Author: கிரேசி மோகன்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180824-Aghasura -Bhagavatham A4-wcol charcoal – Agha is sin. -lr

    அகம்பாவ பாம்புள்ளே ‘ஆ’இடையர் சென்று,
    சுகம்பார்க்க சோதனை செய்ய -முகுந்தர்,
    புகுந்தார் அங்கு பசுபாசம் மேய்த்தார்,
    உகந்தார் சுகபிரம்ம மாய்*….!
    (அல்லது ஈற்றடி)
    பகல்பத்து ராப்பத்து பத்து(பத்மநாபர்)….கிரேசி மோகன்….!

    * -பிரம்மா ஆக்களை, இடையர்களை ஒளித்து வைக்க கண்ணன் ஒருவருடம் ஆவாய், இடையராய் ஆயிரம் வடிவெடுத்து
    அகத்திற்கு(வீட்டுக்கு) செல்ல, பிரம்ம மாயை சரண்புகல் ’’(கேசவ் உவாச)’’….!

    Share
  • ”ஹேப்பி வரலஷ்மி விரதம்’’….!

     

    உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்,
    பத்தும் செய்யா பணமுடிப்பில், -சுத்தமாய்
    சாணத் தெளிப்பில்,ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
    காணலாம் பொன்மகளின் கால்….!

    ”நல்லவெள்ளி இன்று, நலம்புகழ் செல்வத்தை
    இல்லத்தில் அம்பாள் இறைத்திடுவாள், -(கற்பக)வல்லியவள்
    ஆடி பராசக்தி, அண்ணனோ ஆயர்தம்
    பாடிமுராரி வெள்ளியைப் பொன்(தங்கம்)’’….கிரேசி மோகன்….

    Share
  • வெண்பாகவதம்(தொடர்ச்சி….!)

     

    கூர்மாவதாரம்….!
    ——————–

    துர்வாசர் இட்ட தொடையை எறிந்திட
    கர்வாதி கத்தில் களிறின்மேல் -சர்வாதி
    காரத்தால் பெற்ற கடுத்தமுனி சாபத்தின்
    பாரத்தால் வானத்தோன் பாழ்….!

    சாப விமோசனத்தை, சாகரப் பாற்கடலை
    மாபெரும் மந்தார மத்தினால், -நீபெருவாய்
    வாசுகி தாம்பால் வளைத்துக் கடைந்திட;
    வாசுதேவன் விண்ணுக்கு வாக்கு….!

    வாசுகி உச்சியை வானோர் பிடித்திழுக்க
    ஆசு அசுரர் அதன்வாலில் -கோஷமிட
    மந்தார வெற்பன்று மூழ்குதலைத் தாங்கிட
    வந்தாராம் ஆமையாய் விஷ்ணு….!

    அப்போது பீறிட்ட ஆலகால நெஞ்சினை
    துப்பாது உண்ணாது தொண்டையில் -எப்போதும்
    கொண்டனன் சம்பு; கிளர்ந்த இலக்குமியைக்
    கொண்டனன் கூர்மம் கரத்து….!

    தன்வந்த்ரி தந்த திருக்கண் அமுதருந்த
    முன்வந்த தானவரை மோகினிப் -பெண்வந்து
    ஆசையைக் காட்டியவர் மோசமுற, விண்ணோரை
    ஈஷியிட்டார் விஷ்ணு இலை….!

    வராகாவதாரம்….!
    ——————-

    ஏன உருவெடுத்து ஈன இரணியாக்ஷன்
    ஊனை ஒழித்து உலகத்தை -கோண
    எயிறேந்தும் பாகவத எம்பிரானை ஏத்த
    உயிரேந்தும் நெஞ்சுக்(கு) உவப்பு….(OR)
    எயிறேந்தும் பாகவத எம்பிரானால் ஞானப்
    பயிரேந்தும் ஆன்ம வயல்….!

    மண்வாசம் மூக்கால் முகர்ந்த வராகம்பார்
    பெண்வாசம் செய்யும் பரவைக்குள் -மின்வீசும்
    கொம்பை நுழைத்து குவலயத்தை மீட்டபின்
    வம்பை அழைத்தார் விலைக்கு….!

    ”மண்ணின்தன் மைந்தன்நான் மாயப் பிசாசுநீ
    எண்ணி முடிப்பதற்குள் ஏகிப்போ” -சொன்ன
    முரணானோன் மேனியில் மோதிட ஏனம்
    இரணியாக்ஷன் வாழ்வுக்(கு) இழவு….

    ஏனத்தால் ஈன்ற பொழுதில் பெரிதுவந்த
    மானத்தை வாங்கும் மகனபி -மானத்தால்
    தந்தை மகாவிஷ்ணு தாள்வைத்து பூதேவி
    விந்தையாய் வேண்டினள் வாழ்த்து….!

    நாரண அம்பை நரகனுக்கு தந்தபின்
    வேறென்ன வேண்டுமென்ற விஷ்ணுவிடம் -பூரணத்வம்
    தாவென்ற பிள்ளைக்கு தாயன்றி யாராலும்
    சாவில்லை என்றார் சிரித்து….!

    ”மத்தவர் யாருமேதான் மாதவன் மீதுவைத்த
     பக்திக்(கு) இணையாமோ !” பீற்றிய -உத்தவர்
     கோவர்த் தனக்கற்கள் கண்ணனைக் காணாது
     பூவொத்து வாடியதைப் பார்ப்பு….!

    கண்ணனின் பாதக் கமலச் சுவடுகள்
    இன்னமும் கோபியர் இல்லத்தில் -வண்ணமாய்
    உள்ளதைக் கண்டுள்ளம் உத்தவர் வெட்கினார்
    கள்ள மிலாஅன்பைக் கண்டு….!
    ——————————————————————-
    நரசிம்மாவதாரம்….
    ————————
    அல்லில் பகலில் அகத்துள் அதன்வெளியில்
    புல்புழு பூச்சி பறவையால் -கொல்லும்
    மனிதனால் காட்டு மிருகத்தால் சாகா
    தனதுயிர் கேட்டுத் தவம்….!

    இரணியன் வேள்விக்(கு) இரங்கி அயனும்
    வரனெனத் தந்தனன் வாக்கு -தரணிகள்
    மூன்றையும் வென்றஅம் மூர்கன் மகனாக
    தோன்றினன் நாரணத் தொண்டு….!

    ”நாரா யணஓம் நமஹவை நாள்தோறும்
     பாரா யணம்செய் பிரகலாதா” -பூரண
     கர்ப வதிகயாது காதுவழி சேய்க்குரைத்தான்
     நற்கதியை நாரதன் நன்கு….!

    அச்சுதன் நாமம் அனவரதம் ஓதுவோனை
    அச்சுறுத்தி தன்வழிக்(கு) ஆட்படுத்த -அச்சன்
    இரணியன் போட்ட இடர்களைத் தாண்டி
    மறையென நின்றான் மகன்….!

    முட்டவந்த ஆனைககள் எட்டு திசைகளிறும்
    முட்டியிட்டுச் சுட்டி மழலையை -வட்டமிட்டு
    காட்டியபின் கூறும் கஜேந்திர மோட்ஷத்தைக்
    கூட்டியவன் பக்தனுக்கு காப்பு….!

    பக்தீயில் மூழ்கும் பிரகலாத சாமியை
    பத்தி எரியும்தீ பூவாகி -சுத்திவரும்
    மீறிய நஞ்சும் மிதமாய் அமிழ்தாகும்
    சூரியன்மேல் வைப்பாரோ சூடு !….!

    விண்முகடு கொண்டுபக்தி வீரத்தை வீசிட
    மண்மகள் ஏற்றாள் மலர்மகளாய் -பின்முதுகில்
    பாறையைப் பாம்பால் பிணைத்தாழி போட்டிட
    கோரையைப் போலெழுந்தான் குஞ்சு….(or)
    பேரலை போலெழுந்தான் பிஞ்சு….!

    கோவிந்தா என்றுரைக்க குத்தவந்த ஈட்டியின்கண்
    நாவின்தன் மென்மையாய் நைந்தது -சாவிந்த
    பிள்ளைக்கு இல்லையென போயுரைத்தார் மன்னனிடம்
    நொள்ளையான ஆட்கள் நமுத்து….!

    ஆருனக்குத் தந்தார் அதிசிய சக்தியை
    கூறெனக்கு என்று கொதித்தஅப -சாரனுக்கு
    நாரண சக்திக்கு பூரண பக்தியே
    காரணம் என்றான் கொழுந்து….!

    காட்டடா அந்தக் கருநீலப் பூதத்தை
    போட்டடைப்பேன் இத்தூணில் பூச்சியாய் -வேட்டையை
    ஆடத் துவங்கிய அப்பனுக்குக் காட்டினான்
    கூடத்து தூணுக்கே கை….!

    பக்தப் பிரகலாதன் பேச்சை ருஜுப்படுத்த
    சக்திக்கு மீறிய சங்கடமாய் -திக்கெட்டை
    தேகமாய்க் கொண்டவன் ஏகினான் தூண்வேக 
    வேகமாய் வைகுண்டம் விட்டு….!

    கள்ளத் தனம்செய்தென் பிள்ளை பிடித்தவனே
    உள்ளத் துணிவிருந்தால் ஊர்ந்துவா -முள்ளிட்ட
    பாதுகையால் தூணுதைக்க பாதிநர பாதிசிங்கம்
    காதுசிகை கோதி குதிப்பு….(OR)
    காதுபுடைத் தாங்கே குதிப்பு….!

    சாயங்கா லம்வரை சண்டை புரிந்தந்த
    சீயங்கா லைமடித்து, சோர்ந்தெழுந்து -பாயும்
    இரணியனை தூக்கி இடைவாசல் வைத்து
    கரநுனியால் கீறிக் கிழிப்பு…..!

    ஆவேச மான அரியை அடக்கிட
    பூவாசத் தாயே பயந்திட -சாவாச
    மாகவந்த பிள்ளை மடியமர்ந்து சிங்கத்தின்
    தேகம் தழுவத் தணிவு….!

    கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
    உச்சரிக்க நாமம் உரத்தப்போ -உச்சி
    குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
    மெலிந்துகர் ஜிக்க மியாவ்….!

    ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
    சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
    திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
    களைத்தல் கதையின் கருத்து….!

    துருவ சரித்திரம்
    ———————
    உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டு
    சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி
    சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள்
    சக்களத்தி மாதுசுரு ஸி….!

    சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
    தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
    தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப்
    பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….!

    கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட
    துருவன் மனக்குறையை தாய்முன் -உருக
    அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில்
    சுநீதி அமரென்றாள் சேய்க்கு….!

    மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு
    ஏதேனும் உண்டோவென்(று) எண்ணியசேய் -பீதாம்
    பரனை தரிசிக்கப் போகத்தம் பூரா
    கரனை தரிசித்தான் கண்டு….!

    வாசுதேவ மந்திரத்தை தேசிகர் நாரதர்
    தேசுமிகு சேய்க்குப தேசித்து -கேசவர்க்கு
    தாசனாய் வாசனாதி தோஷமின்றி வாழ்த்தென்றார்
    ஆசன தர்ப்பை அமர்ந்து…!

    கனியில் துவங்கியவன் காய்ந்த சருகை,
    பனிநீரை, காற்றைப் புசித்து -முனியாய்
    குடைசாய மூன்று குவலயங்கள் காலை
    திடமாக ஊன்றி தவம்….!

    ஈரைந்து மாதமேந்தி ஈன்றவள் சொற்கேட்டு
    பேரைந்து மூன்றெழுத்தைப் பார்த்திட -ஓரைந்து
    மாதங்கள் செய்த மகாதவத் தால்வியந்து
    வேதங்கள் மூக்கில் விரல்….!

    கும்பகத்தால் காற்று குறைந்திட மூச்சடைத்து
    உம்பர்கள் ஓடி உலகெடுத்த -கொம்பனை
    வேண்ட கருடாழ்வான் வாகனம் மீதமர்ந்து
    ஆண்டவன் காட்சி அளிப்பு….!

    உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
    துருவன் விழிகள் திறக்க -அருவம்
    கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
    வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….!

    மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
    ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
    வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
    ஆணில் சிறந்தோன் அளிப்பு….!

    பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
    உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
    கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
    கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!

    On Fri, Aug 24, 2018 at 11:55 PM crazy mohan <crazy.mohan@gmail.com> wrote:, வெண்பாகவதம் தங்கள் மேலான பார்வைக்கு….!

    வாமனாவதாரம்….
    ————————

    யாகாதி பாகத்தை ஈயாது போனதால்
    ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற
    சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான்
    சக்கிர வர்த்தி சிறப்பு (or) ஜொலிப்பு….!

    பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
    அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
    பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
    ஓணத்தில் சேயாய் உதிப்பு….!

    அதிதி உபசாரம் அன்று புரிந்தோன்
    புதிய அவதாரப் பிள்ளை -குதியிட்டு
    மாவலி முன்சென்றான் மூன்றடி வாமனனாய்
    தாவலில் நெஞ்சம் திளைத்து….!

    தாழங் குடையிடக்கை, தண்ணீர் கமண்டலம்
    வாழிய காட்டும் வலக்கையில் -சோழியன்
    உச்சியொடு வந்தவன் அச்சுதன் என்றுகுரு
    எச்சரித்தும் மாபலி ஏற்பு….!

    அந்தண வாமனர்க்கு வந்தனம் செய்துபலி
    தந்தனன் கேட்ட திருவடிக்கு -மண்தனை
    வண்டெனநீர் வார்க்கையில் வாத்தியார் வந்துக
    மண்டல வாயை மறைப்பு….!

    உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
    சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
    விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
    அக்கணம் வாமனன் அங்கு….!

    ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
    சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி
    பாதாளம் செல்ல பலியை அழுத்திட
    சேதாரம் இன்றியவன் சேர்பு….!

    தானாகக் தானத்தை தந்திடும் தந்தைமுன்
    வீணாக வேடமிட்டு வாமனமாய்ப் -போனீர்கள்!
    பாணா சுரப்பிள்ளை போட்ட வினாக்(கு)ஏன
    மீனாமை சிம்ம மறுப்பு….!

    ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
    வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
    மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
    ஆவேச நானை அழிப்பு….!

    —————————————————————-
    கபிலாவதாரம்
    ——————–
    தேவஹுதி கர்த்தமர் தம்பதிக்குப் பிள்ளையாய்
    காவலாதி தெய்வம் கபிலகுரு -தேவராய்த்
    தோன்றிப் பெரிதுவந்த தாய்க்குப தேசமாய்
    ஊன்றினார் பக்தி உலகு….!

    கபில உவாச….
    ———————–
    இயற்கையின் மாய இயல்பைக் கடந்து
    பெயர்ந்திட ஜீவ புருஷன் -உயர்கிறான்.
    ஆரா தனையாலும் ஆன்மவிசா ரத்தாலும்
    நாரா யணனில் நிலைப்பு….!

    மாசிலா நெஞ்சமாய், ஆசனங்கள் செய்தந்த
    வாசுதேவ ரூபத்தை, வைகுண்ட -வாசனாக
    பஞ்சா யுதமேந்தி புள்ளமர்ந்த நீலனாக
    நெஞ்சார உன்னுள் நிறுத்து….!

    காமமற்ற லீலையை, கல்யா ணகுணத்தை
    நாமசங் கீர்த்தனமாய் நாவுரைக்க -தாமசமில்
    கங்கா நதியொத்த மங்கா மனத்துடையோர்(கு)
    இங்கே பிறப்(பு)இறப்(பு) ஏது….!

    பத்தினியின் மோகத்தால் பிள்ளைமேல் பாசத்தால்
    சொத்துசுகம் சேர்க்க செயல்படுவாய் -அத்துமீறி.
    முத்திபெறும் மார்கத்தில் மூலத்தைக் காணாது
    இத்தனை கஷ்டமேன் இங்கு….1

    நான்யார் அறிவு நிரம்பி இருப்பினும்
    தாயார் வயிற்றில், தளும்பியபின் -சேயார்வ
    சிக்கல்கள் தாண்டிட சூழ்ந்திடும் யவ்வன
    சொக்கல்கள் சூழ்ச்சிச் சுழல்….!

    பூதபித்ரு தேவரை பூஜிக்கும் இல்லறத்தோன்
    பாதையாம் தக்கிணத்தில், புண்ணியப் -போதுசெல்ல
    இத்தரை வந்திடுவான், உத்திர மார்கமோ
    முத்தியூர் சேர்க்கும் முடிவு….!

    தாங்கிய தாய்க்குத் தனயன் உரைத்தனன்
    சாங்கிய யோகத்தை சேவையாய் (OR) செவ்வெனே -வாங்கிய
    ஆத்மவித்யா சக்தியால் ஐக்கியம் ஆயினள்
    தீர்த்தம்சித் தாசிரமத் தில்….!

    ————————————————————————————-
    Vதுருவ சரித்திரம்
    ———————
    உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டு
    சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி
    சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள்
    சக்களத்தி மாதுசுரு ஸி….!

    சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
    தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
    தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப்
    பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….!

    கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட
    துருவன் மனக்குறையை தாய்முன் -உருக
    அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில்
    சுநீதி அமரென்றாள் சேய்க்கு….!

    மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு
    ஏதேனும் உண்டோவென்(று) எண்ணியசேய் -பீதாம்
    பரனை தரிசிக்கப் போகத்தம் பூரா
    கரனை தரிசித்தான் கண்டு….!

    வாசுதேவ மந்திரத்தை தேசிகர் நாரதர்
    தேசுமிகு சேய்க்குப தேசித்து -கேசவர்க்கு
    தாசனாய் வாசனாதி தோஷமின்றி வாழ்த்தென்றார்
    ஆசன தர்ப்பை அமர்ந்து…!

    கனியில் துவங்கியவன் காய்ந்த சருகை,
    பனிநீரை, காற்றைப் புசித்து -முனியாய்
    குடைசாய மூன்று குவலயங்கள் காலை
    திடமாக ஊன்றி தவம்….!

    ஈரைந்து மாதமேந்தி ஈன்றவள் சொற்கேட்டு
    பேரைந்து மூன்றெழுத்தைப் பார்த்திட -ஓரைந்து
    மாதங்கள் செய்த மகாதவத் தால்வியந்து
    வேதங்கள் மூக்கில் விரல்….!

    கும்பகத்தால் காற்று குறைந்திட மூச்சடைத்து
    உம்பர்கள் ஓடி உலகெடுத்த -கொம்பனை
    வேண்ட கருடாழ்வான் வாகனம் மீதமர்ந்து
    ஆண்டவன் காட்சி அளிப்பு….!

    உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
    துருவன் விழிகள் திறக்க -அருவம்
    கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
    வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….!

    மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
    ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
    வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
    ஆணில் சிறந்தோன் அளிப்பு….!

    பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
    உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
    கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
    கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!

    On Fri, Aug 24, 2018 at 11:55 PM crazy mohan <crazy.mohan@gmail.com> wrote:, வெண்பாகவதம் தங்கள் மேலான பார்வைக்கு….!

    வாமனாவதாரம்….
    ————————

    யாகாதி பாகத்தை ஈயாது போனதால்
    ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற
    சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான்
    சக்கிர வர்த்தி சிறப்பு (or) ஜொலிப்பு….!

    பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
    அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
    பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
    ஓணத்தில் சேயாய் உதிப்பு….!

    அதிதி உபசாரம் அன்று புரிந்தோன்
    புதிய அவதாரப் பிள்ளை -குதியிட்டு
    மாவலி முன்சென்றான் மூன்றடி வாமனனாய்
    தாவலில் நெஞ்சம் திளைத்து….!

    தாழங் குடையிடக்கை, தண்ணீர் கமண்டலம்
    வாழிய காட்டும் வலக்கையில் -சோழியன்
    உச்சியொடு வந்தவன் அச்சுதன் என்றுகுரு
    எச்சரித்தும் மாபலி ஏற்பு….!

    அந்தண வாமனர்க்கு வந்தனம் செய்துபலி
    தந்தனன் கேட்ட திருவடிக்கு -மண்தனை
    வண்டெனநீர் வார்க்கையில் வாத்தியார் வந்துக
    மண்டல வாயை மறைப்பு….!

    உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
    சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
    விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
    அக்கணம் வாமனன் அங்கு….!

    ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
    சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி
    பாதாளம் செல்ல பலியை அழுத்திட
    சேதாரம் இன்றியவன் சேர்பு….!

    தானாகக் தானத்தை தந்திடும் தந்தைமுன்
    வீணாக வேடமிட்டு வாமனமாய்ப் -போனீர்கள்!
    பாணா சுரப்பிள்ளை போட்ட வினாக்(கு)ஏன
    மீனாமை சிம்ம மறுப்பு….!

    ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
    வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
    மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
    ஆவேச நானை அழிப்பு….!

    —————————————————————-
    கபிலாவதாரம்
    ——————–
    தேவஹுதி கர்த்தமர் தம்பதிக்குப் பிள்ளையாய்
    காவலாதி தெய்வம் கபிலகுரு -தேவராய்த்
    தோன்றிப் பெரிதுவந்த தாய்க்குப தேசமாய்
    ஊன்றினார் பக்தி உலகு….!

    கபில உவாச….
    ———————–
    இயற்கையின் மாய இயல்பைக் கடந்து
    பெயர்ந்திட ஜீவ புருஷன் -உயர்கிறான்.
    ஆரா தனையாலும் ஆன்மவிசா ரத்தாலும்
    நாரா யணனில் நிலைப்பு….!

    மாசிலா நெஞ்சமாய், ஆசனங்கள் செய்தந்த
    வாசுதேவ ரூபத்தை, வைகுண்ட -வாசனாக
    பஞ்சா யுதமேந்தி புள்ளமர்ந்த நீலனாக
    நெஞ்சார உன்னுள் நிறுத்து….!

