Tag: எஸ்.ஆர்.ஜி சுந்தரம்

  • தீபம்

    கார்த்திகைத் தீபம் வரபோகிறது. கவிஞர் கவிஞர் எஸ்.ஆர்.ஜி சுந்தரம் எம்.ஏ எட்டு சுடர் விடும் தீபங்களை ஏற்றியிருக்கிறார். படித்து ரசியுங்கள்.

    உமாஸ்ரீ

     

    அன்றைய பாரத விடுதலைக்கே

    அனைத்தியு மிழந்த அமரர்க்கு

    அஞ்சலியா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    பாரத எல்லைப் பாதகரைப்

    பதராய் விரட்டும் படைகட்குப்

    பணிவா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    பாரதம் போற்றிய பண்பாட்டில்

    பாதை யமைத்து வாழ்வோர்க்குப்

    பக்தியா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    இலஞ்ச பொன்னும் இழுக்கினுக்கே

    இலக்கா காநல் தூயோர்க்கு

    இனிதா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    முதியோர் பணியில் முகஞ்சுளியா

    முதிர்ந்த ஞான முற்றோர்க்கு

    முத்தா யேற்றுவோம் ஒருதீபம் !

     

    ஊன முற்ற உயிர்களெலாம்

    உயர்ந்து வாழ உழைப்போர்க்கு

    உவந்தே யேற்றுவோம் ஒருதீபம் !

     

    மானுட வாழ்வு மாண்புறவே

    முத்தமிழ் இலக்கியம் முனைவோர்க்கு

    மறவா தேற்றுவோம் ஒருதீபம் !

     

    தேச நலமே தம்பணியெனும்

    தேசப் பற்றுடைத் தூயோர்க்கு

    தினமு யேற்றுவோம் ஒருதீபம் !

    Share