Month: September 2017

  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 27

    க. பாலசுப்பிரமணியன்

    திருமந்திரத்தில் ஒரு மந்திரம்

    திருமூலர்-1

    திருமந்திரம் நமக்குக் கிடைத்த ஒரு உன்னதமான  நூல். இதன் உட்கருத்துக்களைப் புரிந்து கொள்ள பல ஆண்டுகளின் சிந்தனையும் பயிற்சியும் தேவை. இருப்பினும் அதில் மேலோங்கி நிற்கும் சில கருத்துக்கள் நம்முடைய தற்போதைய சிந்தனைக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் மிக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது. உதாரணமாக இன்றய சமுதாயத்தில் மனிதர்களின் தன்னிச்சையான போக்கும் சுயநலத்தை மட்டும் வளர்க்கும் சிந்தனைகளும் சமுதாயத்தின் அடிப்படைகளை அரித்துக்கொண்டிருக்கின்றன. “நான்” “எனது” “தனது” என்ற மாயையினால் உந்தப்பட்ட பாச உணர்வுகள் உண்மை உறவுகளையும் இறைவன்பால் இருக்கின்ற அன்பையும் விலக்கி மனிதர்களைத் தனிமரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

    ஆசைகளின்வலையில் சிக்கிக்கொண்ட நாம் நம்மை விடுவித்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றோம். சிறிய ஆசைகள் கூட நம்மைக் கட்டிப்போட்டு வாழ்க்கையின் உண்மைப் பொருளை அறிந்துகொள்ள முடியாமல் தடுத்துவிடுகின்றன.

    இந்த நேரத்தில் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகின்றது.

    ஒரு அரசன் ஒரு நாள் தன்னுடைய மந்திரியை அழைத்து “நம்முடைய நாட்டில் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்களா? யாருக்காவது தேவைகள் ஏதாவது இருக்கின்றதா?” என்று கேட்டான்  அதற்கு பதிலளிக்கும் வகையில் “அரசே, நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை. அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள். யாரும் ஏழ்மையிலோ பசியிலோ வாடவில்லை.” என்றுரைத்தார்.

    மந்திரியின் கூற்றின் உண்மையைக் கண்டறிவதற்காக அன்றிரவு அரசர் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வந்தார். அவ்வமயம் நள்ளிரவில் ஒரு இளைஞன் வேகமாக ஓடுவதைக் கண்டு அவனை நிறுத்தி :”நண்பா, இந்த நள்ளிரவில் நீ எங்கே ஓடிக்கொண்டிருக்கின்றாய்?” எனக் கேட்டார்.

    அவனோ “நண்பரே. நான் ஒரு தொழிலாளி. இன்று மதியம் கோட்டையின் கதவின் அருகில் மன்னைத் தோண்டிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு தங்கக் காசு கிடைத்தது. நல்ல வேளை, யாரும் அதை பார்க்கவில்லை. அதை நான் அந்த இடத்தில் புதைத்து வைத்து விட்டேன். அதை எடுக்கத்தான் போய்க்கொண்டு இருக்கின்றேன். அந்தக் காசு எனக்கு பல நாள்களுக்கு உணவு வாங்க உதவியாக இருக்கும்” என்றான்.

    அவன் நிலையை உணர்ந்த அரசரோ ‘ நண்பா, ஒரு காசுக்காக நீ இவ்வளவு துன்பப்படுகின்றாயே. நான் ஒரு செல்வந்தன். உனக்கு நூறு தங்கக் காசுகள் தருகின்றேன். நீ திரும்பிச் சென்று நன்கு உறங்கு.” என்கிறார்.

    பதிலுக்கு அவனோ “மிக்க நன்றி. நண்பரே. ஆனால் நீங்கள் கொடுக்கும் பணம் தீர்ந்தபின் இந்தக் காசை தேடி நான் வரும்பொழுது இது இங்கு இருக்குமா என்று சொல்வதற்கில்லை. எனவே அதையும் எடுத்து வந்து விடுகின்றேன். பின் உங்கள் பணத்தையும் பெற்றுக்கொள்கின்றேன். ” என்று கூறினான்அரசர் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு தர நினைத்த [பணத்தை உயர்த்தியும் அந்த ஒரு தங்கள் காசின் மீது அவனது பற்று குறைவதாக இல்லை. மனம் நொந்து போன அரசர் கடைசியில் தனது உண்மை வடிவத்தை வெளிப்படுத்தி “நான் இந்த நாட்டு அரசன். எவ்வாறாவது உன் மனத்தை மற்ற நினைக்கின்றேன். ஆகவே இந்த நாட்டின் பாதிப் பகுதியை உனக்குத் தருவதாக முடிவு செய்து விட்டேன்.” என்று சொல்ல அந்தத் தொழிலாளியோ ” அரசே, என்னை மன்னித்து விடுங்கள். உங்களைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ளாமல் பேசிவிட்டேன். தங்களுடைய பரந்த மனதிற்கு என் நன்றி. ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் கொடுக்கும் பாதி அந்தக் கோட்டையின் கதவு உள்ள பகுதியாக இருந்தால் மிகவும் நல்லதாக இருக்கும். நான் எப்பொழுது வேண்டுமானாலும் சென்று அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொள்ளலாம்.” என்றான்.

    நம்மில் பலரும் இது போலத்தான்… சிறிய சிறிய ஆசைகளுக்காக இறைவனின் பெரும் கருணையை இழந்து விடுகின்றோம் நமது ஆசைகளே நமக்கு வினையாக அமைகின்றன.

    இதிலிருந்து நாம் எப்படி மீளப்போகின்றோம்  பாசத்தை அறுக்க திருமந்திரம் காட்டிய வழியை விட மற்றொன்று சிறப்பாக அமைய முடியாது.

    இதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்:

    ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்

    ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்

    ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்

    ஆசை விட விட ஆனந்தமாமே

    “சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்ற கூற்றிற்கேற்ப தன்னுடைய ஒரே பாடலிலே மொத்த நூலின் கருத்தை முன்வைத்துள்ளார் திருமூலர்.

    ஆகவே மாயையின் வலைக்குள் சிக்கி ஆசைகளால் சூழப்பட்டு செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன் வாழக்கையை வாழும்போது நாம் இன்ப துன்பங்களுக்கு இரையாகின்றோம்.  இந்த மாயையிலிருந்து விலகி தெளிவு பெற்றால் வாழ்க்கையின் முடிவை அமைதியுடனும் மகிழ்வுடன் சந்திக்க நாம் தயாராகி விடுகின்றோம்.

    இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்.

    தேற்றித் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்

    ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே

    மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்

    கூற்றன் வருங்கால் குதிக்கலுமாமே

    திருமந்திரம் காட்டும் இந்த வழிகள் நம் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு நல்லதொரு பாடமாக அமைந்துள்ளது.

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    தொடருவோம்

    Share
  • நவராத்திரி நாயகியர் (2)

    க. பாலசுப்பிரமணியன்

     

    ராஜராஜேஸ்வரி

    images (4)

    புவியுடன் வானும் பொன்னிறப் பரிதியும்

    பொலிவுடை நிலவும் படையெனக் கோள்கள்

    பகலுடன் இரவில் பங்கிடும் அண்டத்தை

    பரிவுடன் காக்கும் புன்னகை அரசி !!

     

    மறைகளில் நின்றாய் மூச்சிடும் ஒலியாய்

    மலைகளில் மேருவில் மலர்ந்த வித்யா !

    கலைகளில் முத்திரை காலத்தின் கருவறை

    கருணையில் பெருந்தகை காத்திடும் அன்னை !

     

    அரசவை உனதில் ஆனந்தம் பொங்கும்

    அருளுடைப் பார்வையில் அமைதியே தங்கும்

    அடியவர் உள்ளத்தின் ஆனந்தப் பேரொளி

    அடைக்கலம் நீயே அகிலத்தின் தாயே !!

     

    பெற்றவள் நீயிருக்க பெற்றிட வேறெதெற்கு?

    பொற்சபை அரசியே புன்னகை மாட்சியே

    உள்ளவை பற்றியே அல்லவை விலக்கியே

    வல்லமை பெற்றிட வரம்தரும் தேவியே!

     

    கைகளில் முத்திரை காட்டிடும் யோகினி

    கலக்கிடும் துன்பங்கள் களைந்திடும்  கபாலினி

    கற்பனை தீண்டிடா அண்டங்கள் ஆட்சியே

    காலங்கள் தாண்டிய கருணையின் வடிவே !

     

    விண்ணினை அளந்திடும் விழியுடை விலாசினி

    மண்ணுடை மலர்களில் மயங்கிடும் மீன்விழி-

    மடையெனப் பெருகிடும் மங்கலக்  காவிரி

    மகிழ்வுடன் வந்தருள் மனதினில் மோகினி !

     

     

    Share
  • நூறு வருடங்களுக்கு முன்னால் [2]

    இன்னம்பூரான்
    செப்டம்பர் 19, 2017

    unnamed (4)

    வரலாறு படைத்தவர்களை பற்றி, நாளாவட்டத்தில் மறந்து விடுவது மனிதனின் இயல்பு. வரலாற்றை மாற்றி எழுதுவதும் அவனின் உத்திகளில் ஒன்று. நூறு வருடங்களுக்கு முன்னால் நேற்றைய தேதியில் (செப்டம்பர் 18, 1917) தேசீய கூட்டங்களுக்கு புகழ் பெற்ற கோகலே மன்றத்தில், சிறையில் இற்செறிக்கப்பட்ட தேசபக்தர்களை போற்றி புகழ்வதற்கு, ஒரு கூட்டம் கூடியது. டாக்டர். சர். எஸ். சுப்ரமணிய ஐயர் அவர்கள் தலைமை வகித்தார். இதை பற்றிய அறிவிப்பு தாமதமாக வெளிவந்தாலும், குறித்த நேரத்துக்கு முன்னரே மன்றம் நிரம்பி வழிந்தது. பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கூட்டத்தில் பிராமணரல்லாதார்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். கூட்டத்தினர், தேசபக்தர்களை சிறையில் அடைத்தவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தினரை போல் வாடிய முகமில்லாமல், மலர்ந்த முகத்துடன் காணப்பட்டனர். தலைமை மேஜையில் திருமதி பெசண்ட் அம்மையாரின் படமும், சர்.ரவீந்தரநாத் டாகூர் அவர்களின் படமும் வைக்கப்பட்டிருந்தன. லாஹூரை சேர்ந்த 19 வயது இளைஞனால் அவை வரையப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆதாரம்:
    http://www.thehindu.com/archive/release-of-the-interned/article19710458.ece