    காமமற்ற லீலையை, கல்யா ணகுணத்தை
    நாமசங் கீர்த்தனமாய் நாவுரைக்க -தாமசமில்
    கங்கா நதியொத்த மங்கா மனத்துடையோர்(கு)
    இங்கே பிறப்(பு)இறப்(பு) ஏது….!

    பத்தினியின் மோகத்தால் பிள்ளைமேல் பாசத்தால்
    சொத்துசுகம் சேர்க்க செயல்படுவாய் -அத்துமீறி.
    முத்திபெறும் மார்கத்தில் மூலத்தைக் காணாது
    இத்தனை கஷ்டமேன் இங்கு….1

    நான்யார் அறிவு நிரம்பி இருப்பினும்
    தாயார் வயிற்றில், தளும்பியபின் -சேயார்வ
    சிக்கல்கள் தாண்டிட சூழ்ந்திடும் யவ்வன
    சொக்கல்கள் சூழ்ச்சிச் சுழல்….!

    பூதபித்ரு தேவரை பூஜிக்கும் இல்லறத்தோன்
    பாதையாம் தக்கிணத்தில், புண்ணியப் -போதுசெல்ல
    இத்தரை வந்திடுவான், உத்திர மார்கமோ
    முத்தியூர் சேர்க்கும் முடிவு….!

    தாங்கிய தாய்க்குத் தனயன் உரைத்தனன்
    சாங்கிய யோகத்தை சேவையாய் (OR) செவ்வெனே -வாங்கிய
    ஆத்மவித்யா சக்தியால் ஐக்கியம் ஆயினள்
    தீர்த்தம்சித் தாசிரமத் தில்….!

    ————————————————————————————-

    Share
  • வெண்பா கவதம் -தொடர்ச்சி

     

    கோன்சத் தியவிரதன் கையபி ஷேகநீரில்
    மீன்சுத் திவந்து மிகப்பெரிதாய் -வான்பொத்தல்
    ஆகத் திமிங்கலமாய் ஆக அரசனும்
    தாகமென்ன கேட்டான் திகைத்து….()….13-09-2011

    ஞானியர்கள், ஜீவர்கள், தானியங்கள் ஜோடியாய்
    தோணியிட்டு வாசுகித் தாம்பினால் -ஆணியிடு
    உச்சியுள்ள கொம்பென்(று) உரைத்தது பாகவத
    மச்சா வதாரத்து மீன்….()….13-09-2011

    மனவா சுகியால் மனித கலத்தை
    வினையூழி நாளில் வலிக்க -உனைமீன்
    உருவில் இழுத்து உயர்நலம் சேர்க்கும்
    குருவின் மகிமை கருத்து….()….13-09-2011

    வருவித்த வெள்ளம் வடியும் வரையில்
    பிறவித் தலைவர் பிரமன் -தருவித்த
    தூக்கமவர் கண்மூட சாக்கென்று தானவன்
    தூக்கிச்சென் றான்வேதத் தை….()….13-09-2011

    தானவன் குதிரைத் தலையைத் துணித்தபின்
    மீனவன் மீட்டான் மறைநான்கை -மானவகேள்
    தூங்குமயன் தாமசம், தீயரக்கன் ஆணவம்
    தாங்குமீன் ஆன்மா துணை….()….13-09-2011

    Share
  • வேதாந்த அந்தாதி….!

     

    ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறுத்தாலும்
    காக்கும் கடவுள் கவலைப்படான் -நோக்கு
    விதித்ததை ஏற்றி வினையால் அணைத்து
    புதைப்ப(து) அவன்பொழுது போக்கு….(1)….20-1-2010

    போக்கத்(து) உலகில் பொழுதைக் கழித்திரு
    காக்கும் கடவுளுடன் கைகோர்த்து -தாக்கும்
    செடியாய வல்வினைகள் செங்கரும்பாம், ஊன்றத்
    தடியாகும் பட்டினத் தார்….(2)….20-1-2010

    தாரில் மலரவன் நாராம் மணக்கும்நாம்
    சோறில் சுவையவன், சக்கைநாம் -நேரில்
    வரத்தயங்கும் கீதமவன் வந்துவிட்ட நாமக்
    கரத்தியங்கும் புல்லாங் குழல்….(3)….20-1-2010

    குழலுற்ற கீதத்தைக் காதுற்றுக் கேளீர்
    விழலுக்(கு) இறைக்காதீர் வீணாய் -தழலுக்குள்
    வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது
    சாகாத அவ்வுணர்வே சத்து….(4)….20-1-2010

    சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு
    அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி
    மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்
    உனையுண்ணத் தூக்கும் உறவு….(5)….21-1-2010

    உறவும் பகையும் துறவும் தெளிவும்
    வரவு செலவாகும் வாழ்க்கை -பறவை
    ஒருகூடு விட்டு மறுகூடு போகும்
    பெறுவீடு காணப் பயன்….(6)….21-1-2010

    பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்
    வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
    அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
    மரணத்தில் தானே முடிவு….(7)….21-1-2010

    முடிவற்ற ஆசை முதலுக்கே மோசம்
    வெடிவைத்து வந்திடுமா வானம் -படியற்ற
    சொர்கத்தைக் காண செடியேறு கின்றாயே
    தர்கமற்ற தேடல் தவம்….(OR)
    தர்கத்தைத் தாண்டல் தவம்….(8)….21-1-2010

    தவமாய்த் தவமிருந்து தத்துவங்கள் தேர்ந்து
    சவமாய் சுடுகாடு செல்வீர் -சிவஞானம்
    சிந்திக்க வாராது சித்தம் ஒருமிக்க
    சந்திக்க முந்துவான் சம்பு….(9)….21-1-2010

    சம்பு மஹேசனை நம்பியவன் நானென்று
    கும்பிடப் போக வரும்குறுக்கே -ஒன்பது
    வாசலுடற் கோசத்தில் நேசமுறக் காண்போமே
    ஈசனிடம் சாத்தான் இயல்பு….(10)….21-1-2010

    இயல்பாய் இருத்தல் இயலாமல் பாடும்
    குயில்கரையும் காகத்தின் கூட்டில் -பயில்வீர்
    பெருக்கெடுக்கும் கங்கையும், பாழான நீரும்
    சிரம்தெளித்துக் கொள்ளும் சமம்….(11)….21-1-2010

    சமர்த்தஅவ் ஆன்மனை சிந்தா சனத்தில்
    அமர்த்தி இகபரம் ஆளு -நிமிர்த்த
    முடியாத நாய்வால், மரம்தாவும் மந்தி
    விடியாத நெஞ்சை விலக்கு….(12)….22-1-2010

    விலக்க விருப்பம் , விரைந்து நெருங்கும்
    விளக்கம் தெளிவு விடியல் -கலக்கம்
    இனிநமக்(கு) இல்லைநாம் கண்ணனைப் போல
    தனிமரத் தோப்பில் திளைப்பு….(13)….22-1-2010

    திளைப்பாய், இளைப்பாய், களைப்பாய் புலனார்
    அலைக்கழிப்பால் ஆயுள் அடைப்பாய் -முலைப்பால்
    அருந்திட மீண்டும் அவனிக்கு வருவாய்
    திருந்திட ஏற்பாய் துறவு….(14)….22-1-2010

