Tag: கவிஞா் பூராம்

  • நினைவுகள்

    -கவிஞர் பூராம்

    கண்குளத்தில்  விழுந்து மூச்சடங்கி போனேன்
    இதயபிச்சியில் தேனலைந்து தொலைந்து போனேன்

    பொன்தாள் மண்ணடியில் கிடந்துறங்கும் என்னை
    நினைவிருக்க நியாயமில்லை

    உன் வாசம் போகமறுக்கும்
    நாசியில் புழுக்களோடு கதையாடல்.

    மற என்கிறது நா கூசாமல்
    பட்ட துன்பம் தெரியாது அதற்கு

    புலம்பாதே வாயை மூடு என்கிறது
    கோபத்தில் ஓங்கி அடித்தேன்
    இரத்தக்கறையோடு அது
    அவளாக மாறி

    சிறு புன்னகை வந்துபோனது
    மரணத்தைப்போல.

    Share