கவிநயா

தீபாவளியும் வந்தது;
திக்கெட்டும் ஒளி தந்தது!
பரவசம் நெஞ்சில் வந்தது;
பலப்பல இன்பம் தந்தது!

காலையில் எல்லோரும் கேட்கும் கேள்வி,
‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’
களிப்புடன் அனைவரும் சொல்லும் பதில்தான்
‘கங்கா ஸ்நானம் ஆச்சே!’

‘பளபள’ வென்று புத்தாடை அணிவோம்!
‘படபட’ வென்று பட்டாசு வெடிப்போம்!
பலப்பல ருசியுடன் பலகாரம் தின்போம்!
பக்கத்தில் எல்லோர்க்கும் பகிர்ந்தே உண்போம்!

தீமைக் குணங்கள் யாவும் அழிப்போம்!
நற்குணங்களையே போற்றி வளர்ப்போம்!
இருளை அழிப்போம்; துன்பம் ஒழிப்போம்!
அன்பெனும் ஒளியை அனைவர்க்கும் அளிப்போம்!

 

 

2 thoughts on “அன்பெனும் ஒளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *