சென்னையில் இன்று மாலை முதல் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. நூற்றுக்கணக்கான பேருந்துகள், ஆங்காங்கே சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து ஊழியர்கள் திடீர்ப் போராட்டத்தில் குதித்துள்ளனர். களத்திலிருந்து இதோ நேரடி விவரங்கள்.
கோவை நகரப் பேருந்தில் இவரைச் சந்தித்தேன். படபடவெனப் பேசிக்கொண்டு வந்தார். ஆதரவற்ற நிலையில் உள்ளார். தமிழக அரசு, இவரைக் கண்டறிந்து, முதியோர் உதவித்தொகை வழங்க ஆவன செய்ய வேண்டுகிறேன்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை உக்கடம் பெரியகுளம் ஏரி புதுப்பிக்கப்பட்டுள்ளது. கண்கவர் வடிவமைப்பு, நேர்த்தியான கட்டமைப்பு, பளிச்சிடும் ஒளி விளக்குகள் என அழகுற அமைந்துள்ளது. அதை இரவு நேரத்தில் அண்மையில் பேருந்தில் கடந்தோம். இந்த ஏரியை ஒட்டியுள்ள சாலை எந்தத் தரத்தில் உள்ளது என்பதை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.
நண்பர் சித்ரன் ரகுநாத், கோவைச் சாலைகள் குறித்து எழுதிய சிறுவர் பாடல் இப்படித் தொடங்குகிறது
கோவை என்றொரு நகருண்டு.
நகரில் சாலைகள் பலவுண்டு.
சாலைகள் முழுக்கக் குழியுண்டு.
அரசுக்கு அதனால் பழியுண்டு.
அண்மையில் கோவையில் கவுண்டம்பாளையத்திலிருந்து மாதம்பட்டி அருகில் உள்ள தென்கரை என்ற இடத்திற்குச் செல்ல (25 கி.மீ.), ஓலாவில் வாடகை மகிழுந்தை அழைத்தோம். ரூ.392 கட்டணம் காட்டியது. வந்த ஓட்டுநர், ரூ.700 கேட்டார். முடியாது என்றோம். அவரே சரி என்று ரத்து செய்துவிட்டுச் சென்றார். அடுத்தடுத்த ஓட்டுநர்களும் அதிகம் கேட்டார்கள். எனவே, பேருந்தில் செல்ல முடிவெடுத்தோம். ஆனால், கவுண்டம்பாளையத்திலிருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் செல்ல, ஓலாவில் ரூ.88 காட்டியது. வந்த ஓட்டுநர் ரூ.120 கேட்டார். வேறு வழியில்லாமல் கொடுத்தோம்.
காந்திபுரத்திலிருந்து மாதம்பட்டிக்குப் பேருந்தில் ஏறினோம். ஒருவருக்கு ரூ.15 மட்டுமே கட்டணம், 3 வயது மகனுக்குக் கட்டணம் வாங்கவில்லை. (மொத்தம் 45). மாதம்பட்டியில் இடம் சரியாகத் தெரியாமல், ஒரு நிறுத்தம் முன்னதாக இறங்கினோம். அந்த இடத்திலிருந்து தென்கரை செல்ல (7 – 8 கி.மீ.), ஆட்டோ ஓட்டுநர் ரூ.500 கேட்டார். வேண்டாம் என்று மீண்டும் பேருந்தில் ஏறினோம். இது விரைவுப் பேருந்து போலும். எங்கள் நால்வருக்கும் ஒரு நிறுத்தத்திற்கே தலா ரூ.15 கட்டணம் வசூலித்தார் (மொத்தம் ரூ.60). மாதம்பட்டியிலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய தென்கரை (5.6 கி.மீ.) என்ற ஊருக்குச் செல்ல, ஆட்டோ கட்டணம் ரூ.150. ஆக, ரூ.375 செலவில் அங்கே சென்று சேர்ந்தோம்.
இந்தப் பயணமும் நன்றாகவே இருந்தது. கோவையில் எங்கள் பேருந்துப் பயணத்தின் சில காட்சிகள் இங்கே.