    குறிப்பு: திரு. எஸ்.சுப்ரமண்ய ஐயர் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை பிரம்மஞான சபை ஆலமரத்தடியில் தான், திரு.ஆக்டேவியன் ஹ்யூம் அவர்களும் கலந்து கொண்ட அமர்வில் தான் விடுதலைக்கு போராடிய காங்கிரஸ் கட்சி பிறந்தது. அதற்கு பின்னர் தான் வரலாற்றில் காங்கிரஸ் பிறந்த மண்ணாக சுட்டப்படும் பாம்பே அமர்வு நடந்தது. ஐயருக்கு அந்த அந்தஸ்தை கொடுக்கலாமோ என்ற தாக்கம் தான் வரலாற்றை மாற்றி எழுதியதோ? தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தான் அவரை முனீந்தரர் என்று புகழ் பாடினார். சென்னை செண்டினரி ஹாலின் முன் அவருடைய சிலை நிற்கிறது. கலோனிய அரசை கண்டித்து அவர் அமெரிக்க ஜனாதிபதி உட் ரோ வில்சன் அவர்களுக்கு எழுதிய மடலை பிரம்மஞான சபையின் பிரமுகர் ஹென்றி ஹாட்சனர் அவர்கள் தான் மறைமுகமாக எடுத்துச்சென்றார். அது லண்டனையும் அடைந்து பார்லிமெண்டில் விவாதிக்கப்பட்டது; கலோனிய அரசு கண்டிக்கப்பட்டது. கவலையுற்ற கலோனிய அரசு அவருடைய ‘சர்’ பட்டத்தை பிடுங்கிவிடும் என்று பேசிக்கொண்டார்கள். அவரோ அதை கடாசிவிட்டார். உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய் அவர் எல்லாவற்றையும் துறந்து முனிவராக வாழ்ந்து வந்தார்.

    அடுத்தக்குறிப்பு: பிராமணரல்லாதார் வந்ததை குறிப்பிட்டது இன்று விநோதமாகப்படலாம். அன்றைய காலகட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சி, கலோனிய ஆட்சியின் விரோதத்தை சம்பாதிக்க விரும்பவில்லை. அது பிராமணரல்லாதார் கட்சி. அத்தகையவர்களில் பலருக்கு நாட்டுப்பற்று இருந்ததை, இந்த குறிப்பு சுட்டுகிறது எனலாம்.

    சித்திரத்துக்கு நன்றி:
    http://www.zahlenparty.de/wp-content/uploads/1917.jpg

    ****

    Share
  • என்று வரும் கிளரொளி?

    கவியோகி வேதம்

     

    இருட்டைக் குத்திட,- கதிரும்  பிறந்தது;

    இன்பனி உருண்டிட இலைமுளை துளிர்த்தது;

    சுருட்டிய பாயும் தூக்கம் கலைந்தது;

    துயராம்  ‘சேரி’யின்  ‘விடியல்’ வந்ததா?

    .

    ஆண்யானை விந்தில் ஆச்சர்யம் வளர்ந்தது!

    அருகம் புல்லிலும்  புவனம் தெரிந்தது;

    மாண்ட அரசரால் சரித்திரம் புரிந்தது!

    மண்புரள்  ‘வேட்டி’யால் வறுமை தீர்ந்ததா?

     

    . பன்றியும் குழந்தையும் ஒன்றாய்ப் புரண்டு,

    பள்ளமும் சேறும் காதல் புரிந்து,

    குன்றிய வயிற்றில் வாயுவே நிரம்பும்

    குலமகன் வாழ்வும் என்றுதான் துலங்கும்?

     

    . மனைகள் பணத்தால் மாளிகை ஆகலாம்;

    ‘மாண்பும்’ கட்சியால் மந்திரி ஆகலாம்;

    வனைவுறும் நேர்மையே நிலமெங்கும் பரந்து,

    வளர்ந்(து)என் ‘றிந்தியா’ வல்லர சாகும்?

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170919 - Mahalaya 01 - Bala -lr

     

    ”BALA”….!
    ———————-

    ’’வெள்ளை அரவிந்தம் வெண்புலியில் வீற்றபடி
    கொள்ளை அழகாய் கொலுவிருக்கும், -பிள்ளையவள்,
    பாலா திரிபுரையைப் போற்றிப் பணிவோர்க்கு
    நாளாம் நவராத்ரி நாள்’’….(4)
    BALATHIRIPURASUNDARI….
    —————————————————

    ”பாப்பா நெமிலிவாழ் பாலா திரிபுரை,
    காப்பாள், அடியார் கரம்பிடித்துச், -சேர்ப்பாள்
    அதியற் புதமான ஆன்ம உலகில்:
    துதியவளை சாக்லேட்டைத் தந்து’’….(1)

    ’’அமளி இலாத அமைதி லயத்தில்,
    ரமண மயமாய் ரமிப்பு, -நெமிலிவாழ்,
    பாண்டுரங்கன் சோதரி, பாலா திரிபுரையை
    வேண்டி யுறங்க வரம்’’….(2)

    ‘’காளி அரக்கர்க்கு, கற்பகம் பக்தர்க்கு,
    யாளி அமரும் எஜமானி, -தோளிரெண்டில்,
    வேலா யுதன்அண்ணன் வேழனைச் சுமந்திடும்,
    பாலா நவராத்ரிப் பெண்’’….(3)

    ’’வெள்ளை அரவிந்தம் வீற்று நெமிலியில்
    கொள்ளை அழகாய் கொலுவிருக்கும், -பிள்ளையவள்,
    பாலா திரிபுரையைப் போற்றிப் பணிவோர்க்கு
    நாளாம் நவராத்ரி நாள்’’….(4)

    ’’சுப்ரமண்ய அய்யரின் சொப்பனத்தில் வந்(து)ஆற்றில்,
    தெப்பமாய் நீந்திக்கண் தென்படுவேன், -அப்புறம்,
    ஆலயம் வேண்டாம், அகத்தில் குடிவைப்பீர்’’,
    வாலைபா லாஅருள் வாக்கு’’….(5)

    ‘’மூலாதா ரத்தினில் மூளும் கனலவள்,
    கோலா கலகோ குலன்தங்கை, -பாலா
    திரிபுரையைக் காண திருநெமிலி செல்வோம்
    ஹரிசோ தரியே அரண்’’….கிரேசி மோகன்….(6)

    ”சுண்டு விரலளவு சொப்புப் பதுமையாய்
    கண்டு பிடித்தனர் காட்டாற்றில், -கொண்டுவந்த,
    நாலா யிரத்தோன் நவனீதன் சோதரி
    பாலாம் பிகையவள் பேர்”….கிரேசி மோகன்….(7)

    ’’விடிகாலை வெளிச்சம்’’….!
    ————————————————————–
    “மாலை மயக்கம், மதிய உதயம்அதி
    காலை வெளிச்சம் கனவாகும், -பாலை,
    திரிபுரையைக் கண்டு தரிசிப்போர் , தம்முன்,
    எரிபவை கூட எழில்”…..கிரேசி மோகன்….(8)

    ”பாலாவின் பேர்சொல்லி பாம்பை எழுப்பிடு.
    மூலாதா ரத்தில் முழிபிதுங்கும் : -தோளா
    யிரத்தில் உறங்கிடும், யாதவன் தங்கை,
    சிரத்தில் சிரிப்பாள் சிலிர்த்து’’….(9)

    ’’இமியளவும் தீங்கின்றி, இன்சொல் உரைக்க,
    நெமிலிவாழ் பாலா நெகிழ்வாள் , -ஞமலியின்,
    வாலை நிமிர்த்தித்தன், ஆளாய் அமர்த்துவது,
    பாலை திரிபுரையின் போக்கு’’….கிரேசி மோகன்….(10)

    ஞமலி -நாய்

    ”ஓலை ஜபமணி மாலை அபயமொடு
    காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
    திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
    வருபவர் வாழ்வில் வளம்….(11)

    ”பயமகல பாலா, பலம்பெருக பாலா,
    லயமடைய பாலா, லலிதை -மயமான,
    ரூப தியான ரமிப்பில் இருப்போர்க்கு,
    ஆபத்(து) உதவி அவள்”….(12)

    ’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ————————————————————

    ‘’திரிபுர சுந்தரி தேவி நமஸ்தே,
    பரிபூ ரணமுணர பாலா -சரிபுகல்வாய்,
    சாதகனாய் ஆக்கி சதாசர்வ காலமும்
    மாதவத்தில் மூழ்கயென், மனு’’….(13)

    ”நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….
    ———————————————————–

    ”தாலேலோ தாலேலோ தாயாரின் தாலாட்டு,
    பாலேலோ பாலேலோ பையனிவன் -தாலேலோ,
    தூங்காமல் தூங்கும் திருமால் சகோதரி
    ஓங்காரி பாலாவுக்(கு) ஓய்வு”….(14)

    ”நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ——————————————————–

    ‘’கல்லைச் சிலையாக்கும் கல்லுளி மங்கம்மா,
    சொல்லைக் கவியாக்கும் சுந்தரி, -கொல்லை,
    குமுதத்தில் பூப்பாள் குலம்ஜாதி காணா,
    அமுதத்தன் தங்கை அவள்’’….(15)

    ”நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    —————————————————

    ‘’ஆலோல வள்ளியின் ஆம்படையான் அன்னையே,
    தாலேலோ பாடவந்தேன் தாயுனக்கு, -பாலேலோ,
    மாலோலன் தங்காய், மனோன்மணி கண்ணுறங்கு,
    காலேல கண்மலர்ந்து கா’’….(16)

    கா -காப்பாய்….

    ’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ————————————————————–

    ‘’பொற்கரத்தில் மாலையும், புத்தகமும் ஏந்தியவா(று)
    அற்புதங்கள் செய்ய அலைந்தனையே, -கற்பகமே,
    கண்ணுறங்கு பாலேலோ,கால்வலிக்கப் போகிறது,
    பண்ணுறங்கப் பாடுமெனைப் பார்’’….(17)

    ’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ———————————————————-

    ‘’ஈசனிரு கண்ணை இறுகநீ மூடியதால்,
    தேசம் இருண்டதே தேவியே ! -வீசிடும்
    கண்ணிமைகள் பொத்தியதி காலை எழந்திடலாம்,
    பெண்ணிமய பாலா படு’’….(18)

    ’’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’….
    ——————————————————-

    ’’நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட,
    ஐயம் அகன்றதும் ஆதரவாய், -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள், பரமசுகம் கூட்ட,
    படித்ததெலாம் பாலாமுன் பாழ்’’….(19)

    ”நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….
    ———————————————————–

    ”அமளியில் லாமல் , அமைதியைக் காத்தால்,
    நெமிலிவாழ் பாலா நினக்குள், -கமலியாய்,
    நெஞ்சகத் தாமரையில் நின்று நிலைத்திருந்து,
    அஞ்சேல் அபயம் அளிப்பு”….(20)

    ’நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’…..
    ——————————————————

    ‘’சீட்டிப்பா வாடையும் ,சில்க்கில் சட்டையுமாய்,
    நாட்டுப் புறஊர் நெமிலியின், -வீட்டுக்குள்
    வீற்றவளே பாலா , வருக வருகநான்
    சாற்றும்வெண் பாவை சகித்து’’….(21)….

    ‘நெமிலி பாலா திரிபுர சுந்தரி”….
    ——————————————————-

    “கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்,
    அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்,
    சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
    லக்கு(LUCK)பாலா ஊர்நெமி லி “….(22)….கிரேசி மோகன்….!

