சுதந்திரக் கவித்துளிகள்

மு.முருகேஷ்

கையைக் கட்டி,வாயைப் பொத்தி
அமைதியாய் நடந்தது…
பள்ளியில் சுதந்திர விழா.
0
பறந்தது கொடி
குழந்தையின்  நினைவில்
கிழிசல் ஆடை.
0
துப்பிய இனிப்பை
சூழ்ந்து மொய்த்தன…
எறும்புகள்.
0
தேசியகீதம்
கலந்தே ஒலிக்கிறது…
தியாகத்தின் குரல்.
0
தடியடி, குண்டாந்தடி
எதுவுமே அறியாத
சுதந்திர இளைஞன்.
0
சுதந்திரம் வேண்டும்
புகைப்படத்திலிருந்து ஒலிக்கும்
தியாகிகளின் குரல்.

படத்துக்கு நன்றி

  http://ssr.intnet.mu/london_days.htm

2 thoughts on “சுதந்திரக் கவித்துளிகள்

  1. காசி ஆனந்தனின் நறுக்குகளை ஞாபகமூட்டுகிறது தங்கள் கவித் துளிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *