Tag: மணல்வீடு மு. ஹரிகிருஷ்ணன்

  • களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்

    KALARI HERITAGE&CHARITABLE TRUST  நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா-2017


    15417793_1121692647908846_1658706594_o

    15397813_1121692674575510_361902160_o

    15417760_1121692691242175_1612764271_o

    15419423_1121692611242183_465861544_o

    15491875_1121692677908843_287836088_o

    15397813_1121692674575510_361902160_o

    15388709_1121692687908842_1295028633_o

    15419310_1121692657908845_1410269353_o

    15398846_1121692654575512_1041091113_o

    தங்கள் வரவு நல்வரவாகுக

    மு. ஹரிகிருஷ்ணன்,
    ஆசிரியர் -மணல்வீடு.

    Share
  • களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் (KALARI HERITAGE&CHARITABLE TRUST)

    மு. ஹரிகிருஷ்ணன

    அன்புடையீர் வணக்கம்

    கூத்து நமது மரபுக்கலை .ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானதும் பழமையானதும் மட்டுமல்ல தனித்ததோர் பண்பாட்டு அடையாளமும் கூட .மீள்வதற்கு அரிய வறுமையில் உழன்று வாழ நேர்ந்தாலும் நிலை பிறழாது நிகழ்த்துதல் வழி ஒப்பற்ற கலைகளை பற்றி உயிர் கொடுத்து வளர்த்து வருகிறார்கள் நம் சகோதரர்கள் .

    இவ்வரசியல் பூதலத்தில் தொல்கலைஞர்கள் வாழ்வாதாரம் உயரும்படியான பொருளாதார சூழலை உருவாக்குவது உரிய அங்கீகாரம் வழங்குவது அவர்களை இனங்கண்டு பாராட்டுவது ஊக்குவிப்பது சமதையான வாய்ப்பளிப்பது மேலும் இவற்றின் மூலம் கலைகளை மீட்டெடுப்பதுடன் அதன் தொன்மம் மாறாது பாரம்பரியம் வழுவாது எதிர்கால சந்ததிகளிடம் அவற்றை கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது .

    மேற்சென்ன களப்பணிகளில் கடந்த 10 ஆண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும்களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் நிகழ்த்து கலைஞர்களை எழுத்துக்கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக மக்கள் கலையிலக்கிய விழாவை எதிர் வரும்2017 ஜனவரி மாதம் முதல் நாள் சேலம் மாவட்டம் , மேட்டூர் வட்டம் , ஏர்வாடி கிராமத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது . ஆகவே தாங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்

    இப்படிக்கு,

    மு. ஹரிகிருஷ்ணன்,
    ஆசிரியர் -மணல்வீடு.

    (நிகழ்வு நிரல் மாற்றத்திற்கு உட்பட்டது )

    களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
    (KALARI HERITAGE&CHARITABLE TRUST )

    நிகழ்த்தும் மக்கள் கலையிலக்கிய விழா
    இடம்-ஏர்வாடி,குட்டப்பட்டி- அஞ்சல்,மேட்டூர்-வட்டம், சேலம்-மாவட்டம்-636453
    நாள் -01-01-2017

    அமர்வு-1- பிற்பகல்-3-00 மணி

    களரி கூட்டல்..தில்லையம்பல நடராஜர் நாடக சபா-அம்மாபேட்டை

    அமர்வு-2- பிற்பகல் 3-30 மணி

    மணல்வீடு இலக்கிய வட்டம் வழங்கும் எழுத்தாளர்
    கு .அழகிரிசாமி இலக்கிய விருது

    பெறுபவர் -எழுத்தாளர் -ஷோபா சக்தி

    படைப்பும் படைப்பாளரும் -லக்ஷுமி மணிவண்ணன்

    மணல்வீடு இலக்கிய வட்டம் வழங்கும் எழுத்தாளர்
    ராஜம் கிருஷ்ணன் இலக்கிய விருது

    பெறுபவர் -எழுத்தாளர் -பெருந்தேவி

    படைப்பும் படைப்பாளரும் -க .பஞ்சாங்கம்

    அமர்வு-3 பிற்பகல் 4 மணி

    நூல் வெளியீடு

    அங்குசம் – கவிதைப் பிரதி- தவசிக்கருப்புசாமி

    இசையோடு வாழ்பவன் -கவிதைப் பிரதி-சு ,வெங்குட்டுவன்

    எறவானம் -கவிதைப் பிரதி-வினையன்

    அமர்வு -4-மாலை 5 மணிக்கு – கலைஞர் பெருமக்களுக்கு விருது -பரிசு-பாராட்டு -கௌரவிப்பு

    கூத்துக்கலைஞர்- அமரர் க.ராஜு நினைவு விருது பெறுபவர்

    இளவல் -சீனிவாசன் – கூத்துக்கலைஞர் -கோழிக்காட்டானூர்

    அமரர் துரைசாமி வாத்தியார் நினைவு விருது

    முனுசாமி -மிருதங்கக்கலைஞர் -பள்ளிப்பட்டி

    தேவநாதன் -மிருதங்கக்கலைஞர்-சீராகாப்பாடி

    அமரர் குரும்பனூர் காளி வாத்தியார் நினைவு விருது
    .
    தங்கவேல் -கூத்துக்கலைஞர் -துத்திபாளையம்

    செல்லமுத்து – கூத்துக்கலைஞர்- மோர்பாளையம்

    கணேசன் – கூத்துக்கலைஞர்-மாணிக்கம்பட்டி

    அர்ச்சுனன் -கூத்துக்கலைஞர் -தானாபதியூர்

    வீரப்பன் -கூத்துக்கலைஞர் -சிகரல அள்ளி

    அமரர் சடையன் வாத்தியார் நினைவு விருது

    செல்லப்பன் -கூத்துக்கலைஞர் –அம்மாபேட்டை

    நிகழ்வில்

    நவீன ஓவியம் -படைப்புலகு-நிகழ் கலை மற்றும் நாடக ஆளுமைகள்

    நிகழ்வு தொகுப்பு
    நறுமுகை -வெய்யில்
    நன்றியுரை-மு.ஹரிகிருஷ்ணன்
    ——————————————————————————–
    அமர்வு-5-மாலை -7-00மணி
    பரதன் பாதுகா பட்டாபிஷேகம் -தோல்பதுமைக் கூத்து
    வழங்குபவர்-கணேசன் -அம்மாபேட்டை
    உதவி-ரமேஷ்-அம்மாபேட்டை
    மிருதங்கம்-நடராஜன்-அம்மாபேட்டை
    முகவீணை -குமார்-மணியாரன் கொட்டாய்
    ஹார்மோனியம் – தருமன்-அம்மாபேட்டை
    ———————————————————————————
    8 மணிக்கு-இரவு உணவு

    அமர்வு-6 இரவு-9-00 மணி
    பாரதத்தில் பதிமூன்றாம் நாள் யுத்தம் -கூத்து
    தில்லையம்பல நடராஜர் நாடக சபா-அம்மாபேட்டை

    சிறப்பு செய்வோர்

    பெருமைக்குரிய வாத்தியார்கள் -மதிப்பிற்குரிய படைப்பாளர்கள்

    நிகழ்விடம்

    சேலம் -மேட்டூர் பிரதான சாலையில் பொட்டனேரி நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது

    தொடர்புக்கு
    இர.தனபால்
    அறங்காவலர்
    9677520060
    9894605371

    நிகழ்ச்சி ஏற்பாடு
    களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
    (KALARI HERITAGE&CHARITABLE TRUST)

    Share