    Share
  • சென்னை விமான நிலையத்தின் மற்றுமொரு மைல்கல்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    விமானம் ஓடு பாதையில் விமானங்கள் 75 முதல் 80 வினாடிகளில் பறந்துவிட வேண்டும் என்றிருந்ததை இனி 70 வினாடிகளுக்குள் பறந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இது மேலும் 60 வினாடிகளாகக் குறைப்பதே நமது விமான நிலையத்தின் குறிக்கோளாக உள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரு மணிக்கு 32 விமானங்கள் என்று இருப்பதை இனி ஒரு மணிக்கு 36 விமானங்கள் பறகும். இது நமது சென்னை விமான நிலையத்தின் பொருளாதார வளர்ச்சியையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதாக உள்ளது.

    விமானத்தில் நுழைவதற்கு இருக்கை எண்ணுடன் கூடிய அனுமதிச்சீட்டு (boarding pass) முறை இரத்து செய்யப்படவிருப்பதால் கால தாமதங்கள் குறைய வாய்ப்பாகிறது.

    Share
  • வருவாளோ? – நவராத்திரிப்பாடல்கள் (1)

     

    gangai amman santhavaasal

    கங்கைக் கரையின் ஓரத்தில், ஒரு
    காலை புலரும் நேரத்தில்
    கன்னங் கரிய சின்னஞ் சிறுமி
    காலை இணைத்தென் முன்நின்றாள்
    சிங்கம் பிடரி சிலிர்த்ததுபோல்
    செங்கதிர் எதிரே பளபளக்க
    சேவடி ஈரம் என்விழி ஈரம்
    சேர்ந்த கணத்தினை அவளேற்றாள்
    சிட்டுக் குருவிச் சிறகு விரலால்
    செம்மைத் திலகம் ஏற்றினளே!

    மல்லாந் திருந்த இரவொன்றில்
    மறந்த கனவின் நினைவொன்றில்
    மாடிப் படியில் திமுதிமு திமுதிமுவென
    மணிச்ச தங்கை கலகலக்க
    நில்லா தெங்கோ நின்றாளே
    நினைவைக் கனவைக் கொன்றாளே
    நீலப் பட்டுப் பாவடையை
    நித்திலம் பதறும் மின்விரலால்
    நேர்த்தியின் உன்னத மாய்வந்தாள்
    நேரே உயிரை மலர்கொய்தாள்!

    இமயப் படுகையின் குளிரினிலே
    இரவா பகலா புரியாத
    இறைநட மாடிடும் விந்தைப் பொழுதினில்
    மின்நரை மலிந்த கிழவியென
    இமையுள் சிரித்து நின்றாளே
    என்னை எழுப்பிச் சென்றாளே
    ஈனம் மலிந்த மனத்தினிலே
    ஈசன் வாசனை சேர்த்தாளே
    இதுவரை நேராச் சொல்லெல்லாம்
    இடுப்பில் உடுத்தி நொடித்தாளே!

    காரிருள் அஞ்சும் காரிருளில்
    கட்டி நிலவைக் காணாமல்
    கடல்தடு மாறிக் குமுறும் கருப்பில்
    கருமை அறியாக் கருப்பியென
    நேரில் விண்ணில் எழுந்தாளே
    நெஞ்சம் பதறப் புடைத்தாளே
    நிலையில் லாத மணல்வெளியில்
    வெருட்டித் துரத்திச் சிரித்தாளே
    நெஞ்சம் விடாமல் ஏங்குவதாய்
    எங்கோ உயிரைத் தொட்டாளே!

    எத்தனை எத்தனைக் கோலங்கள்
    ஏட்டில் வராத ஜாலங்கள்
    ஏதிதன் பொருளென எவரே அறிவார்
    எதைநிஜ மெனநான் கொள்ளுவதோ
    முத்த மிட்டதும் மிகவுண்மை
    முனைப்பே அற்றதும் மிகவுண்மை
    மூர்க்கி யினைநான் மோகித்தே
    முழுதாய் இழந்ததும் மிகவுண்மை
    மொட்டுள் மெளனச் சுடர்போல
    மோதும் தென்றலுக் கேங்குகிறேன்!

    கரைவதில் எனக்கு மனமில்லை
    கண்கள் சற்றும் இமைக்காமல்
    கண்ணீர்த் துளிகள் கால்களை நனைக்கக்
    கவிதை முனையில் உயிர்பதற
    விரைவின் அறியா உயரங்களும்
    அமைதியின் புரியா ஆழங்களும்
    விந்தைக் கலவி புரிகையிலே
    விழிக்கும் பிள்ளையாய் நிற்கின்றேன்
    விண்ணை யாளும் பேரழகி
    வீதி முனைக்கு வருவாளோ?

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (240)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக திலகவதி மதனகோபால் அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    திலகவதி மதனகோபால் அவர்களின் சொந்த ஊர் கோவை. உணவியல் துறையில் பட்டம் பெற்றவர் உணவியல் நிபுணர் ஆவார். முகநூலில் பல சமூக முன்னேற்ற கருத்துக்களை பகிர்ந்து வரும் திலகவதி அவர்கள் சமீபத்தில் பெண் முன்னேற்றம், பெண்விடுதலை குறித்த மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை பதிப்பித்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    #திருமணம்_மற்றும்_தாய்மை_அழகாக_இருக்கும்_என்று_என்_மகளிடம்_ஏன்_சொல்லுவேன்…..

    திருமணம் மற்றும் தாய்மை பெண்களின் வாழ்கையில் இன்றியமையாத ஒன்று அல்ல என்றாலும், அவற்றில் உள்ள நன்மைகளைப் பற்றி நம் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க நாம் முயற்சி செய்யவேண்டாமா?

    நான் ஒரு பெண்ணியவாதி தான், ஆனால் அதைப் பிரச்சாரம் செய்யும் ரகம் அல்ல. பெண்ணியம் பற்றிய தவறான புரிதலே ஆண்களை வெறுக்கும் நிலைக்கு மாறிவிடுகிறது.

    தன்னை மேம்படுத்திக்கொள்ள எல்லா வழிகளையும் நான் என் மகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன். அவள் ஆசைப்படும், விருப்பப்படும் எதை வேண்டுமானாலும் அவள் செய்யலாம். இறுதி முடிவு அவளுடையதாகவே இருப்பினும், திருமணம் மற்றும் தாய்மை முக்கியம் இல்லை என்று நான் ஒரு போதும் அவளிடம் சொல்ல மாட்டேன்.

    தாய்மார்கள் திருமணம் முக்கியம் அல்ல என்று தங்கள் மகள்களுக்கு அறிவுரை கூறும் கட்டுரைகளைப் படிக்கும் போது எரிச்சலடைய செய்கிறது. நம்மைப் பாதுகாக்கவோ, பார்த்துக்கொள்ளவோ நம் வாழ்க்கையில் ஆண்கள் தேவையில்லை தான். நிதி ரீதியாகச் சுயாதீனமாக(financially independent) இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதைத் திருமணத்துடன் தொடர்புப் படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. பழங்காலத்தில் திருமணம் ஒரு பெண்ணின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவே இருந்திருக்கலாம், ஆனால் அதுவே திருமணத்திற்கான அடித்தளமாக இருப்பதாக நாம் இன்னும் நம்புகிறோம் என்று அர்த்தமா?

    1திருமணம் என்பது இரு மனங்களும் ஆத்மார்த்தமாக இணைந்து, ஒருவருக்கொருவர் தோழமை, ஆதரவு உணர்வோடு இருந்து மற்றவர்களுடைய தனிப்பான்மையைப் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, விசித்திரமான அணுகுமுறை மற்றும் எரிச்சலூட்டும் பழக்கங்களைப் பொறுத்துக்கொண்டு, எல்லாச் சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து ஒன்றாகப் பயணிப்பது. அதுமட்டும் இல்லாமல் திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒரு விதப் அழகான பிணைப்பு ஆகும்.

    வேறு எந்த உறவுமுறை இவை அனைத்தையும் வழங்க முடியும்? எப்படி நாம் நம் மகளிடம் திருமணம் அவசியம் இல்லை என்று சொல்ல யோசிக்க முடியும்? திருமணத்தால் ஏற்படும் சந்தோஷத்தையும், தாய்மை வழங்கக்கூடிய இணையற்ற உணர்வையும் அவர்கள் அனுபவிக்க நாம் விரும்பவில்லையா? ஆம், எல்லாத் திருமணங்களும் சந்தோஷமாக அமைவதில்லை என்பது உண்மைதான் பலர் பல இன்னல்களுக்கும், இறுக்கமான வாழ்க்கைக்கும் தள்ள படிக்கிறார்கள், ஆனால் இந்தக் காரணங்களினால் திருமணத்தை விட்டுக்கொடுப்பது/தவிர்ப்பது என்பது ஒரு தீர்வாக இருக்க முடியாது.

    பெண்ணியம் அர்த்தம் என்ன? பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளுடனான எல்லாப் பழமையான பழக்கவழக்கங்களையும் தடுப்பதா? அல்லது முன்னர்ச் செய்த எல்லாவற்றிற்கும் குருட்டுத்தனமாகச் எதிர்ப்பதா?

    நன்றாகப் படித்த ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதிலும், குழந்தைகள் பெற்றுக்கொள்வதிலும் என்ன தவறுள்ளது? எப்போதில் இருந்து இந்தப் பிற்போக்கு எண்ணம் உண்டானது புரியவில்லை?”

    இவரது சமூகநல கருத்துகளுக்காக இவரை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சி அடைகிறது. அடுத்த தலைமுறை பெண்கள் இவரைபோன்ற ஆளுமைகளால் வழிநடத்தபட இவ்விருது ஊக்கம் அளிக்கும் என வல்லமை ஆசிரியர் குழு நம்புகிறது

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • நவராத்திரி நாயகியர் (1)

    க. பாலசுப்பிரமணியன்

     

    திரிபுரசுந்தரி

    thiripuuu

    திக்கெட்டும் உருவாக்கித் திருபுரமும் தனதாக்கித்

    தித்திக்கும் வடிவாகித் திருவருளைத் தருபவளே

    தீதில்லா மனங்களிலே திருவீதி வலம்வந்து

    தீவினைகள் சுட்டெரிக்கும் திரிபுர சுந்தரியே !

     

    நீரோடு நெருப்பினிலே நடமாடும் காற்றினையும்

    நிலத்தோடு வானத்தின் வளமான வளியினையும்

    நிலையில்லா உடலுக்குள் நிழலாக உருவகித்து

    நினைவாகத் தானமர்ந்து நல்லருள் தருபவளே !

     

    சங்கரி சாம்பவி சடையனின் உறுதுணையே

    கயல்விழி காமினி கருணையின் உட்பொருளே

    பார்கவி பார்வதி பாகனை அழித்தவளே

    பாட்டினில் பைரவி பார்வையில் சுந்தரியே!

     

    சொல்லுக்குள் அடங்காமல் சிந்தைக்குள் சிதறாமல்

    மௌனத்தில் மறையாமல் மனதினில் நிறைந்தவளே

    எண்ணத்தில் எளிதாக சொந்தத்தை உருவாக்கி

    வானத்து வில்லாக வையகத்தை வார்த்தவளே !

