம் அம்மாக்கள் ஆகுமோ ஈடாக
சாயிராம் தாய்க்குச் சமானமாய் -நோயினால்
ஆறடி ஓய்ந்தாலும் ஆன்ம சுகம்தரும்பார்
ஷீரடி மாயி சிரிப்பு….கிரேசி மோகன்….!
‘’முன்னாடி காட்டும் முகத்தை முழுநிலவாய்,
பின்னாடி காட்டும் பிறைதேய்ந்து: -கண்ணாடி
வீடு வரைகுமரி, வீதி வரக்கிழம்
காடுவரக் கூட்டும் கனல்’’….கிரேசி மோகன்….!
Pavala sankari
Kuttralanatha Swamy temple, at Kuttralam, Tamil Nadu

Kuttralam is a popular tourist resort in Southern Tamilnadu known for its waterfalls, amidst picturesque surroundings – and is a source of inspiration of many a literary work.
The Chitrasabha is a stand-alone structure that is located a few blocks away from the Kuttralanathar temple at Kuttralam in southern Tamilnadu.
Architecturally the Chitrasabha resembles that of the other Nataraja Sabhas elsewhere in Tamilnadu, and its interior is decked with hundreds of murals, depicting images from the Indian epics. The five dance halls of Shiva are Chidambaram, Madurai, Tiruvalankadu, Tirunelveli and Kuttralam.
Chitrasabha is a wooden structure, every inch of these walls are lined with murals depicting scenes from the epics. Nataraja along with Tripura Sundari and Shri Yantra and 16 forms of Ganapathi , episodes from the lives of 63 Saivite saints, Nayanmars, based on the Tamil work called “Periya Puranam” sung by Sekkizhar are also depicted in these paintings. The story of Madurai Meenakshi is one of the masterpieces depicted in these murals.
The 400-year old murals, belonging to the Nayaka period, are located in a mantapa called Chithra Sabhai, in the temple.
They were originally painted using plant pigments and natural dyes. Art historians allege that most of these murals have now been repainted between 2010 and 2013, using modern garish colours, violating conservation norms. Many murals had been repainted by introducing new colours and even 3-D techniques. The faded portions of some murals had been re-touched and chemical cleaning had been done.
Photographs are strictly prohibited inside Chithra Sabha.Paintings courtesy through internet.
திருக்குற்றாலம்
நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையில் குற்றாலம் உள்ளது.
ஆடல்வல்லான், திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் சித்திர சபையும் சிறப்பான ஒன்று. சித்திர சபை குற்றாலநாதர் ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ளது. இதன் எதிரே தெப்பக்குளமும் , சுற்றிலும் மதில் இருக்க, நடுவே சித்திர சபை அழகாக அமைந்துள்ளது. மரத்தாலான அற்புதக் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபையின் ஓவியங்கள் மிகப்பழமையானவை. 400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மரக்கோவிலின் கூரை சிதம்பரத்துக் கோவிலின் கூரையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த சித்திர சபையில் உள்ள இரண்டு மண்டபங்களில் ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் இருக்கின்றன. இக்கூடத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சிறு மேடையில் திருவாதிரை நாளில் நடராசப் பெருமான் காட்சி தருகிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புத ஓவியங்கள் அழகுடன் தீட்டப்பட்டிருக்கின்றன. இச்சித்திர சபையின் வெளிச்சுற்றில் ஊர்த்துவதாண்டவம், பத்திரகாளி, முருகன், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி ஆகிய உருவங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள், துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்தகோலம், இரணிய வதம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகாவன் ஆகியவை அழகுற வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. சித்திர சபை எதிரில் தெப்பக்குளமும், நடுவில் மணிமண்டபமும் அமைந்துள்ளன.
சபையின் உள்ளே நடராசர் திருவுருவம் அன்னை சிவகாமியுடன், தேவர்கள் தொழுமாறு அழகாக வண்ணச்சித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வதி கல்யாணச் சிற்பம், குற்றாலநாதர் அகத்தியருக்குக் காட்சி தந்தது, சுப்பிரமணியரின், விநாயகரின் பல்வகைச் சிற்பங்கள் முதலான ஏராளமான சிற்பங்கள் இச்சபையில் உள்ளன. இச்சித்திர சபையின் வெளிச்சுற்றில் ஊர்த்துவதாண்டவம், பத்திரகாளி, முருகன், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி ஆகிய உருவங்கள் அழகுற தீட்டப்பட்டுள்ளன.
சித்திர சபையின் ஓவியங்கள் புகைப்படம் எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இணையப்படங்களுக்கு நன்றி.
“உற்றாரையான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரையான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே”. (திருவாசகம்)
“காலன் வருமுன்னே கண்பஞ்சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே – மேல் விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு”. (பட்டினத்தார்)
மூவடி மண்கேட்க சேவடி பொற்சிலம்பு
மாவலி உச்சி மவுலியில் -தீவெடிக்க
திண்ணெனத் தாக்கும் திருவோணப் பிள்ளை
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!
