Tag: ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்

  • சோதனைகள் விலக சுதர்சன ஹோமம் நடைபெற்றது

    தன்வந்திரி பீடத்தில்

    சோதனைகள் விலக

    சுதர்சன ஹோமம் நடைபெற்றது

     

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், இன்று 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை த்ருஷ்டி உபாதைகள், சத்ரு உபாதைகள் விலகவும், வியாபார அபிவிருத்திக்கும் சுபிட்சங்கள் பலபெற்று வளமுடன் வாழவும், ஸ்ரீ சுதர்சன மஹா யாகம் நடைபெற்றது.

    ஸ்ரீ சுதர்ஸன மஹாவிஷ்ணுவை வேண்டி இந்த யாகத்தில் நாயுருவி, வெள்ளை எள்ளு, வெண் கடுகு, சர்க்கரைப்பொங்கல், நெய், குங்குமப்பூ, கருநொச்சி, இருமுள், நீலஊமத்தம்பூ, வெள்ளைப் பூக்கள், பலாசு, அருகம்புல், தேன், குங்கிலியம், பலவகையான மூலிகைகள், பட்டு வஸ்திரங்கள், முதலிய த்ரவியங்கள் சேர்கப்பட்டது. மேலும் யாகத்தில் வைத்து பூஜித்த வெண்ணையை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது.

    மேற்கண்ட யாகத்தில் தொழில், வியாபாரம், உத்யோகத்தில் உயர்வு, சத்ருபாதை விலக நம்மை சூழ்ந்துள்ள தீய சக்திகள் அகல வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவதற்கும், பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்களில் இருந்து விடுபடவும், நற்சம்பத்துக்கள் பெறவும், சுக பிரசவம் நடைபெறவும், தடைகள் விலகவும், பசுக்கள் விருத்தி அடையவும், மன நலம் குணமாகவும், தீராத நோய்கள் தீரவும், கோபங்கள் தனியவும், சாபங்கள் விலகவும், பிறரிடம் அன்பு ஏற்படவும் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த யாகத்தில் சென்னை மெட் இந்தியா மருத்துவமனை பிரபல மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் T.S. சந்திரசேகர் அவர்கள் குடும்பத்தினர்களுடன் பங்கேற்று, ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர். இதனை தொடர்ந்து ஸ்ரீ சுதர்சனாழ்வாருக்கு நவகலச திருமஞ்சனமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • கவலைகள் நீக்கும் கணபதி யாகம்

    வருகிற 28.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில்

    தன்வந்திரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு

    கவலைகள் நீக்கும் கணபதி யாகம்

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 28.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் உலக நலன் கருதி “கவலைகள் நீக்கும் கணபதி யாகம்” நடைபெறுகிறது.

    32 கணபதியின் பெயர்கள்:

    நாம் காலம் காலமாக நமக்கு தெரிந்த 32 கணபதியை வழிபட்டு வருகிறோம். மேலும் 33 ஆவது கணபதி கண்திருஷ்டி கணபதியையும் வழிபட்டு வருகிறோம். அவை முறையே பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி, ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ருணமோசன கணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி, த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி என்பவை ஆகும்.

    ஹோமங்களின் சிறப்பு :

    பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு. நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள்.

    நமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர். பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் எளிதான முறையில் அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களை வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இந்திராய ஸ்வாஹா… என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை. அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும் கருணை. இது, மனிதர்கள் தாங்கள் தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும் பல்வேறு சக்திகள் இயக்கியும், இயங்கியபடியும் உள்ளன என்பதன் சூட்சுமமும் உள்ளது. எனவே, இன்ன ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே தீருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கணபதி ஹோமத்தின் சிறப்பு :

    ஹோமங்களில் முதன்மையானதுதான் கணபதி ஹோமம். தனக்கு மேல் எந்த நாயகரும் இல்லாததாலேயே அவருக்கு வி – நாயகர் அதாவது விநாயகர் என்று பெயர். எனவே அவரே ஆதிநாயகரும் ஆவார். தேவர்களிலிருந்து மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர். அப்படி தொழாது திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட ஈசனின் தேர் அச்சாணியை விநாயகர் உடைத்தார். தேரே ஸ்தம்பித்து நிற்கும்போது ஈசன் விநாயகரை வணங்காது புறப்பட்டுவிட்டதை உணர்ந்தார்.

    கணபதி ஹோமம் என்பது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. மக்கள் அனைவரும் எந்த செயலை தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் வீடுகளில் கிரகப்பிரவேசம் நடைபெறும் பொழுது கணபதி ஹோமம் செய்து, புதுமனை புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும்போதும் கூட பிள்ளையார்சுழியுடன் துவங்குவது இந்துக்களின் மரபு .

    கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஜபம் செய்து, அவரை ஆராதித்து, மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்வது உத்தமம். மேலும் புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் ஹோமம் அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்து மிகச்சிறந்த பலனை பெறலாம்.

    மகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. அது நம் புத்தி, மனம், உடல் என்று சகல இடங்களுக்கும் பாயும். செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும். ஆகவே, கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கணபதி ஹோமத்தை, வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் யாகத்தில் அனைவரும் கலந்துகொண்டு கவலைகள் நீங்கவும், கஷ்டங்கள் விலகவும், கர்மவினை, ஊழ்வினை அகலவும், காரியங்களில் வெற்றி பெறவும் மஹா கணபதியை வணங்கி வாழ்வில் நலம் பெறுவோம்.

    இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், அஷ்ட திரவியங்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

    Web: www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in

    Email: danvantripeedam@gmail.com

    Share
  • முன்னாள் தமிழக முதலமைச்சர், டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை

    ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

    முன்னாள் தமிழக முதலமைச்சர்,

    டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி

    தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர், டாக்டர் கலைஞர். மு. கருணாநிதி அவர்கள் தமிழகத்தில் 5 முறை முதலமைச்சர் ஆகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகவும் இருந்தவர்.

    தெளிவான சிந்தனை கொண்ட மாபெரும் தலைவர், தமிழுக்கும் தமிழின மக்களுக்கும் பெருமை சேர்த்தவரும், தமிழ் மொழியை உலகறிய செய்தவர், அரசியல், சினிமா, இலக்கியம், அனைத்திலும் ஈடுபாடு கொண்டு எண்ணற்ற சாதனைகள் படைத்தவர். இவர் நேற்று மாலை 6.10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவ மனையில் மரணமடைந்தார். அவருடைய ஆத்மா சாந்தி அடையவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவினர்கள், கழக நிர்வாகிகள், உடன் பிறப்புகள், தொண்டர்கள், விசுவாசிகள் மன அமைதி பெறவும் தன்வந்திரி பீடத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Blessings from Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal
    FOUNDER
    Sri Danvantri Arogya Peedam,
    04172-230033, 0944330203,
    ” நோயற்று வாழட்டும் உலகு “

    Share
  • ருண – ரோக – சத்ரு தொல்லை நீக்கும் சுவாதி ஹோமம் எனும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம்

     

    மன நோய் நீங்கவும், மாந்திரீக தொல்லைகளில் இருந்து விடுபடவும், புத்தி சுவாதீனம் தெளியவும், சித்தப்ரம்மை விலகவும், கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறவும், எதிரிகள் பயம் அகலவும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 06.03.2018 செவ்வாய் கிழமை ருண – ரோக – சத்ரு தொல்லை நீக்கும் சுவாதி ஹோமம் எனும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம்.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற 06.03.2018 செவ்வாய் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, மாசி சுவாதி நக்ஷத்திரம் மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்வாதி ஹோமம் என்கிற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மருக்கு நவ கலச திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து மன நோய் நீங்கவும், மாந்திரீக தொல்லைகளில் இருந்து விடுபடவும், புத்தி சுவாதீனம் தெளியவும், சித்தப்ரம்மை விலகவும், கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறவும், எதிரிகள் பயம் அகலவும், போன்ற பல்வேறு தோஷங்களுக்காக, மேற்கண்ட யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்க்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி பகவான், ஸ்ரீ சக்கிரத்தாழ்வார் சன்னதிகளில் வைத்து பூஜித்த விசேஷ பிரசாதம் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வழங்கி ஆசீர்வதிக்க உள்ளார். ருண ரோக சத்ரு நாசினியான

    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் சிறப்பு:

    வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்தவரும், மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும் ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும் மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹரை வணங்கி அருள்பெற மேற்கண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் யாகமும் சிறப்பு வழிபாடும் புஷ்பார்ச்சனையும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு:
    ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
    ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
    வாலாஜாபேட்டை – 632 513. வேலூர் மாவட்டம்.
    போன்: 04172 & 230033, மொபைல்: 94433 30203,
    Web : www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in
    E-Mail: danvantripeedam@gmail.com

    Share