     

    கோடிட்ட புருவங்களும் குலுங்கிட்ட காதணியும்

    குவிந்திட்ட கன்னத்தில் கோலமிடும் மின்மினியும்

    குளிர்ந்திட்ட பார்வையும் குறைவில்லா உடலழகும்

    நலுங்கிட்ட பாதங்களும் நெஞ்சத்தில் நிலைத்திடுமே!

     

    அன்றலர்ந்த மலராலே அர்ச்சனைகள் செய்தாலும்

    கண்ணமர்ந்து காட்சிதர கற்பகமே ! மறந்தாயோ?

    மண்ணிருந்து அழைக்கின்றேன் மாமணியே! மங்கலமே !

    விண்ணிருந்து வருவாயே விளக்கொளியில் வீற்றிடவே!

     

     

    Share
  • பி வி சிந்துவுக்கு நல்வாழ்த்துகள்

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக பி வி சிந்து அவர்களை அறிவிக்கிறோம்

    ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் பிவி சிந்து. அவர் புல்லால கோபிசந்தின் மாணவி. உலககோப்பை போட்டியில் அவரிடம் தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றவர் ஜப்பானிய வீராங்கனை நொசோமி ஒசுகாரா. ஆனால் இதற்குமுன் லண்டன் ஓபனில் வெற்றி பெற்றிருந்தார். இருவருக்குமிடையே சச்சிந் ஷேன் வார்ன் இடையே இருந்தது போல ஆரோக்கியமான போட்டி இருந்து வந்தது.

    இந்த சூழலில்  கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21௧9, 16௨1, 21௰ என்ற செட் கணக்கில் ஜப்பானின் மினட்சு மிதானியை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்தார்.

    அரை இறுதியில் சீனாவின் ஹி பிங்ஜியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப் போட்டியில் ஜப்பானின் ஓகுகாராவை எதிர்கொண்டார் சிந்து. உலகக் கோப்பை போட்டியில் ஓகுகாராவிடம் சிந்து தோற்றிருந்தார். இந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் சிந்துவின் ஆட்டத்தின் அனல் பறந்தது. ஓகுகாராவை 22௨0,11௨1,21௧8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கொரிய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் சிந்து. இப்பட்டத்தை வெல்லும் முதலாவது இந்திய வீராங்கணை பி.வி. சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

    1

    இதன்மூலம் இப்பட்டத்தை வெல்லும் முதலாவது இந்திய வீராங்கனை பி.வி.சிந்து என்ற சரித்திரம் படைத்துள்ளார். பிவி சிந்துவுக்கு சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் ஷேவக், ஆந்திர முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என நம்பிக்கொன்டிருந்த பலரையும் பாட்மிண்டன் பக்கம் திருப்பியதாலும், பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் நட்சத்திரமாகத் திகழ்வதாலும் சிந்துவின் வெற்றியை இந்தியப் பெண்கள் அனைவரின் வெற்றியாகவும் கருதி வல்லமை அவரை வாழ்த்துவதில் பெருமை அடைகிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170918 - DWA -Hrishikesha -The Carousel -lr

    ”சீரங்க ராட்டினம் சேய்வி ஜயர்சவாரி,
    பாரங்கள் போக்கிடும் பாரத -ஓரங்க
    நாடகம் சுற்றும் நவனீதக் கண்ணனவர்
    வீடகம் பாற்கடல்,பேர் விஷ்ணு’’….கிரேசி மோகன்….!

    Share
  • சூரி நாகம்மாள்….ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு….!

     

    ’’ஈருபத்து கைகளால் ஈசன்கை லாஸத்தை
    தாருபத்(து) அணிந்தவர் தூக்கிட, -வீறுகொண்டு
    வீழ்த்தினன் கட்டை விரலால் அவன்கர்வம்:
    வாழ்த்துமப்பர்(வாழ்த்துப் பண்பாடும் அப்பர் பதிகம்) பாடலின் வேட்கையால் -தாழ்த்தினர்
    நாள்நிறைய, தப்புணர்ந்த நாடகக் காரனவர்,
    தாள்மறைக் காட்டில் தடார்(திறப்பு)’’….கிரேசி மோகன்….!

    ஈருபத்து -இருபது….
    தாரு பத்து -மாலை பத்து(பத்து தலை, பத்து கழுத்து, 10 மாலை) இராவணர்….
    நாள் நிறைய -லேட்டாக…
    வாழ்த்துமப்பர் -வாழ்த்தும் அப்பர்….
    தாள் மறைக்காடு -வேதாரண்யக் கோவில் கதவு….

    Share
  • படக்கவிதைப் போட்டி (128)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    21622086_1427486197305575_203494868_n
    வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.09.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • சேர்த்து வைத்த கனவு..!

    பெருவை பார்த்தசாரதி

    dream girl

    பார்த்தமுதல் நாளிரவுமுதல் கனவில்வந்த நீதானெனக்கு

    ……….பத்தினியாய் ஆவாயென தினமும்நான் கனவுகண்டேன்.!

    ஊர்கூடி தேரிழுக்கும் வழக்கம்போல் உன்னைநானும்..

    ……….உற்றாறுறவினரொடு ஊரறியமணப்பது போல் கனவுவரும்.!

    கோர்க்கின்ற பூக்களெல்லாம் நாருடன் இணைவதுபோல்

    ……….கொண்டாடி மகிழத்தான் தினமும்நான் கனவுகண்டேன்.!

    சேர்த்துவைத்த கனவெலாம் சிலநாளில் நனவாகுமெனச்..

    ……….சென்றயிரவுகள்…..உறங்காததாக ஓராயிர மானதம்மா.!

     

    உருவத்தில் பெண்ணாய் உலகழகியாய்நீ வலம்வரவேணும்..

