Tag: கந்த சஷ்டி

  • பால முருகனுக்குப் பால்குட அபிஷேகம்

    பால முருகனுக்குப் பால்குட அபிஷேகம்

    சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டிப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு பால முருகனுக்காக ஏராளமானோர் பால்குடம் எடுத்தனர். அபிஷேக ஆராதனை விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவிலிருந்து சில காட்சிகள் இங்கே. வேல்! வேல்! வெற்றி வேல்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முருகா என்றதும் உருகாதா!

    முருகா என்றதும் உருகாதா!

    ‘முருகா என்றதும் உருகாதா மனம் மோகன குஞ்சரி மணவாளா’ என்ற, கொஞ்சும் தமிழில் அமைந்த திரைப்பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இந்த சூரசம்ஹார நாளில் முருகப் பெருமான் அருளைப் பெற்று மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செந்திருவே! கந்தவேளே!

    செந்திருவே! கந்தவேளே!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா
     
    விழிக்குத் துணையானாய் எங்கள்
    மொழிக்கும் துணையானாய்
    பழிக்குப் பகையானாய் நாளும்
    வழிக்குத் துணையானாய்!
     
    அழிக்கும் பகையனைத்தும் நில்லா
    நிலைக்குக் களனானாய்!
    இமைக்கும் விழியில் என்றும்
    இருக்கும் கதிர்வேலா!
     
    தந்தைக்குப் பாடமுரைத்தாய் அதனால்
    தரணிக்கே குருவானாய்!
    சொந்தமுடன் கந்தனென்பார் வாழ்வைச்
    சோதனைக்குள் சிக்கவைப்பாய் !
     
    உந்தனது சோதனையால் நாளும்
    உழலுகின்ற பக்தர்தமை
    செந்திருவே கந்தவேளே விரைவில்
    சிறப்படையச் செய்திடப்பா!
    Share