Tag: “கவியன்பன்” கலாம்

  • அரபகத்தின் பாலையில் மணற்புயல்!!!!

     

    arab
    புழுதிக் காற்றே என்று
    புலம்பிடவில்லை நாங்கள்
    அழுதுச் சாற்றவுமில்லை
    அவனே அறிவான்

    ஆற்றல்மிக்க எங்களின்
    அயராத உழைப்புக்கு
    காற்றே நீ தானே
    தோற்றுப்போனாய்!

    கரைகாணா எங்களின்
    கடின உழைப்பைக் கண்டு
    அரைநாளுக் குள்ளாக
    அடங்கிப் போய் ஒளிந்துவிட்டாய்!

    நெருப்பின் ஆற்றலை
    நேசரின் நம்பிக்கை வென்றது
    விருப்பமுடன் குளிர்ந்தே
    வியப்பினைச் சொன்னது

    கத்திக்கு ஆற்றலில்லை
    கலீலுல்லாஹ்வின்
    பக்திக்கு முன்னால்
    பணிந்து விட்டது!

    கடலுக்கு ஆற்றலில்லை
    கலீமுல்லாஹ்வின் கைத்தடியால்
    திடலாக மாறியதும்
    திகைப்புக்கு ஆளானோர்

    அத்தனை ஆற்றலும்
    அல்லாஹ் ஒருவனுக்கே!
    இத்தரையில் நிகழும்
    இவைகளே சான்றுகள்

    இறைதூதர்களின் நம்பிக்கைக்கு
    இத்தனை ஆற்றலும்
    குறையேதும் செய்யாது போலவே
    கூவி வந்த புயற்காற்றே

    எதிர்நீச்சல் போட்டோம்
    எதிர்வந்த வேகத்தை
    எதிர்த்தே போராடினோம்
    என்னவாயிற்று உனக்கு?

    மண்ணுக்குள் சென்றதும்
    மண்ணே எங்களை உண்பாய்
    மண்ணையும் உண்டோமின்று
    மண்ணுக்குள் செல்லும் முன்பாய்!

    உன்னாற்றலுக்கு முன்னெங்கள்
    உழைப்பாற்றல் வென்றதை
    உன்னையும் எங்களையும்
    உருவாக்கியவனிடம் சொன்னாயோ?

    “கவியன்பன்” கலாம், அபுதபி

    Share
  • பெண்ணிவள்..!

    “கவியன்பன்” கலாம்images

    காற்றாய் மென்மையும் கனியாய் இனிமையும் கொண்டு
    ……கனவிலும் நினைவிலுமே
    ஊற்றாய்ப் பெருகிடும் மேனி உணர்வுகள் எல்லாம்
    ..ஒடுங்கிடத் துணையாக
    ஆற்றல் மிக்கவன் படைத்து வழங்கினான் நாமும்
    ….ஆறுதல் பெற்றிடத்தான்
    போற்றும் வாழ்வினில் இன்பம் எய்திட இவளைப்
    ….புரிந்தவர் வென்றனரே!
    .
    பெண்ணும் பொறுமையில் பூமி போலவே இருப்பாள்
    ….பேச்சினில் புகழ்ந்ததுமே
    பெண்ணும் பொறுமையை இழப்பாள் பேச்சினில் வாய்மைப்
    …பிறழ்ந்திடும் வேளையிலே
    கண்ணும் இமைகளால் கவனம் செலுத்துதல் போல
    …காத்திட விரும்புவாளே
    விண்ணின் தாரகை  யல்லள் மேதினி கொள்ளும்
    …விளக்கதன் சுடராவாள்!

    பிள்ளை பெற்றிட மட்டும் இருப்பதாய் நினைத்தால்
    ….பிழைகளும் உன்னிடந்தான்
    உள்ளம் உணர்வுகள் எல்லாம் உணர்ந்திட வேண்டி
    ….உதவிட ஏங்கிடுவாள்
    கள்ளம் கபடமும் கொண்டு வாழ்ந்திட நினைத்தால்
    ….கனவிலும் மறந்திடுவாள்
    வெள்ளம் போலவே  கவலைப் பொங்கிடும் போதில்
    …விவேகமாய் முடிவெடுப்பாள்!

    படத்துக்கு நன்றி

     http://fabriziozangrilli.blogspot.in/2010_10_01_archive.html

    Share