    ……….உனைப்படைத்திட்ட பிரம்மனே பெருமூச்சு விடவேணும்.!

    பருவநிலா புருவமுடன் படைத்திவளைப் படைத்தவனும்..

    ……….பாவலன்நானும்..கண்ட கனவுக்காட்சி நனவாகவேணும்.!

    ஒரு எண்ணிக்கையில் கண்டகனவுகள் கோடியானாலும்..

    ……….ஓரிரவுசேர்த்து வைத்தகனவுமொரு நொடியில் மறையும்..!

    வருத்தமுடன் குமுறுகிறேன்.!..வருவாயாநீ நிஜத்துடன்..

    ……….வாஞ்சையொடு வேண்டுகிறேன் இறைவாநீ அருள்வாயா.!

     

    எண்ணத்தில் தோன்றுவதில் ஆயிரம் வகையுண்டாமதில்..

    ……….ஏதொவொன்று ஆழமாய் ஊன்றிடினது கனவாகுமாம்.!

    கண்மூடியென் மனதில் கண்ணிறைந்த காரிகையாயுனைக்..

    ……….காண ஆவல்மிகுவதால்…அடிக்கடியென் கனவில்வருவாய்.!

    கிண்ணத்தில் நிரம்பியமதுவைப்போல்…கனவில் வந்தமாதுநீ..

    ……….கிட்டத்தில் வந்துவிடின் காதல்போதை உடன்தலைக்கேறும்.!

    பெண்ணெனும் உருவிலுன்னழகை உருவகமாய் என்மனதில்.

    ……….பெரிதாய்ச்சேர்த்து வைத்தகனவு….கலையுமோர் விடியலில்.!

    =============================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::11-09-17

    நன்றி:: படம் கூகிள் இமேஜ்

    Share
  • நீர் !

    எம் .  ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா

     

    பாரினிலே நாம்வாழ நீரெமக்கு முக்கியமே

    வேரினுக்கு நீரின்றேல் விருட்சமெலாம் வந்திடுமா

    ஊருக்கு ஒருகுளத்தில் நீர்நிரம்பி இருந்துவிடின்

    ஊரெல்லாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடுமே

    நீரின்றி பலமக்கள் நீழ்புவியில் இருக்கின்றார்

    ஆர்நீரைக் கொடுத்தாலும் அருந்திவிடத் துடிக்கின்றார்

    கார்கொண்ட மேகங்கள் கனமழையைக் கொட்டிவிடின்

    நீரின்றி இருப்பார்கள் நிம்மதியாய் இருப்பரன்றோ !

     

    விஞ்ஞானம் வளர்ந்ததனால் விந்தைபல விளைகிறது

    நல்ஞானம் எனமக்கள் நாளுமே போற்றுகிறார்

    அவ்ஞான வளர்ச்சியினால் அளவற்ற தொழிற்சாலை

    ஆண்டுதோறும் பெருகிநின்று அவலத்தைத் தருகிறது

    தொழிற்சாலைக் கழிவனைத்தும் தூயநீரில் கலக்கிறது

    அதையருந்தும் மக்களெலாம் ஆபத்தில் சிக்குகிறார்

    ஆபத்தைத் தடுப்பதற்கு ஆட்சியாளர் வராவிட்டால்

    அருந்துகின்ற நீராலே அவலம்தான் பெருக்கெடுக்கும் !

     

    கிராமப் புறங்களிலே கிணற்றுநீர் இருக்கிறது

    மழைபொய்த்து விட்டுவிட்டால் அந்நீரும் வற்றிவிடும்

    நகரப்புறங்களிலே நன்னீரே என்று சொல்லி

    தகரத்தில் போத்தல்களில் தண்ணீரைக் காணுகிறோம்

    விதம்விதமாய் போத்தல்களில் விற்கின்ற நீரனைத்தும்

    வெளிக்கிட்டு வருமிடத்தை யாருமே பார்ப்பதில்லை

    போத்தல்களில் வரும்நீரை  பொறுப்பின்றி அடைப்பதனால்

    குடிக்கின்றார் அனைவருமே கிடக்கின்றார் கட்டிலிலே !

     

    உயிர்வாழ வேண்டுமெனில் உடல்கேட்கும் நீரினையே

    நீரின்றி வாழ்ந்திடுதல் நினைத்திடவே முடியாது

    உட்செல்லும் நீராலே உடல்நிறைவு பெறுகிறது

    உயிரோட்டம் தருவதற்கு நீரெமக்கு தேவையன்றோ

    ஆற்றுநீர் ஊற்றுநீர் அனைத்தையும் குடித்தாலும்

    அசுத்தமில்லா நீரினையே அருந்திடுதல் முறையாகும்

    உள்போகும் நீரினைநாம் உயிரெனவே நினைத்திடுவோம்

    உவப்புடனே நீரருந்தி உலகத்தில் வாழ்ந்திடுவோம் !

     

    ஆபிரிக்க நாடுகளில் அருந்துதற்கு நீரில்லை

    அவர்நீரை எடுப்பதற்கு அலைந்தபடி இருக்கின்றார்

    ஆட்சிதனில் இருப்பார்கள் அதைப்பற்றி அலட்டாமல்

    ஆடிப்பாடி விடுதிகளில் அருந்துகிறார் குடிவகையை

    குடிக்கின்ற நீருக்குக் குடிகள்படும் அவலமதை

    குடித்தாட்டம் போடுகிறார் கொஞ்சமேனும் நினையாமல்

    அடிக்கின்ற கூத்ததனை ஆண்டவனே நீபாரு

    அல்லல்படும் மக்களுக்கு அருந்திவிட நீரைக்கொடு !

    Share