Tag: Sparrow

  • ஸ்பாரோ இலக்கிய விருது 2019 அறிவிப்பு

    ஸ்பாரோ இலக்கிய விருது 2019 அறிவிப்பு

    ANNOUNCING SPARROW LITERARY AWARD 2019
    (Instituted by R Thyagarajan, Founder, Sri Ram Groups)

    The SPARROW panel of judges (D I Aravindan, Ambai, Dr Charanjeet Kaur) took up the genre of poetry this year for consideration for the SPARROW-R THYAGARAJAN Literary Award 2019. Two awards are normally given for Tamil writers and one for a non-Tamil writer. In Tamil, one award is for acknowledging and honouring a writer who has been in the field for many years and another award is for a younger writer for literary work done in the recent past. The SPARROW-R Thyagarajan Literary Award 2019 for Tamil will go to Yuvan Chandrasekhar for his significant contribution to poetry and Geetha Sukumaran for the promising work she has done in the genre of poetry. This year for the non-Tamil award the language chosen was Punjabi. Simrat Gagan who has made a place for herself in Punjabi literature with the depth and sensitivity of her poetry, has been chosen for this award this year. The writers have honoured SPARROW and the panel by accepting the award. The award function will be sometime in the third week of December this year.

    ஸ்பாரோ இலக்கிய விருது 2019 அறிவிப்பு

    ஸ்பாரோ-ஆர். தியாகராஜன் இலக்கிய விருது தேர்வுக் குழு (டி. ஐ. அரவிந்தன், அம்பை, டாக்டர். சரஞ்சித் கௌர்) இந்த ஆண்டு கவிதை வகைமையைக் எடுத்துக்கொண்டது. தமிழில் இரு விருதுகளும் வேறு மொழிகளில் ஒரு விருதும் வழக்கமாக வழங்கப்படுகின்றன. தமிழில் ஒரு விருது இலக்கியத்துக்குப் பல ஆண்டுகளாகக் கணிசமானப் பங்களித்த ஓர் எழுத்தாளருக்கும் இன்னொரு விருது சிறப்பான எழுத்தை வழங்கியுள்ள இளம் எழுத்தாளருக்கும் என்று வழங்கப்படுகிறது. ஸ்பாரோ-ஆர். தியாகராஜன் விருது 2019 தமிழில் கவிதை வகைமைக்குச் சிறப்பைச் சேர்த்த யுவன் சந்திரசேகரின் பல்லாண்டுக் கவிதைப் பங்களிப்புக்கும் மிகவும் நம்பிக்கையூட்டும் வகையில் கவிதை எழுதிவரும் கீதா சுகுமாரனுக்கும் வழங்கப்படுகின்றன. வேற்றுமொழி விருதுக்கு இந்த ஆண்டு பஞ்சாபி மொழி தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆழமும் நுன்னுணர்வும் கூடிய கவிதைகளை எழுதி பஞ்சாபி மொழி இலக்கியத்தில் தனக்கென இடம் அமைத்துக்கொண்டிருக்கும் ஸிம்ரத் ககனுக்கு இந்த ஆண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. அனைத்து எழுத்தாளர்களும் விருதுகளை ஏற்று ஸ்பாரோவையும் தேர்வுக் குழுவையும் கௌரவப்படுத்தியுள்ளார்கள். விருது விழா இந்த ஆண்டு டிசம்பர் மூன்றாம் வாரம் நடைபெறும்.

    Poems of Yuvan Chandrasekar
    யுவன் கவிதைகள்

    கொண்டுவந்த கடல்

    இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்
    சென்ற முறை சிப்பி.
    அதற்கு முன்னால் சோழி
    பாலிதீன் பைகளில்
    செதில் கலந்த மணலும்,
    கரைக்கோயில் குங்குமமும்
    கொண்டு வந்ததுண்டு.
    ஒரு முறைகூட
    கடலின் பரிதவிப்பை
    பரிவை ஆறுதலை
    கொண்டு வர முடிந்ததில்லை.
    சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு
    பாதியாகிச்
    செத்துக் கிடக்கிறது அலமாரியில்.

    The Sea That I Brought

    I got a conch this time
    Last time it was a shell.
    Before that it was a cowrie
    I have also brought in polythene bags
    Sand mixed with fish scales
    And vermillion powder of the shore temple
    Not a single time
    Have I been able to bring
    The desperation of the sea
    Nor its care or its comfort.
    The baby sea that I brought in a bottle
    Has half dried up and died
    In the cupboard.

