Tag: சேலம் ருக்மணி

  • ஒளிவிளக்கு அணைந்தது!

    ஒளிவிளக்கு அணைந்தது!

    முனைவர் ஔவை நடராசன்
     
    இந்தி ஆசிரியராக வாழ்கையைத் தொடங்கி, இடர்கள் பல கடந்து, இலக்கியத் தாரகையாக மின்னித் திகழ்ந்த சேலம் ருக்மணி மறைந்ததைக் கேட்டுப் பெரிதும் வருந்தினேன் .

    ருக்மணி அவர்களின் வாழ்க்கை அமைதி அடைந்தது என்பது ஒரு வகையில் ஆறுதல் தான். அவர் வாழ்வு தியாக வாழ்வு .
    “கடல் மடை திறந்தது போல்” இலக்கிய உரைகளை – சமயப் பொழிவுகளை ஆற்றிய அவர் திறம் வியப்புக்குரியது .அண்ணா என்று வாய் மணக்க அழைத்த இலக்கியத் திலகம் ருக்மணிக்கு எந்நாளும் ஓர் ஏக்கம் மனத்தில் படர்ந்தபடியே இருந்தது .”கற்ற கல்வியைப் பெற்று மகிழும் பேற்றினைத் தமிழகம் சரியாக வழங்குவதில்லை ” என்று அடிக்கடி கூறுவார்கள் .

    காலை மலர்ந்த மலர் மாலையில் உதிர்ந்து சருகாகிறது. தன்னைப் பறிக்கவில்லையே என்று அது தளர்வதில்லை என்று நான் சொல்வதைக் கேட்டுப் புன்னைகைத்தார்கள். அது பொருத்தமான விடையென்று அவருக்குப் புலப்படாமலேயே போயிற்று .

    சேலம் தந்த செம்மனத் திலகத்துக்குக் கம்பர் கழகங்கள் பெரிதும் கடன்பட்டவை .

    தமது மேடையில் நின்று முழங்கிய நித்திலத்தை என்று காண்போம் என்று ஏங்குவது இயல்பு தான் .

     
    ==========================================
     
    சேலம் ருக்மணி உரை
     

     

     

    Share