Tag: செந்தில்குமார்

  • சாவிற்கு முன்

    செந்தில்குமார் old-images

    சாவிற்கு முன் தெரியும் முகக்களையை தரிசித்திருக்கீற்களா?
    அப்போது தெரியும்  வாழ்வின் மகத்துவம்.
    சாகும் முகத்தின் புன்சிரிப்பை பார்த்திருக்கிறீர்களா?
    அப்போது தெரியும் அன்பின் ஆழம்.
    சாகும் நொடியில் அந்த முகத்தில் தெரியும் புரிதலை கவனித்திருக்கிறீர்களா?
    அப்போது தெரியும் அறிவின் பிதற்றல்.
    சாவை உணர்ந்துகொண்ட சந்தோஷத்தை  அனுபவித்திருக்கீற்களா?
    அப்போது புரியலாம்…..வாழ்க்கை.

    சாவை புரிந்து கொண்டதுபோல் தாத்தா முகம் இருந்தாலும்
    “இன்னும் கொஞ்சம் வாழ்விருக்காதா?” என்று
    தொக்கி நிற்கும் கேள்வி
    என்னை   புலப்படுத்தியதற்கு
    நன்றி.

    http://www.photographersdirect.com/buyers/stockphoto.asp?imageid=1131251

    Share