    கிளியென்று சொன்னால்
    பறவையைக் குறிக்கலாம்
    பச்சையைக்
    குறிக்கலாம்.
    மூக்கைக் குறிக்கலாம்
    பெண்ணைக் குறிக்கலாம்
    கூண்டுச் சிறையைக் குறிக்கலாம்
    சமயத்தில் அது
    கிளியையும் குறிக்கலாம்

    When you say a parrot
    It may mean the bird
    Or the colour green
    Or the nose
    Or a woman
    Or a prison of a cage
    Sometimes
    It may even mean a parrot.

    Geetha Sukumaran’s Poem
    கீதா சுகுமாரனின் கவிதை

    பெண் மொழி

    மொழியைப் பதியவென்று
    மலைசூழ் இடமோ
    கடல்புறமோ
    ஒரு துளி வாட்காவோ
    சிலிர்க்குமிசையோ
    அல்லது
    குறைந்தபட்சம் ஒரு
    மேசை நாற்காலியோ
    எதுவுமில்லையென்றாலும்
    தெருவோரம் அழும் பிள்ளையில்
    விசிறி எறியப்பட்ட கிழங்கின் சதையில்
    கழிப்பறை சுத்தம் செய்யும்
    அமிலத்தில்
    அகாலத்தில்
    எங்கும் எதொனொடும்
    எதனையும் தகர்த்தெழும்
    சேறு பூசி உதிரம் நிறைத்து
    கொதிக்கும் உலை
    உலோகமும் வேரும் கல்லும் தோலும்
    மணத்து
    எல்லா நாவுகளையும்
    விழுங்கிப் பிளிரும்
    ஆதிகுகை முன்னோளின்
    ஓசை
    காதுகள் கூடத் தேவையிரா

    Women’s Language

    To inscribe a language
    Even if there is no
    place surrounded by mountains
    Seaside
    A drop of vodka
    Or at least
    a table or a chair
    In the child crying in the corner of the street
    In the flesh of the root thrown away
    In the acid used
    to clean toilets
    In time that is not bound
    Everywhere with anything
    It will rise
    Demolishing anything
    Smeared with slush and
    Filled with blood
    Water boiling in the pot
    Smell of metal, roots, stone and skin
    The sound of the scream of the
    ancestral woman of the caves
    that has swallowed all tongues
    You don’t even need to hear.

    Simrat Gagan’s Poem
    ஸிம்ரத் ககனின் கவிதை

    Maa jadon tere ander meri khushboo bhari si
    Sabh toh pehlen tu hi tan dari si
    Main sash hi tan lei rahi si
    Main saah hi tan laina chauhndi si
    Hauli hauli sirjana si main ik biggha jeha rishta
    Sun tan laindi Ikk var Apni channo di aahat
    Main tere pichhle janam di kamai saan
    Jo koi janman da safar tei karke teri kukhe aai saan
    Tuhadi tan marzi si majboori nahin si
    Do guddian lai ke main khedadi rehna si
    Tainu kamm ch rujhi nu vekhdi rehna si.

    My mother! When I filled your being with my fragrance,
    You were the first to feel frightened.
    I was simply breathing
    And I simply wanted to keep breathing.
    I had to create with you a warm relation,
    slowly and steadily.
    At least, you should have heard the sound
    of my footsteps.
    I was the fruit of your earlier lives that
    meandered its way into your womb
    Through several lives.
    It was your will, no coercion.
    I was but to keep playing with a pair of dolls
    And watch you engaged in your work.

    Translated by Sidhu Damdami

    அம்மா!
    உன்னை நான் என் நறுமணத்தால் நிரப்பிய போது
    பயந்துபோனது முதலில் நீதான்.
    நான் வெறும் மூச்சாகத்தான் இருந்தேன்
    என் பாட்டுக்கு மூச்சு விட்டபடி இருக்கத்தான் விரும்பினேன்
    உன்னுடன் ஒரு வெதுவெதுப்பான உறவை
    நிதானமாக, தொடர்ந்து கொள்ள விரும்பினேன்
    என் காலடி ஓசையையாவது நீ கேட்டிருக்க வேண்டாமா?
    உன் கடந்த சன்மங்களின் பலன் நான்
    பல சன்மங்களைக் கடந்து
    உன் கருப்பையைத் தேடி அலைந்து வந்தவள்
    உன் விருப்பம்தான் இது
    யாரும் உன்னை வற்புறுத்தவில்லை
    நீ வேலை செய்வதைப் பார்த்தபடி
    இரண்டு பொம்மைகளுடன் நான் விளையாடிக்கொண்டு இருந்திருப்பேனே?

    Share