    துறவில் மரமாய், உறவில் கிளையாய்
    பிரிவில் கனியாய்ப் பழுத்து -நிறைவில்
    நிலைத்திருப்பாய் நெஞ்சமே ஞானக் கடலின்
    அலைக்கரத்தால் மண்தொட்(டு) அகன்று….(15)….22-1-2010

    அகன்று விரியும், அணுவாய்க் குறையும்
    உகந்த உறவில் உலவும் -புகன்ற
    மறைகளும் காணா மகத்துவம் நெஞ்ச
    அறைதனில் வாழும் அவன்….(16)….22-1-2010

    அவனால் அவனி, அவன்தான் புவனி
    அவனை அவனால் கவனி -அவனே
    வருவான் குருவாய் அறிவைத் தருவான்
    பெருவாய் பரம பதம்….(17)….22-1-2010

    பதப்பருக்கை பானை புசிக்கின்ற பூதம்
    முதற்கொண்டிங்(கு) எல்லாமே மாயை -எதற்காக
    அம்மா பசியென்றிங்(கு) ஆலாய்ப் பறக்கின்றாய்
    சும்மா இருக்க சுகம்….(18)….23-1-2010

    சுகம்கிடைத்தும் ஓரிடத்தில் சும்மா இராமல்
    நகம்கடித்து நாற்புறமும் நோக்கி -முகம்சுளிப்பாய்
    மேலான பேரின்பம் தோலால் கிடைக்காது
    வேளாண்மை செய்யான்மா வில்….(19)….23-1-2010

    வில்லிருந்தும் தோளிருந்தும் வீரம் பிறக்காது
    கள்ளிருந்தும் போதை கிடைக்காது -உள்ளிருக்கும்
    ஆன்மனே ஆண்மை அவனெழுச்சி சம்போகம்
    ஊன்மனங்கள் சோரும் உறுப்பு….(20)….23-1-2010

    உறுப்பதற்கு ஞானம், உரைப்பது மோனம்
    பிறப்பிறப்(பு) இல்லா புருஷன் -கருப்பொருளாய்
    சக்தியவள் , அன்பில் சிவனவன், பாலில்
    யுக்தியிலாண் பெண்ணாம் அது….(21)….23-1-2010

    அதுவாக ஓர்நாள் ருதுவாகும் ஆன்மா
    அதுவரை ஐம்புலனை ஆள்வாய் -கதையல்ல
    கற்பனை மாயையைக் கட்டக் களித்துடுவான்
    அற்பனும் அக்குடையை ஆண்டு….(22)….26-1-2010

    ஆண்டோனும் ஆண்டியும் மாண்டபின் மீண்டுமிங்கு
    ஆண்டியாய் ஆண்டோனாய் ஆகிடுவர் -வேண்டாமே
    வேஷமிது அஞ்ஞானம் வேதாந்த கும்பலின்
    பாஷையில் கோவிந்தா போடு….(23)….26-1-2010

    போடுவதை உண்ணாது போயின்ப வேட்டையில்
    ஆடியிரை ஆகி அனல்சுடு -காடுவர
    அய்யோ எனக்கூவ அய்யோ மணவாளன்
    கொய்யா(து) இருப்பானா கூறு….(24)….26-1-2010

    கூறிடும் கீதை குரான்பைபிள் எல்லாமே
    போரிட ஐம்புலன் போகுமென்று -சாறான்மா
    விட்டிந்த சக்கையாம் கட்டையைப் பேணுகிற
    மட்டிங்கு ஜீவனுக்கு மண்….(25)….26-1-2010

    மண்ணோடு மண்ணாகும் மேனியை மெய்யென்று
    உன்னோடு சேர்த்து உழலாதே -பெண்ணோடு
    ஆணாகும் பேரின்ப ஆன்மா அசலாம்
    நானாகும் தோற்றம் நகல்….(26)….27-1-2010

    நகிலைப் புகழ்ந்து முகில்குழலைப் பாடி
    துகிலணி மாதர் துணையே -புகலென்று
    வீழ்ந்து வணங்காதே தாழ்ந்து துதிக்காதே
    ஆழ்ந்திரு ஆன்மாவில் வாழ்ந்து….(27)….27-1-2010

    வாழ்க்கையில் வென்றென்ன வாரிக் குவித்தென்ன
    சீழ்க்கை அடித்து சிலிர்த்தென்ன -ஊழ்பையன்
    எள்ளி நகையாடி ஏய்ப்பது கேட்கிலையோ
    பள்ளி எழுந்திருப் பாய்….(28)….27-1-2010

    பாயில் படுத்து பணியாய் புணர்ந்திட
    நோயாய் வயோதிகம் நேர்ந்ததே -காயை
    தனியாய்த் தவத்தில் பிணிமூப்(பு) இராது
    கனியாக்கும் வித்தையைக் கல்….(29)….27-1-2010

    கல்வியா செல்வமா கேட்போர்க்கு வீரமாய்
    சொல்லுவாய் ஆன்ம சுதந்திரத்தை -அல்லலாய்
    பாரமாகி மூப்பில் பிணியுற்ற வேளையில்
    வீரமா கோழைக்கு வாய்ப்பு….(30)….27-1-2010

    வாய்க்கரிசி போட்டவாய் மாய்ந்தவுயிர் போகும்முன்
    வாய்க்கு ருசியாய் விருந்துண்ணும் -வாய்க்குவாய்
    பேராண்மை போற்றுவர் பத்தாம்நாள் தூற்றுவர்
    ஓரான்மா தானுன் உறவு….(31)….27-1-2010

    உறவுக்குத் தேவை உருவும் திருவும்
    கறவைக்குப் பின்லாடம் காலில் -பறவைக்கு
    உள்ள சுதந்திரமும் இல்லை, சிறகுவிரி
    கள்ளத் தனத்திலென்ன கற்பு….(32)….28-1-2010

    கற்பூர வாசனை கழுதை அறியுமா
    விற்பனைக்கு வந்தாலும் வீடுபெறும் -நற்கதியை
    நெஞ்சமது ஏற்காது வஞ்சக மாயைகை
    அஞ்சுவிரல் கோர்க்கும் அசடு….(33)….28-1-2010

    அசடுக்கு உண்டு அடைக்கும்தாள் வாழ்க்கை
    கசடற கற்றுக் கொடுத்தும் -முசுடாய்
    கதவைத் திறக்காது, காற்றாக ஞானப்
    பதவி வரப்போடும் பூட்டு….(34)….28-1-2010

    பூட்டாத நெஞ்சக வீட்டாசை வாயிலில்
    கூட்டைம் புலன்களே காவலாம் -கோட்டான்கள்
    ஆண்டவன் வேடத்தில் ஆளை மயக்கிடும்
    வேண்டாமை வேண்டல் விதி….(35)….28-1-2010

    விதியை ஜெயிக்க மதியின் முயற்சி
    நதியை குடத்தில் நிரப்பல் -எதையும்
    புதிதாய்ப் பழகேல் பழயன போற்று
    உதவிக்கு உபநிடதம் உண்டு….(36)….28-1-2010

    உண்டாகி உண்டுமிழும் குண்டாகி, வேதக்கற்
    கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
    செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
    ரெண்டாகி வந்துபோகும் பண்டு….(37)….29-1-2010

    பண்டமாய் பாத்திரமாய் உண்டவனாய் ஜீரணிப்பாய்
    பிண்டமாய் மோட்சமாய் பித்ருவாய் -எண்டிசையாய்
    பூதமாய் புல்பூண்டாய் யாதுமாய் உள்ளதாய்
    ஆதலே ஆன்மீக ஆய்வு….(38)….1-2-2010

    ஆய்ந்தரிய ஆன்மா அவரைக்காய் அல்லவே
    மேய்ன்தழியும் ஐம்புல மாடுகளை -சாய்ந்திருந்து
    வேடிக்கைப் பார்த்திடும் வேதாந்த பட்சியாம்
    பாடிக்கை கோர்த்துப் பற….(39)….3-2-2010

    பறந்திடும் ஆவி ,பிறந்திறக்கும் மேனி
    மறந்திடும் மாயமனக் கூனி -நிரந்தரம்
    ஒன்றந்த ஆன்மனுடன் ஒன்றி இருத்தலே
    கன்றிந்த ஜீவனுக்கு காப்பு….(40)….3-2-2010

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    இம்முறை வெண்பா அல்ல…கட்டுரை….!


    மன்னிக்க…..சென்றமுறை கேசவ் அனுப்பிய சூறைக் காற்று அசுரனை, சகடாசுரன் என்று தப்பாக எண்ணி வெண்பா எழுதிவிட்டேன்…பிள்ளைப் (கண்ணன்)பிராயச் சித்தமாய் கட்டுரை…. மீண்டும் கேசவ் கண்ணா மன்னிக்க…. இது பற்றிய ஆய்வில் ‘’டோங்க்ரே மஹராஜின்’’ பாகவத தஸம ஸ்கந்தம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது…. நன்றி கேசவ்…. கண்ணனின் கோபம் சக்கிர அசுரன்(சகடாசுரன்) மீதல்ல…. கண்ணனே சங்கூதும் சக்கிரத்தான்(சுதர்ஸனம்) அல்லவா….

    ’’எனக்காக இவ்வளவு கோலாகலமாக உத்ஸவம் (கிருஷ்ண ஜனனம்) நடக்கும்போது…. என் தாயார் எங்கே!’’ வண்டிக்கு அடியில் பாலகிருஷ்ணன் நினைக்கிறான்…. தினசரி செயல்களை (நித்ய கர்மாக்கள்) விடவேண்டியதில்லை…. அவற்றிலேயே மூழ்கி பகவானை மறந்து விடக் கூடாது… யசோதை ஸ்ரீ கிருஷ்ணனை மறந்த நாளில் ஆபத்து வந்தது…. கம்ஸன் அனுப்பிய சகடாசுரன் ரூபத்தில்…. ஆக கண்ணனின் கோபம் ‘’தன்னை வண்டிக்கடியில் தூங்க விட்ட தாயார் (யசோதையார்) மீது…. அந்தக் கோவத்தை சகடாசுரன் மீது கண்ணன் காண்பித்தார்… உதைத்தார் சகடனை…. வான்முகடில் அவனை உதைத்துக் கொன்றார்….

    சில பல லஷ்ஷத்திற்காக லஷ்யத்தை மறந்து விடாதீர்கள்…. நாம் ஸ்ரீ கிருஷ்ணனை (லஷ்யம்) அடைந்தே (வழி கேசவ் வண்ணம், கிரேசி எண்ணம் (வெண்பா), பக்தி) தீரவேண்டும் (டோங்க்ரே மஹராஜ்)….. டைப் அடித்து விரல் வலிக்கிறது…. வாசிக்கவும் டோங்க்ரேமஹராஜ் பாகவதம்….!

    ‘’பீலிபெய் (பீலிமயில் கண்ணன்) சாகாடும் (சாகடிப்பான்) அச்சுஇறும் (சகடாசுரன் அச்சை ஒடித்து) அப்பண்டம் (பரம்பொருள்)
    சால (கம்ஸனால் அனுப்பப்பட்ட) மிகுத்துப் (அளவுக்கு மீறிய) பெயின் (கம்ஸனால் இம்ஸைக்கு உள்ளான கண்ணனின் PAIN)”….’’வண்டியில் அளவுக்கு மீறிய, இலேசான மயிற்பீலியும் அச்சை உடைத்து விடும்’’….. வாகாகக் கிடைத்த வள்ளுவர்…. அளவுக்கு மீறினால் (கம்ஸன்போல்) அமிர்தமும் (அமுதன் கண்ணன்) விஷம்…. கற்கண்டும் காலன்(கம்ஸன் உயிருக்கு பீலிமயில் கண்ணன்)… குறள் வாசிக்க வைத்ததற்கு நன்றி கேசவ் …..!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180822 -Brahma mohanam -Srimad Bhagavatham A4 wcol -graphite-indian ink 100dpi lr

    நான்முகர் சந்தேகம்! நாரணனா மாடுமேய்ப்போன்!
    வான்முகம் விட்டிந்த வையத்தில்! -தேன்முகர்
    தொப்புளில் தானமர் தாமரைத் தண்டுகண்டு
    அப்புள்ளான்(புள்வாகனர்) காலை அடைவு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180821 -Kamsa (fear) and Krishna -A4 lr 100 dpi

    பயமாசை கோபம் பசிதாகம் தூக்கம்
    மயமான மூட மனமே -அயலாம்
    இவைதவிர்த்து ஆழ இதயத்தில் இருக்கும்
    சுவைசுகித்து வாழ சுகம்….!

    பயமில்லா வாழ்வே பெருவாழ்வு மற்று
    ஜயமென்ப(து) எல்லாம்வீண் ஜம்பம் -முயலாமை
    காதை உரைத்தது கீதை உரைத்தது
    ஏதும் உறைக்கலை யே….!

    ஜடமென்(று) அறிந்தும் மடையா உயிரே
    உடம்பை சுமந்தேன் உனக்காய் -அடங்கும்
    மூச்சை மணந்து துரோகம் புரிந்தாய்
    சீச்சீ பழம்நீ புளிப்பு….!

    அத்தனையும் ஆண்டிடும் ஆசை அதிகாரப்
    பித்தனாய் வாழ்ந்து பேதலித்தேன் -அத்தனே
    இத்தரை உண்டியால் ஏக அஜீரணம்
    சத்துணவு போடுசர்வே சா….!

    நானென்(று) இருக்கின்றேன் நானாய் உணர்கின்றேன்
    நானின்றி வேறே நிகழ்வேது -நானொன்றி
    நானோடு நானே நெகிழ்ந்து மயங்கிட
    நானா விதமானேன் நான்…!

    கண்டேன் திருடனை கையும் களவுமாய்
    கொண்டேன் மனச்சிறையில் கைதியாய் -அண்டேன்
    இனிஅவன் பக்கம் தனிமையே சொர்கம்
    கனிநான் அவன்கள்ளக் காய்….!

    ஆபாசம் அச்சம் அழுக்கா(று) அகங்காரம்
    நாபேசும் இன்னா நயவஞ்சக -ஏபாவா!
    என்பக்கம் வாராதே உன்னுருவைப் புண்ணியமாய்
    கண்ணப்பன் மாற்றிடுவான் காண்….!

    அச்சம், அழுக்காறு, ஆசை, வெகுளியை
    துச்சம் எனத்துணிந்து தூக்கியெறி -மிச்சம்
    இருந்திடும் வெற்று இதயக் கதவை
    திறந்திடு சீசே துறந்து….!

    ராமனாய் வாழ்தால் ரகசிய திண்டாட்டம்
    காமனாய்க் காய்ந்து கருகாதே -மாமனைக்
    கொல்லவந்தும், காதலித்து, கீதையும் சொன்னவன்போல்
    மெள்ளமெள்ளக் கண்ணனாய் மாறு….!

    ‘’காலன்(DEATH) ஒருபக்கம், கல்வி(WISDOM) ஒருபக்கம்
    காலடி சங்கரன் கற்றது, -ஸ்தூல
    உடலிது ஓர்நாள் உண்மையில் சேரும்:
    கடலதில் வான்நீர்(RAIN) கலப்பு’’….!

    ’’தூங்கும் முன் தோன்றியது’’….
    ————————————————————-
    ”பாட்டுக்கு நாச்சியார், பரவசம் மீராவால்,
    கூட்டுக்கு ராதை, குவலயப் -பாட்டுக்கு(பாடு),
    பாரதம், வீட்டுக்கு(வீடு) பாகவதம், மாட்டுக்கு
    பேரிதம்நான் சேர்க்கப் பிறப்பு’’….கிரேசி மோகன்….!

    ”பாம்பில் படுத்தவனைப், பத்த வதாரனை,
    சாம்பலான் பத்தினி சோதரனை, -நோம்பன்று,
    கண்ணனை நெஞ்சில் கருதி மணிக்கட்டில்
    கண்ணிநுண் தாம்பாகக் கட்டு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180820 Yashoda Krishna -A4 watercolour graphite 100 dpi lr

    “என்னதவம் செய்தாய் யசோதையார் கண்ணனே
    வண்ணமுற கேசவ் வரைவதற்கு; -மன்னவனே
    கோவிலுக்கு லீவுவிட்டு கேசவ்இல்ல வாயிலின்
    காவலுக்கு கண்ணா கிளம்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கடவுள்(விஷ்ணு) மனிதனாக பிறக்க வேண்டும் -அவன்
    காதலித்து(ராதை) வேதனையில்(பூ பாரம்) மூழ்கவேண்டும் -கவி கண்ணதாஸன் வரிகளால் உந்தப் பட்டு….!

    180819 -Radha Krishna -A4-lr wcol

    ராதையா! பார்த்தியா! காதலா! கீதையா!
    பாதைபா ரதத்தினை பூட்டிய -தாதையவர்,
    விற்களம், ராஸலீலை, விஷ்ணுகண்ணன் வேதனை:
    தற்கொலைக்கு ராதை தயார்….கிரேசி மோகன்…!

    அடிவானம் ராதை அலைகடல் கண்ணன்
    பிடிவாதம் இல்லா பிணைப்பு -முடிவாக
    ஜீவன் அலைந்து ஜகன்நாத னோடிணையும்
    பாவம் பரிகாரம் போகும்….!

    Share
  • படமும், பாடலும்….!

    தங்க சரிகைசேலை அங்கம் அணிந்தபத்மா,
    பொங்கும் கடல்கடைந்தோன் பத்தினி, -சிங்கன்
    மடியமர்ந்து சீற்றம் முடித்தவளே, வாழி!
    படியளந்தோம் தாங்களே பட்டு(தங்கம் -செல்வம்)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180616 – Upendra -wcol-lr

    ”ஆனைக்(ஐராவதம்)கால் மேய்ந்த்திட,ஆவினம் போலாக
    மோனைகோன் இந்திரன் மன்னிப்பு , -ஓணத்தோன்
    உம்பர்கோன் பட்டத்து உச்சைஸ்வ ரஸ்பூண்டார்
    நம்பிய ’ஆ’வுக்(கு)உபேந்(த்ர்) ‘ஆ’(உபேந்த்ரா)’’….கிரேசி மோகன்….!

    கண்ணன் எதுகை(யதுகை),பின்செல்லும் ஆயிரம்கண்ணன்(இந்த்ரனுக்கு உடம்பெல்லாம் கண்) அண்டர்கோன் மோனை (அல்லது) கேணை…..!

    ”குன்றுகோ வர்த்தனமும் கண்ணன்!, மழைகாக்கும்
    சுண்டு விரல்கண்ணன் கண்ணனே!, -இந்திர
    கர்வமும் கண்ணனே! கர்வபங்கம் கண்ணனே!
    மர்மமே கண்ணனாய் மால்’’…!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180818 -DWA-9×12 Strathmore 160gsm wcol charcoal 100dpi lr

    உள்ளங்கை நெல்லியாய் உட்கார அர்ஜுனன்
    தெள்ளத் தெளிவாக தேர்கீதை -மெள்ள
    விளம்புகிறார் வில்லுக்கு விஸ்வரூபம் பார்ட்-டூ
    குளமல்லிக் கேணி(திருவல்லிக் கேணி) களம்….கிரேசி மோகன்….!

    Share
  • குமார சம்பவம்….!

     

    சர்கம் ஆறு
    ————–

    என்னை எனக்களித்த என்தந்தை சம்மதித்தால்
    என்னை அவர்க்களிப்பேன் என்றுரை -பின்னை
    இறையோன்தான் ஆனால் முறைமீறல் தோழி
    சரியாகேள் பாம்புச் செவிக்கு….(331)….9-12-2010

    தாவிடும் மாங்கொடி மேவும் வசந்தத்தை
    கூவும் குயில்மூலம் கொஞ்சுதலாய் -சேவகியை
    பாலமாக பேசவிட்டு பார்வதி மோனத்தை
    ஆலமர்ந் தோர்க்கே அளிப்பு….(332)….10-12-2010

    முந்தித்தன் முக்கண்ணால் மன்மதனை மாய்த்தவன்
    சிந்தித்தான் சப்தரிஷி சங்கமத்தை -இந்தப்பெண்
    ஆசை மிகுந்தவள் அப்பனிடம் பெண்கேட்க
    ஈசனே ஆயினும் ஈர்ப்பு….(333)….10-12-2010

    தேசொளி வானில் திகழஆ காசமது
    கூசிடும் வண்ணம் கிளர்ந்திட -மாசிலா
    அந்தணர்கள் ஏழ்வர் அருந்ததி முன்வர
    உந்தெருதோன் முன்பு உதிப்பு….(334)….11-12-2010

    அட்டதிக் ஆனைகள் கொட்டும் மதஜலத்தால்
    மட்டிலா வாசமுடன், மந்தார -மொட்டதை
    தீரம் ஒதுக்கும்மந் தாகினியில் ஏழ்வரும்
    ஊறிக் குளித்தங்(கு) உதிப்பு….(335)….11-12-2010

    முத்துடை முப்புரியும், பத்தரைப் பொன்னுரியும்
    ரத்தின ருத்திராக்ஷ ரக்ஷ்ஷையும் -உத்தரித்த
    கேட்டன நல்கிடும் கற்பகச் சோலையாய்
    ஊட்டமுடன் ஏழ்வர் உதிப்பு….(336)….11-12-2010

    தேரழுந்தூர் மார்கத்தைத் தாழ்த்திக் கொடிக்கம்பன்
    வேரழுந்த வைத்து விரைகையில் -சூரியன்
    தன்நமஸ் காரத்தை அண்ணாந்து செய்திட
    உன்னுதல்கண் டேழ்வர் உதிப்பு….(337)….12-12-2010

    ஊழியில் ஏன உருவில் உலகினை
    ஆழியுள் போந்தெடுத்த ஆதிநாள் -ஊழியனின்
    கோரையில் பூதேவி கூடக் களைப்பாறிய
    ஊறைப்பல் ஏழ்வர் உதிப்பு….(338)….12-12-2010

    பாதி படைத்து பிரமன் களைப்புற
    மீதி முடிக்கும் முனிவர்கள் -வேதம்
    தொகுத்த வியாசரே தோத்தரித்து வாழ்த்தை
    உகுத்தஅவ் ஏழ்வர் உதிப்பு….(339)….12-12-2010

    கற்பனைக்கு எட்டாத அற்புத வேள்விகள்
    பற்பல செய்து பலனுற்றும் -அற்பமாய்
    தள்ளி எமக்குத் தொழில்தவம் என்றிருக்கும்
    உள்ளத்தவர் ஏழ்வர் உதிப்பு….(340)….12-14-2010

    வெண்பல் தவத்தர் வசிட்டர் பலன்யாவும்
    பெண்கொள் வடிவெடுத்தாற் போலங்கு -கண்கள்
    பொருந்திடக் கேள்வர் பதத்தில் குனிந்த
    அருந்ததியைப் பார்த்தான் அரன்….(341)….12-14-2010

    புறத்துப்பால் பாரா பெரியோர்கள் போற்றல்
    அறத்துப்பால் வாழ்வோரே ஆவர் -புரத்தின்பால்
    தீவைத்தோன் ஏற்றான் தவத்தேழ்வர்க்(கு) ஒப்பாக
    பூவைத்தப் பத்தினிப் பெண்….(342)….12-15-2010

    அருந்ததி பார்த்த அரன்மனதில் ஆர்வம்
    பிறந்ததாம் இல்லறம் பேண -சிறந்த
    தொழிலாம் அறத்தைத் துணையின்றி செய்தல்
    விழலுக்(கு) இறைத்த வளம்….(343)….12-17-2010

    இல்லறமே நல்லறம் என்றெழில் பார்வதியை
    வெள்ளியிறை ஏற்க விருப்பமுற -கள்ளமதை
    முன்பிழைத்தக் குற்றத்தால் மண்புதைந்த மன்மதன்….(OR)
    முன்பிழைத்து ஓய்ந்து மனம்துவண்ட மன்மதன்
    தன்பிழைப்பில் கண்டான் தடம்….(OR)
    தன்பிழைப்பில் கொண்டான் தெருள்….(344)….12-17-2010

    அங்கம் புளககிக்க ஆரணம் நான்கினை
    அங்கங் களோடறிந்த அவ்வேழு -சிங்கங்கள்
    ஏசிவா சங்கரா என்றீசர் தாள்பணிந்து
    பேசவாய் பொத்தினர் பின்பு….(345)….12-17-2010

    வேதவழி போனதால் வேள்விகள் செய்ததால்
    மாதவத்தில் முக்குளித்து மூழ்கியதால் -ஆதவனாய்
    ஏழ்வரெங்கள் முன்பு எழுந்தருளி நிற்கின்றீர்
    வாழ்வெமக்கு வந்ததிவ் வாறு….(346)….12-19-2010

    எட்டாத கொம்புத்தேன் ஈசன் தரிசனம்
    கிட்டாதா சொட்டேனும் காத்திருந்தோம் -இட்டாயின்(று)
    ஏழுமுனி எங்களையுன் ஏகாந்த நெஞ்சில்ஈர்
    ஏழவனி நாயகா ஏற்று….(347)….12-19-2010

    உம்மை நினைப்போன் உலகிலுயர் பாக்கியவான்
    அம்மா மறைகளின் ஆரம்பம் -உம்மால்
    நினைக்கப் படுமளவு நாங்களுற்ற பேறை
    நினைக்க நயனத்தில் நீர்….(348)….12-19-2010

    ஆதித்தன் அம்புலிக்(கு) அப்பாலுள் அந்தரத்தில்
    ஆதிக்கம் கொண்டோம் அதைவிடுங்கள் -ஜோதிக்கண்
    தென்னவனுன் நெஞ்சில் திளைத்ததால் நாங்களின்று
    உன்னதம் உற்றோம் உயர்ந்து….(349)….12-19-2010

    வாயால் வசிட்டனின் வாழ்த்தைப் பெறுவதற்கே
    நேயன் கவுசிகன் நாட்டமுற்றான் -தூயனே
    ஆதரித்(து) எங்களுக்(கு) அந்தஸ்(து) அளித்ததால்
    காதலித்தோம் எங்களைநாங் கள்….(350)….25-12-2010

    காதலர்க்கு சந்தோஷம் காணக் கிடைத்திடுமே
    ஆதலால் அங்கே(து) அளவளாவல் -சேதனர்கள்
    யாவிலும் நீரந்தர் யாமியாய் நிற்பதால்
    நாவுரைக்கும் நன்றி நனி….(351)….25-12-2010

    நேரில் தரிசித்து நாங்கள் அறிந்தது
    சோறின் பருக்கைச் சமானமே -வேரில்
    பழுத்த பலாவாயெம் புத்திக்(கு) உறைக்க
    முழுத்தன்மை கூறேழ் முனிக்கு….
    தழைத்தோங்க வேண்டும் தயவு….(352)….26-12-2010

    பார்த்துப் பரவசமாய்ப் போற்றிப் பணிந்தயிம்
    மூர்த்தியம் முத்தொழிலின் மொத்தமெனில் -வார்த்தலை
    காத்தலை, தீர்த்தலைக் கண்மூன்றால் செய்வீரோ
    வேத்தியர் ஏழ்வர் வியப்பு….(353)….28-12-2010

    விடையவரே எங்கள் வினாக்களுக்குத் தக்க
    விடையருள்வீர், நாங்களிங்கு வந்த -கடமையை
    செய்து முடித்தபின் ,சொல்வீர் அதற்க்குமுன்
    எய்தகணை யாகஅவ் ஏழு….(354)….7-1-2011

    எழுவர் வினாக்களுக்(கு) ஏற்ற பதிலை
    மழுமான் உடைத்தோன் மலர்ந்த -பொழுது
    தரித்த மதியதன் தண்ணொளியைக் கூட்டும்
    சிரித்தமுல் லைகள் ஜொலித்து….
    சிரித்தவெண் பற்கள் ஜொலித்து….(355)….12-2-2011(இது வரையில் எழுதியுள்ளேன்….இன்னும் சில பாடல்களே உள்ளன….சிவ, பார்வதி திருக்கல்யாணம்…காளிதாசர் ஒரிஜினலில் முதலிரவு(குமார சம்பவம்)…..லிஃப்கோவில் இல்லை….காஞ்சிப் பெரியவா ஆஞ்ஞைபடி….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180816 – Gitamrita -Krishnapremi -wcol -A4 -100dpi lr

    முணுமுணுப்பாய் முன்னால், தொணதொணப்பாய் பின்னால்,
    சினமெடுத்து சீறுவாய் சொன்னால் -அணுஅணுவாய்
    கொல்லாதெனைக் கொல்கின்ற பொல்லா மனமேநீ!,
    இல்லாத பேரிடம் செல்….!

    தானாய் நிகழ்வதை நானாய் நினைத்திட
    வீணாய்க் கழிந்திடும் வாழ்நாளே -பூணாய்
    எதையும் மனமே இதயக் கனியாய்
    கதையின் முடிவில் கசப்பு….கிரேசி மோகன்….!

    Share