நேசத்தின் ஒளி தீபத்தின் வழி

0

 

சிந்தட்டும் நேசத்தின் ஒளி
சீராக எம் தீபத்தின் வழி
சிறக்கட்டும் தீபாவளித் திருநாள்
சிரிக்கட்டும் இல்லங்கள் அனைத்துமே
நேற்றோடு போகட்டும் எம் சோகங்கள்
இன்றோடு மாறட்டும் நம் காலங்கள்
நாளையோடு பிறந்திடும் நல் வாழ்க்கை
நேசத்தின் துணை கொண்டு வாழுவோம்
தீபங்கள் ஏறட்டும் இல்லங்கள் தோறும்
தீமைகள் கருகட்டும் அவைதரும் ஒளியில்
இருளைத் தனக்குள்ளே விழுங்கிடும் சிறு விளக்கு
இல்லாமல் அதுபோல மறையட்டும் இல்லாமை
ஏர் கொண்டு உழுதிடும் தோழனும்
நீர் சிந்தி உழைத்திடும் நண்பரும்
சீர் கொண்டு வாழ்ந்திடும் யாவரும்
சோறுண்டு வாழ்ந்திடும் நிலை வரட்டும்
நரகாசூரன் என்றொரு அரக்கன்
அழிந்தான் என்பது நாமறிந்த இதிகாசம்
அகம்பாவம் எனும் அரக்கனை அழித்திடும்
அன்புக்கோர் தினமிது என்றே ஏற்றிடுவோம்
ஏன் இந்த விழா ? எதற்கிந்த கோலாகலம் ?
என்றெல்லாம் வினாக்களை விடுக்காது
உழைந்திடும் மனங்களின் சோர்வினை விலக்கிட‌
உதித்த ஓர் தினமென உரக்கச் சொல்லி வாழ்த்துவோம்
அன்பினிய சொந்தங்களை அனைத்திற்கும்
அன்னை தமிழின் ஆசி வேண்டி
அன்பாகப் பொழிகிறோம் வாழ்த்துக்கள்
வாழிய ! வாழிய ! சிறப்புடன்
அன்பினிய தீபாவளி வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்தி

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *