Tag: இ. சாந்தகலா

  • லிமரைக்கூ கவிதைகள்!

    -இ. சாந்தகலா, மலேசியா

    பாட்டோடு அமர்ந்தது  வண்டு
    வண்ண  மலர்   மேலே   அதையும் 
    சேர்த்து  சுமந்தது   தண்டு!

    அவசரக்  கடன்  வட்டி
    உழைத்து  ஓடாக  தேய்ந்தும் அவன்
    இன்னும்  முடிக்கல  கட்டி!

    வெட்டிச்   சாய்ந்தது  மரம்
    கட்டிய  கூட்டில்  இருந்து  விழுந்த
    முட்டை உடன்  மரணம்!

    மடிப்புக்  கலையாத  சட்டை
    பையில்  அழகிய   புகைப்படம்
    புரோக்கர்  நெற்றியிலோ  பட்டை!

    விளையாடிய அந்த  மழலை
    கணக்குப்  படிக்க  தன் தாயிடம்
    வாங்கி எடுத்தாள்  விரலை!

    ஏழைக்கு நிலா விளக்கு
    அமாவாசை  அன்று  இருள் வந்தால்
    போட முடியாது வழக்கு!

    மனிதன் அழித்தான் காட்டை
    நிரை போட்டு வளர்த்து விட்டான்
    அடுக்கு மாடி  வீட்டை!

     

    Share