Tag: சிவசேனை

  • சிங்கள பவுத்தருடன் இணக்கம் ஏன்? | மறவன்புலவு சச்சிதானந்தன்

    சிங்கள பவுத்தருடன் இணக்கம் ஏன்? | மறவன்புலவு சச்சிதானந்தன்

    மதமாற்ற எதிர்ப்பு, பசுவதை தடுப்பு உள்ளிட்ட நோக்கங்களுடன் இலங்கையில் சிவசேனை, தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இவற்றை ஆதரிக்கும் பவுத்தர்களுடன் இணைந்து பயணிக்கிறது. திருவாசகத்தைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கச் செய்து, அதனை இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் கையளித்துள்ளார். சிங்கள பவுத்தர்களுடன் நட்பு பேணுகிறார். சிங்களர்களும் முன்பு தமிழர்களாக இருந்தவர்களே. சிங்கள மொழியில் 70 சதம் தமிழ்ச் சொற்களே உள்ளன என்கிறார். சிங்கள மொழியை ஏன் திராவிட மொழிக் குடும்பத்தில் சேர்க்கவில்லை என்ற சிந்தனை எழுகிறது. சமூக, சமய நல்லிணக்கம் சார்ந்த அவரது முன்னெடுப்புகள் குறித்து, சச்சிதானந்தன் அவர்களுடன் அர்த்தமுள்ள ஓர் உரையாடல் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இலங்கையில் பசு வதைத் தடைச் சட்டம்

    இலங்கையில் பசு வதைத் தடைச் சட்டம்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை

    பிரதமர் மகிந்த இராசபட்சரையும் அரசையும் பாராட்டுகிறேன்

    சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று  இலங்கைப் பிரதமர் மகிந்த இராசபட்சர், பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார்.

    இலங்கைச் சைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்

    கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எண்ணங்களை விதைத்து, போராட்டங்கள் நடத்தி, மாட்டிறைச்சிக் கடைகளுக்கு ஏலம் விடாமல் பல்வேறு பிரதேச சபைகளைத் தடுத்து. முயன்று வந்தது சிவசேனை அமைப்பு.

    இலங்கைச் சைவர்கள் சார்பில் பிரதமரைப் பசு வதைத் தடைச் சட்டம் கோரியிருந்தது.

    இச்சட்டத்தைக் கொண்டு வருவதாக அரசாங்க நாடாளுமன்றக் குழுவில் முன்மொழிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

    இலங்கை மண்ணில் 10 ஆயிரம் ஆண்டுக் கால வரலாற்றில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது.

    ஒல்லாந்தர் காலத்தில் மாட்டிறைச்சி உணவை எதிர்த்த செல்வந்தரான சைவப் பழம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாணத்தில் உள்ள தம் சொத்துகள் அனைத்தையும் விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு சிதம்பரத்துக்குச் சென்றார்.

    மலையகச் சைவத் தமிழ் மக்கள்
    மேற்கு மாகாண வடமேல் மாகாணச் சைவத் தமிழ் மக்கள்
    கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள்
    வடக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள் யாவரும் ஒரே குரலில் பிரதமர் மகிந்த இராசபட்சவின் பசு வதைத் தடை முயற்சியைப் பாராட்டுகிறார்கள், போற்றுகிறார்கள்.

    பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவது போலவே அரசு சார்பற்ற மதமாற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து மதமாற்றத்தைக் குறைக்கவும்
    மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவும் பிரதமர் மகிந்த இராசபட்சர் முயல்வார். இலங்கையில் வாழ்கின்ற 30 இலட்சம் சைவத்தமிழ் மக்கள் அனைவரும் அவரது முயற்சிக்கு ஆதரவு கொடுப்பார்கள்.

