எஸ்,வி.வேணுகோபாலன்

என்னைப் பற்றி என்ன சொல்ல.... ஓர் எளிமையான வாசகர். உணர்ச்சி ஜீவி. தாம் இன்புறும் வாசிப்பை இதர வாசக உலகு இன்புற வைத்து அதன் பின்னூட்டம் கிடைக்கப் பெறாவிட்டாலும் நெகிழ்ச்சியுற தொடர்ந்து பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் ஓர் உணர்ச்சி ஜீவி. வங்கி ஊழியர். கவிதைகளில்தான் புறப்பட்டது எனது படைப்புலகமும். எழுதுவதை விடவும் வாசிப்பது, கேட்பது, பார்ப்பது, பகிர்வது பிடித்திருக்கிறது. ஆனாலும் எழுதுவதை விடாமல் பிடித்து வைத்திருக்கிறது இந்தக் கணினி எழுதுகோல். அற்புதமான போராளி எனது வாழ்க்கை இணை தோழர் ராஜேஸ்வரி. சுவாரசியமிக்க குழந்தைகளில் மூத்தவர் கட்டிடவியல் மூன்றாமாண்டு மாணவி. இளையவர் ஏழாம் வகுப்பில். இந்து, நந்தா இருவருக்குமே ஓவியம், கவிதை,பாடல்கள் ரசிப்பது மிகவும் பிடிக்கும். இந்து எழுதிய முதல் ஆங்கிலக் கவிதை அவள் நான்காம் வகுப்பில் இருக்கையில் ஹிந்து யங் வேர்ல்ட் இணைப்பில் இடம் பெற்றது. நந்தாவின் முதல் தமிழ் கவிதை அவன் மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது அவன் சொல்லச் சொல்ல நான் எழுதியது, துளிர் இதழில் வெளியானது. படைப்புலகம் இருக்கட்டும். அவர்களுக்கான நேரம் மறுக்கப்படும்போது அவர்கள் என்னை ஈவிரக்கமின்றித் தாக்கும்போது என்னைவிட அதிகம் காயம் சுமப்பது எனது எழுத்துக்கள்தான்....அது தான் என்னை எழுதவும் தூண்டுவது. என்னை மனிதனாகத் தகவும் அமைப்பது...

சுதந்திர தின நினைவோட்டங்க​ள்……..​……..

  எஸ் வி வேணுகோபாலன் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கட்டும் என்று கொட்டு முரசு!   ஓசூர் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க இந்த ஜூலை மாதம் 25ம் தேதி...

இசைபட வாழ்தல்

மெட்டுக்கு நான் அடிமை எஸ் வி வேணுகோபாலன் 'காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும், பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்' என்றார் மகாகவி. 'பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்'...