Tag: சுந்தர்ராஜன் ஸ்ரீநிவாசன்

  • என்றும் இளமை,இனிமை – எப்படி

    சுந்தரராஜன் ஸ்ரீநிவாசன்

    எந்த வயதினரும் உடலால் மனத்தால் இளமையாக இருக்க முடியும். அதற்க்கு லேகியம் சூரணம் சாப்பிட வேண்டாம்.

    அதற்கான வழி முறைகள்:

    images (2)முதலில் எதற்கும் டென்ஷன் ஆவதை தவிர்க்க வேண்டும்.
    அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட வேலையோ அல்லது குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயம் முடிக்க வேண்டிய வேலையோ தவிர மருத்துவம் சம்பத்தப்பட்ட வேலையோ தாமதிக்க கூடாது!
    மற்றபடி இன்று நினைத்த காரியம் இன்றே இப்பொழுது நடக்க வில்லையே என்று நினைப்பது, இதை வாங்க முடியவில்லையே, அதை வாங்க முடியவில்லையே என்று நினைப்பதை தவிர்த்தல்!
    தெளிவாக நேரான பாதையில் நாம் செல்லும்போது மற்றவர் அறிவுரையோ குருக்கீடலையோ பொருட்படுத்தாமல் இருத்தல்!
    யாரிடமும் அதிகமாக பேசாதிருத்தல்! சம்பந்தமில்லாதவர்களிடம்
    தானே அறிமுகம் செய்துகொள்வது சம்பந்தமில்லாத விஷயங்கள்
    பேசுவது தவிர்க்கப்படவேண்டியது.
    தேவையற்ற இடத்தில நம்மைபற்றி பெருமை பேசுவது, அடுத்தவரை குறை கூறுவது இவற்றை தவிர்க்க வேண்டும்.
    அதிக சிந்தனையும் கற்பனையும் தவிர்க்க வேண்டும்.
    தேவைக்கு அதிகமான உணவு உண்ணாதிருத்தல் ஆனால் கண்டிப்பாக நேரத்தில் தேவையான உணவு உண்ணுதல்.
    நம்மை நேரில் புகழ்வது பின்னால் இகழ்வது இரண்டையும்பொருட்படுத்தாமல் இருத்தல்.
    வஞ்சனையற்ற உடல் உழைப்பு.
    பிறர் மனம், உடல் நோக காரணமாக நாம் இல்லாதிருத்தல்.
    நமக்கு வாழ்வில் கிடைத்த செல்வங்கள்,புகழ்ச்சி இகழ்ச்சி அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பணம் என்ற தெளிவு.

    இவை யாவும் கடை பிடித்தால் மட்டுமே நாம் என்றும் இளைமையாக இருப்பது நிச்சயம் முயற்சி திருவினையாக்கும்!

    இன்றுமுதல் முயற்சி செய்வோமே!

    Share