Tag: செம்பகம்

  • அகதியைப் போல் ஒரு பறவை – செம்போத்து

    அகதியைப் போல் ஒரு பறவை – செம்போத்து

    ராஜ கம்பீரம் உள்ள ஒரு பறவை, தமிழீழத்தின் தேசியப் பறவை, அகதியைப் போல் அலைகிறது. உணவுக்காகவும் நீருக்காகவும் அதன் தேடல் தொடர்கிறது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செம்போத்து என்கிற செம்பகம் – 2

    செம்போத்து என்கிற செம்பகம் – 2

    தமிழீழத்தின் தேசியப் பறவையான செம்போத்து என்கிற செம்பகம், அடிக்கடி விரும்பி வருகின்ற இடமாக நம் இல்லம் மாறிவிட்டது. இதோ நம் வீட்டுச் சாம்பார் சாதத்தைச் சுவைத்து மகிழ்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செம்போத்து என்கிற செம்பகம்

    செம்போத்து என்கிற செம்பகம்

    தமிழீழத்தின் தேசியப் பறவை செம்போத்து, இன்று நம் இல்லத்திற்கு வருகை தந்து, நமது எளிய உணவை ஏற்றுக்கொண்டது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செம்போத்தின் குரல்

    செம்போத்தின் குரல்

    செம்போத்தின் குரல் இதோ. குரலெழுப்பும்போது இதன் உடலே அதிர்கிறது என்பதை இன்றுதான் கண்டேன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செம்பகம், தமிழீழத்தின் தேசியப் பறவை

    செம்பகம், தமிழீழத்தின் தேசியப் பறவை

    அண்ணாகண்ணன்

    இன்று கடைக்குப் போய்விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். திடீரென்று தோன்றியது. வழக்கமான தெருவின் வழியல்லாது, பக்கத்துத் தெரு வழியாகச் செல்வோமே என்று வண்டியைத் திருப்பினேன். அந்தத் தெருவில் குகுக் குகுக் எனப் பெரிய ஒலி தொடர்ச்சியாகக் கேட்டது. அது ஒரு பறவையின் குரல். இதுவரை நான் கேட்காத குரல். வண்டியை நிறுத்திவிட்டு, பறவையைத் தேடத் தொடங்கினேன். குரல் மட்டும் நன்றாகக் கேட்டது. பறவையைக் காணவில்லை.

    முதலில் ஒன்றிரண்டு காக்கைகள் கரைந்தன. அவை இதர காக்கைகளையும் அழைத்தன. சிறிது நேரத்தில் ஏராளமான காக்கைகள் அந்தப் பகுதியில் குவிந்து கரையத் தொடங்கின.

    இறுதியில் அந்தப் பறவையைக் கண்டேன். காகம் போன்ற தோற்றத்தில் கபில நிற இறக்கைகளைக் கொண்டிருந்தது. ஜோடிப் பறவையாக வந்திருக்க வேண்டும். நான் ஒரு பறவையை மட்டும் கண்டேன். மற்றது குரல் கொடுத்துக்கொண்டிருந்தது.

    இந்தப் பறவையின் பெயர், செம்பகம். இதைத் தமிழீழத்தின் தேசியப் பறவையாகப் பிரபாகரன் பிரகடனம் செய்துள்ளார். செம்போத்து, செம்பகம், செங்காகம் (Centropus sinensis) என்ற பெயர்களைக் கொண்ட இது, குயில் வரிசையில் உள்ள பறவை. இதைச் செம்பூழ் என்று சங்க இலக்கிய நூல்களான அகநானூறும் ஐங்குறுநூறும் குறிப்பிடுகின்றன. குகுக் குகுக் என்ற செம்பகத்தின் ஒலி, மிகத் தொலைவு வரை கேட்கக் கூடியது.

     

    நாம் திட்டமிடாமலே சில செயல்கள் நிகழ்கின்றன. இன்று நான் செம்பகத்தைக் கண்டதும் அப்படி ஓர் எதிர்பாராத நிகழ்வே.

    Ref: https://ta.wikipedia.org/wiki/செம்போத்து

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share