மூலம் -நாராயண பட்டத்திரியின் ‘’ஸ்ரீமத் நாராயணீயம்’’….!
——————————————————————————————————–
வாமனாவதாரம்….!
———————————-
யாகாதி பாகத்தை ஈயாது போனதால்
ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற
சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான்
சக்கிர வர்த்தி சிறப்பு ….(1)
பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
ஓணத்தில் சேயாய் உதிப்பு….(2)
அதிதி உபசாரம் அன்று புரிந்தோன்
புதிய அவதாரப் பிள்ளை -குதியிட்டு
மாவலி முன்சென்றான் மூன்றடி வாமனனாய்
தாவலில் நெஞ்சம் திளைத்து….(3)
தாழங் குடையிடக்கை, தண்ணீர் கமண்டலம்
வாழிய காட்டும் வலக்கையில் -சோழியன்
உச்சியொடு வந்தவன் அச்சுதன் என்றுகுரு
எச்சரித்தும் மாபலி ஏற்பு….(4)
அந்தண வாமனர்க்கு வந்தனம் செய்துபலி
தந்தனன் கேட்ட திருவடிக்கு -மண்தனை
வண்டெனநீர் வார்க்கையில் வாத்தியார் வந்துக
மண்டல வாயை மறைப்பு….(5)
உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
அக்கணம் வாமனன் அங்கு….(6)
ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி
பாதாளம் செல்ல பலியை அழுத்திட
சேதாரம் இன்றியவன் சேர்பு….(7)
தானாகக் தானத்தை தந்திடும் தந்தைமுன்
வீணாக வேடமிட்டு வாமனமாய்ப் -போனீர்கள்!
பாணா சுரப்பிள்ளை போட்ட வினாக்(கு)ஏன
மீனாமை சிம்ம மறுப்பு….(8)
ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
ஆவேச நானை அழிப்பு….(9)….கிரேசி மோகன்….
பாடல்: ஆர்.எஸ்.மணி (கனடா)
மெட்டு, பின்னணி இசை: கிஷோர் குமார் பாடிய ஹிந்தி பாட்டு
—————————————————————————————
வாழ்வே இதுதான்: சுழலும் உலகம்
இரவும் பகலும் வருமே மாறியே (வாழ்வே)
காலை ஒளியும் மாலை இருளும் (2)
உறவும் முறிவும் வருமே மாறியே (வாழ்வே)
சுற்றம் என்ன சூழல் என்ன
நிலையானதாகுமோ (2)
சொந்தம் என்ன பந்தம் என்ன
செல்லாமலே நில்லுமோ?
ஒரு நாள் இன்பம் ஒரு நாள் துன்பம்
மாறாதே இக் கோலம் (வாழ்வே)
கன்னி என்ன காதல் என்ன
வண்ணமெல்லாம் மாறுமே (கன்னி)
பாசம் என்ன நேசம் என்ன
வந்து பின்னே போகுமே
ஒரு நாள் இங்கே ஒரு நாள் அங்கே
எங்கே எந்தன் வீடும் (வாழ்வே)
—————————————————————————-
Our life is in constant flux. No one can stop the changes taking place in the body. And old age is inevitable. But there is light at the end of the tunnel!
–கிரேசி மோகன்
‘’சூரி நாகம்மாள் ப்ளஸ் கிருஷ்ணா’’
————————————————
”சந்தேகம் யார்க்கென்று சற்றேனும் சந்தேகி!
வந்தேகிச் செல்லும் விளையாடி – உன்தேகம்
பொய்யென்(று) உணர்ந்து புகலடை யாதவன்கால்
மெய்யுணர் மானுட மாடு’’
-கிரேசி மோகன்
’’குட்டிப் பசுங்கன்றுக் குட்டியிடம், கோகுலக்
குட்டனவன் ராதையைக் காண்கிறான்: -சுட்டிப்
பயலவர்க்கு எல்லாமே, பைங்கிளி ராதா:
வயலிவர் ராதைநீர் வீச்சு’.’
–கிரேசி மோகன்
’’பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமெனக்
கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் – உள்ளமே
கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
வள்ளல் பெரும்பசுவாய் வாழ்வு’’
’’ஊதா நிறத்தவன் ஊதிக் களைத்தனன்
ராதை கழுத்தென்னும் சங்கை – போதை
தலைக்கேறக் கண்ணனவன் தோளைத் தழுவி
வளைக்கரத்தால் போரென்றாள் மாது…
(அல்லது)
——————————————— – போதை
இதம்தர கண்ணந்திண் மார்பைத் தழுவி
சுதந்திர வாழ்த்துரைத்தாள் சாது!’’