    Share
  • அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டு நிறைவேற்றம்

    அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டு நிறைவேற்றம்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
    சிவசேனை
    இலங்கை தீவில் இனிமையான சிவபூமியில் மண்ணின் மரபுகளை காக்கக் காலவரையற்ற உண்ணா நோன்பு கைக்கொள்ளும் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியமையைப் பாராட்டுகிறேன்.
    கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்களின் நெடு நாள் கோரிக்கையை நிறைவேற்றிய இலங்கை அரசைப் பாராட்டுகிறேன்.
    மேதகு குடியரசுத் தலைவரின் பணியை எளிதாக்கிக் கொப்பளிக்கும் உணர்ச்சிகளுக்கு அணை கட்டினார்கள். மேதகு ஆளுநர்களாக இருந்த திரு அலி திரு இசுபுல்லர் இருவரும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் நடவடிக்கையாகத் தங்கள் பதவிகளை விட்டுக் கொடுத்ததைப் பாராட்டுகிறேன்.
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் எஞ்சிய கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றி மீண்டும் வளர்ச்சிப் பாதையில் மக்களைத் திசைதிருப்பிச் செல்வமும் செழிப்பும் மிக்க நாடாக இலங்கையை மாற்ற இனங்களுக்கிடையே நல்லுறவும் நல்லிணக்கமும் அன்பும் அருளும் அறனும் நிலைக்க வேண்டுகிறேன்.
    =================================================================================
    01.06.2019 அன்று மறவன்புலவு க. சச்சிதானந்தன் வெளியிட்ட முந்தைய அறிக்கை
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி அவரைக் காப்பாற்றுக.
    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவசேனை கோரிக்கை
    இலங்கை சிவபூமி. திருமூலர் அன்றே கூறினார். புத்தர்கள் சிவபூமியை மதித்து நடக்கிறார்கள் புத்த விகாரைகளில் சிவனுக்கும் இடமுண்டு சைவக் கடவுளருக்கும் இடம் உண்டு.
    400 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைகுள் வலிந்து புகுந்த கிருத்தவ மதம் சைவர்களையும் புத்தர்களையும் ஏளனம் செய்தது சைவக் கோயில்களும் புத்த விகாரங்களும் சாத்தானின் இருப்பிடங்கள் என வலிந்து கூறினர். பீரங்கி முனையில் துப்பாக்கி முனையில் வாள் முனையில் சைவர்களையும் புத்தர்களையும் கிறித்தவர்கள் ஆக்கினர்.
    இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரோடு புகுந்த முகமதியர்கள் தொடக்கத்தில் இந்த மண்ணின் மரபுகளை மதித்து உள் புகுந்தனர். படிப்படியாக மண்ணின் மரபுகளை இழித்துப் பேச தொடங்கினர் அண்மைக்காலங்களில் மிதித்து நடக்க முற்படுகின்றனர்.
    சிவ பூமியில் இருந்த காளி கோயிலை அகற்றினேன் அந்த இடத்தில் முகமதியர் வழிபாட்டிடம் கட்டினேன் மசூதி கட்டினேன் அதற்காக அமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தினேன் என்ற பொருள்பட இன்றைய கிழக்கு மாகாண ஆளுநர் இசுபுல்லர் கூறிய சொற்கள் அவர் இலங்கை அரசில் எந்தப் பதவியையும் வகிக்கத் தகுதியற்றவர் என்பதையே எடுத்துக் காட்டின.
    முசலிப் பிரிவில் சிவபூமிக்குள்ளே அடாத்தாகக் காடுகளை வெட்டி ஆயிரத்துக்கும் அதிகமான முகமதியரைக் குடியேற்றியவர் இரிசாத்தர் பதியுதீன்.
    முல்லைத்தீவில் சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவைக் கையகப்படுத்தி அங்கு முகமதியரைக் குடியேற்ற இரிசாத்தர் பதியுதீன் முனைந்த பொழுது வடமாகாண சபை தலையிட்டுத் தடுத்தது.
    சிவபூமியில் மாட்டிறைச்சிக்கடை கூடாது எனச் சைவர்கள் களம் இறங்கிய பொழுது உள்ளுராட்சி அமைப்புக்கள் தீர்மானங்கள் இயற்றிய பொழுது உள்ளூராட்சித் தலைவர்களை மிரட்டியவர் இரிசாத்தர் பதியுதீன்.
    இசுபுல்லரும் இரிசாத்தர் பதியுதீனும் அரசுப் பதவிகளில் இருப்பதால் சைவர்களுக்கு வேண்டாததைச் செய்கிறார்கள் என்ற முறைப்பாடு வடக்கே கிழக்கே மலையகத்திலே நெடுங் காலமாக உண்டு.
    கிழக்கு மாகாணச் சைவத் தமிழர்கள் ஒன்றிணைந்து இசுபுல்லர் பதவி விலக வேண்டும் என ஒரு நாள் முழுவதும் கடையடைப்பு நிகழ்த்தியதை மறக்கமுடியாது.
    கண்டியில் தலதா மாளிகையில் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் காலவரையற்ற உண்ணா நோன்பு இருக்கிறார்.
    சைவத் தமிழர்களாகிய நாங்கள் எதை இந்நாள்வரை கோரிக்கையாக வைத்திருந்தோமோ அதையே புத்தத் தேசியவாதியான வணக்கத்துக்குரிய தேரரும் வைத்திருக்கிறார் களத்தில் இறங்கி போராடுகிறார்.
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தன தேரர் பெருமானின் கோரிக்கைகளில் நியாயம் உண்டு. நீதி உண்டு.
    இலங்கை அரசு செவி சாய்க்க வேண்டும். அவரது கோரிக்கைகளை நிறைவேற்றி இலங்கைத்தீவின் மண்ணின் மரபுகள் பேணுவோரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
    வணக்கத்துக்குரிய தேரரின் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகளை எடுத்தால் இலங்கையைச் சிவபூமியாக கொண்டு வாழ்கின்ற சைவத் தமிழர்கள் இலங்கை அரசைப் பாராட்டுவார்கள்.
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் அவர்களும் அவரது அருமைத் தொண்டர்களும் புத்த தேசியத்தை முன்னெடுத்து மண்ணின் மரபைப் பேண விழைகிறார்கள்.
    இந்த வரலாற்று முயற்சியில் பத்த சிங்கள மக்களுக்கு உறுதுணையாக இந்த மண்ணின் மரபுகளைப் பாதுகாத்துப் பேணிக் காக்க விரும்புகின்ற சைவத் தமிழர்கள் இருப்பார்கள்.
    Share
  • இலங்கையில் வன்முறையின் கோரத் தாண்டவம் – Ugly face of terror in Srilanka

    (இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பையும் இதற்குக் காரணமானவர்களையும் வல்லமை கனத்த இதயத்துடன் கண்டிக்கிறது. – அண்ணாகண்ணன், முதன்மை ஆசிரியர், வல்லமை)


    St.Sebastian's Church,Katuwapitiya,Negombo,Sri Lanka

    (St.Sebastian’s Church,Katuwapitiya,Negombo,Sri Lanka)

    சிவசேனை, மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆய நகரங்களில் நடைபெற்ற வன்முறைத் தாக்குதல்களைச் சைவ சமயத்தோர் ஏற்கார், கண்டிப்பர், புறந்தள்ளுவர்.

    வழிபாட்டிடங்களில் அன்பும் அறனும் அருளும் பெருக்கும் நாளில், பெரிய வெள்ளிக்கிழமையைத் தொடர்ந்த குருத்தோலை ஞாயிறன்று 21.04.2019 அன்று எம் அன்புக்கும் பாசத்துக்கும் மதிப்புக்கும் உரிய கிறித்தவ மக்கள் மனமுருகி வழிபாட்டில் ஈடுபட்டிருக்கையில் ஒன்றும் அறியா அப்பாவிகளை நூற்றுக் கணக்கில் காயமாக்கியும் பலரின் உயிர்களைப் பறித்தும் நிகழ்த்திய தாக்குதல்களைச் சைவ மக்கள் ஒரு பொழுதும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

    நெஞ்சார்ந்த இரங்கல்கள். துயரத்தில் பங்கு கொள்கிறோம். காயமுற்றோர் விரைந்து நலமுறச் சிவபெருமான் அருள்வாராக. வழிபடுகிறோம், வேண்டுகிறோம். இரங்குகிறோம்.

    Siva Senai, Maravanpulavu K. Sachithananthan

    Violent attacks in Colombo, Negombo and Batticaloa are not acceptable to the Saivaites of Sri Lanka. We condemn these attacks outright.

    We Saiva Tamils denounce any attack in any form in places of worship. Our Christian brothers to whom we have high respect, regard and unbounded love as fellow citizens of this land. The Easter Friday followed by resurrection Sunday 21.04.2019 are days for prayer worship and meditation. To attack on such pious and holy days to harm hundreds of innocent worshippers and to take the lives of many is condemnable. Saiva Tamil world does not accept such disastrous barbarous acts. 

    We Saivites express out heart felt condolences to the bereaved families. We pray for the early recovery of those injured. We pray Lord Shiva to shower his holiest blessings towards relief at a time of your hour of deep grief.

    Share