துருவ சரித்திரம்
———————
உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டு
சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி
சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள்
சக்களத்தி மாதுசுரு ஸி….!
சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப்
பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….!
கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட
துருவன் மனக்குறையை தாய்முன் -உருக
அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில்
சுநீதி அமரென்றாள் சேய்க்கு….!
மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு
ஏதேனும் உண்டோவென்(று) எண்ணியசேய் -பீதாம்
பரனை தரிசிக்கப் போகத்தம் பூரா
கரனை தரிசித்தான் கண்டு….!
வாசுதேவ மந்திரத்தை தேசிகர் நாரதர்
தேசுமிகு சேய்க்குப தேசித்து -கேசவர்க்கு
தாசனாய் வாசனாதி தோஷமின்றி வாழ்த்தென்றார்
ஆசன தர்ப்பை அமர்ந்து…!
கனியில் துவங்கியவன் காய்ந்த சருகை,
பனிநீரை, காற்றைப் புசித்து -முனியாய்
குடைசாய மூன்று குவலயங்கள் காலை
திடமாக ஊன்றி தவம்….!
ஈரைந்து மாதமேந்தி ஈன்றவள் சொற்கேட்டு
பேரைந்து மூன்றெழுத்தைப் பார்த்திட -ஓரைந்து
மாதங்கள் செய்த மகாதவத் தால்வியந்து
வேதங்கள் மூக்கில் விரல்….!
கும்பகத்தால் காற்று குறைந்திட மூச்சடைத்து
உம்பர்கள் ஓடி உலகெடுத்த -கொம்பனை
வேண்ட கருடாழ்வான் வாகனம் மீதமர்ந்து
ஆண்டவன் காட்சி அளிப்பு….!
உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
துருவன் விழிகள் திறக்க -அருவம்
கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….!
மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
ஆணில் சிறந்தோன் அளிப்பு….!
பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!
On Fri, Aug 24, 2018 at 11:55 PM crazy mohan <crazy.mohan@gmail.com> wrote:, வெண்பாகவதம் தங்கள் மேலான பார்வைக்கு….!
வாமனாவதாரம்….
————————
யாகாதி பாகத்தை ஈயாது போனதால்
ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற
சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான்
சக்கிர வர்த்தி சிறப்பு (or) ஜொலிப்பு….!
பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
ஓணத்தில் சேயாய் உதிப்பு….!
அதிதி உபசாரம் அன்று புரிந்தோன்
புதிய அவதாரப் பிள்ளை -குதியிட்டு
மாவலி முன்சென்றான் மூன்றடி வாமனனாய்
தாவலில் நெஞ்சம் திளைத்து….!
தாழங் குடையிடக்கை, தண்ணீர் கமண்டலம்
வாழிய காட்டும் வலக்கையில் -சோழியன்
உச்சியொடு வந்தவன் அச்சுதன் என்றுகுரு
எச்சரித்தும் மாபலி ஏற்பு….!
அந்தண வாமனர்க்கு வந்தனம் செய்துபலி
தந்தனன் கேட்ட திருவடிக்கு -மண்தனை
வண்டெனநீர் வார்க்கையில் வாத்தியார் வந்துக
மண்டல வாயை மறைப்பு….!
உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
அக்கணம் வாமனன் அங்கு….!
ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி
பாதாளம் செல்ல பலியை அழுத்திட
சேதாரம் இன்றியவன் சேர்பு….!
தானாகக் தானத்தை தந்திடும் தந்தைமுன்
வீணாக வேடமிட்டு வாமனமாய்ப் -போனீர்கள்!
பாணா சுரப்பிள்ளை போட்ட வினாக்(கு)ஏன
மீனாமை சிம்ம மறுப்பு….!
ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
ஆவேச நானை அழிப்பு….!
—————————————————————-
கபிலாவதாரம்
——————–
தேவஹுதி கர்த்தமர் தம்பதிக்குப் பிள்ளையாய்
காவலாதி தெய்வம் கபிலகுரு -தேவராய்த்
தோன்றிப் பெரிதுவந்த தாய்க்குப தேசமாய்
ஊன்றினார் பக்தி உலகு….!
கபில உவாச….
———————–
இயற்கையின் மாய இயல்பைக் கடந்து
பெயர்ந்திட ஜீவ புருஷன் -உயர்கிறான்.
ஆரா தனையாலும் ஆன்மவிசா ரத்தாலும்
நாரா யணனில் நிலைப்பு….!
மாசிலா நெஞ்சமாய், ஆசனங்கள் செய்தந்த
வாசுதேவ ரூபத்தை, வைகுண்ட -வாசனாக
பஞ்சா யுதமேந்தி புள்ளமர்ந்த நீலனாக
நெஞ்சார உன்னுள் நிறுத்து….!
காமமற்ற லீலையை, கல்யா ணகுணத்தை
நாமசங் கீர்த்தனமாய் நாவுரைக்க -தாமசமில்
கங்கா நதியொத்த மங்கா மனத்துடையோர்(கு)
இங்கே பிறப்(பு)இறப்(பு) ஏது….!
பத்தினியின் மோகத்தால் பிள்ளைமேல் பாசத்தால்
சொத்துசுகம் சேர்க்க செயல்படுவாய் -அத்துமீறி.
முத்திபெறும் மார்கத்தில் மூலத்தைக் காணாது
இத்தனை கஷ்டமேன் இங்கு….1
நான்யார் அறிவு நிரம்பி இருப்பினும்
தாயார் வயிற்றில், தளும்பியபின் -சேயார்வ
சிக்கல்கள் தாண்டிட சூழ்ந்திடும் யவ்வன
சொக்கல்கள் சூழ்ச்சிச் சுழல்….!
பூதபித்ரு தேவரை பூஜிக்கும் இல்லறத்தோன்
பாதையாம் தக்கிணத்தில், புண்ணியப் -போதுசெல்ல
இத்தரை வந்திடுவான், உத்திர மார்கமோ
முத்தியூர் சேர்க்கும் முடிவு….!
தாங்கிய தாய்க்குத் தனயன் உரைத்தனன்
சாங்கிய யோகத்தை சேவையாய் (OR) செவ்வெனே -வாங்கிய
ஆத்மவித்யா சக்தியால் ஐக்கியம் ஆயினள்
தீர்த்தம்சித் தாசிரமத் தில்….!
————————————————————————————-
Vதுருவ சரித்திரம்
———————
உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டு
சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி
சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள்
சக்களத்தி மாதுசுரு ஸி….!
சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப்
பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….!
கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட
துருவன் மனக்குறையை தாய்முன் -உருக
அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில்
சுநீதி அமரென்றாள் சேய்க்கு….!
மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு
ஏதேனும் உண்டோவென்(று) எண்ணியசேய் -பீதாம்
பரனை தரிசிக்கப் போகத்தம் பூரா
கரனை தரிசித்தான் கண்டு….!
வாசுதேவ மந்திரத்தை தேசிகர் நாரதர்
தேசுமிகு சேய்க்குப தேசித்து -கேசவர்க்கு
தாசனாய் வாசனாதி தோஷமின்றி வாழ்த்தென்றார்
ஆசன தர்ப்பை அமர்ந்து…!
கனியில் துவங்கியவன் காய்ந்த சருகை,
பனிநீரை, காற்றைப் புசித்து -முனியாய்
குடைசாய மூன்று குவலயங்கள் காலை
திடமாக ஊன்றி தவம்….!
ஈரைந்து மாதமேந்தி ஈன்றவள் சொற்கேட்டு
பேரைந்து மூன்றெழுத்தைப் பார்த்திட -ஓரைந்து
மாதங்கள் செய்த மகாதவத் தால்வியந்து
வேதங்கள் மூக்கில் விரல்….!
கும்பகத்தால் காற்று குறைந்திட மூச்சடைத்து
உம்பர்கள் ஓடி உலகெடுத்த -கொம்பனை
வேண்ட கருடாழ்வான் வாகனம் மீதமர்ந்து
ஆண்டவன் காட்சி அளிப்பு….!
உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
துருவன் விழிகள் திறக்க -அருவம்
கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….!
மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
ஆணில் சிறந்தோன் அளிப்பு….!
பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!
On Fri, Aug 24, 2018 at 11:55 PM crazy mohan <crazy.mohan@gmail.com> wrote:, வெண்பாகவதம் தங்கள் மேலான பார்வைக்கு….!
வாமனாவதாரம்….
————————
யாகாதி பாகத்தை ஈயாது போனதால்
ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற
சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான்
சக்கிர வர்த்தி சிறப்பு (or) ஜொலிப்பு….!
பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
ஓணத்தில் சேயாய் உதிப்பு….!
அதிதி உபசாரம் அன்று புரிந்தோன்
புதிய அவதாரப் பிள்ளை -குதியிட்டு
மாவலி முன்சென்றான் மூன்றடி வாமனனாய்
தாவலில் நெஞ்சம் திளைத்து….!
தாழங் குடையிடக்கை, தண்ணீர் கமண்டலம்
வாழிய காட்டும் வலக்கையில் -சோழியன்
உச்சியொடு வந்தவன் அச்சுதன் என்றுகுரு
எச்சரித்தும் மாபலி ஏற்பு….!
அந்தண வாமனர்க்கு வந்தனம் செய்துபலி
தந்தனன் கேட்ட திருவடிக்கு -மண்தனை
வண்டெனநீர் வார்க்கையில் வாத்தியார் வந்துக
மண்டல வாயை மறைப்பு….!
உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
அக்கணம் வாமனன் அங்கு….!
ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி
பாதாளம் செல்ல பலியை அழுத்திட
சேதாரம் இன்றியவன் சேர்பு….!
தானாகக் தானத்தை தந்திடும் தந்தைமுன்
வீணாக வேடமிட்டு வாமனமாய்ப் -போனீர்கள்!
பாணா சுரப்பிள்ளை போட்ட வினாக்(கு)ஏன
மீனாமை சிம்ம மறுப்பு….!
ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
ஆவேச நானை அழிப்பு….!
—————————————————————-
கபிலாவதாரம்
——————–
தேவஹுதி கர்த்தமர் தம்பதிக்குப் பிள்ளையாய்
காவலாதி தெய்வம் கபிலகுரு -தேவராய்த்
தோன்றிப் பெரிதுவந்த தாய்க்குப தேசமாய்
ஊன்றினார் பக்தி உலகு….!
கபில உவாச….
———————–
இயற்கையின் மாய இயல்பைக் கடந்து
பெயர்ந்திட ஜீவ புருஷன் -உயர்கிறான்.
ஆரா தனையாலும் ஆன்மவிசா ரத்தாலும்
நாரா யணனில் நிலைப்பு….!
மாசிலா நெஞ்சமாய், ஆசனங்கள் செய்தந்த
வாசுதேவ ரூபத்தை, வைகுண்ட -வாசனாக
பஞ்சா யுதமேந்தி புள்ளமர்ந்த நீலனாக
நெஞ்சார உன்னுள் நிறுத்து….!
காமமற்ற லீலையை, கல்யா ணகுணத்தை
நாமசங் கீர்த்தனமாய் நாவுரைக்க -தாமசமில்
கங்கா நதியொத்த மங்கா மனத்துடையோர்(கு)
இங்கே பிறப்(பு)இறப்(பு) ஏது….!
பத்தினியின் மோகத்தால் பிள்ளைமேல் பாசத்தால்
சொத்துசுகம் சேர்க்க செயல்படுவாய் -அத்துமீறி.
முத்திபெறும் மார்கத்தில் மூலத்தைக் காணாது
இத்தனை கஷ்டமேன் இங்கு….1
நான்யார் அறிவு நிரம்பி இருப்பினும்
தாயார் வயிற்றில், தளும்பியபின் -சேயார்வ
சிக்கல்கள் தாண்டிட சூழ்ந்திடும் யவ்வன
சொக்கல்கள் சூழ்ச்சிச் சுழல்….!
பூதபித்ரு தேவரை பூஜிக்கும் இல்லறத்தோன்
பாதையாம் தக்கிணத்தில், புண்ணியப் -போதுசெல்ல
இத்தரை வந்திடுவான், உத்திர மார்கமோ
முத்தியூர் சேர்க்கும் முடிவு….!
தாங்கிய தாய்க்குத் தனயன் உரைத்தனன்
சாங்கிய யோகத்தை சேவையாய் (OR) செவ்வெனே -வாங்கிய
ஆத்மவித்யா சக்தியால் ஐக்கியம் ஆயினள்
தீர்த்தம்சித் தாசிரமத் தில்….!
————————————————————————————-